Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
உலக வரலாற்றை மாற்றிய சக்தி வாய்ந்த பெண்கள்... இந்த லிஸ்டில் இருக்கும் அந்த இந்திய பெண் யார் தெரியுமா?
பல சக்திவாய்ந்த பெண்கள் தங்கள் புத்திசாலித்தனம், வலிமை, ஆர்வம் மற்றும் தலைமைப் பண்புகளால் வரலாற்றின் போக்கையே மாற்றியுள்ளனர்.
பல சக்திவாய்ந்த பெண்கள் தங்கள் புத்திசாலித்தனம், வலிமை, ஆர்வம் மற்றும் தலைமைப் பண்புகளால் வரலாற்றின் போக்கையே மாற்றியுள்ளனர். அவர்கள் அந்த காலத்தில் ஆண் தலைவர்களுக்கு சவால் விட்டனர், நீடித்த சீர்திருத்தங்களைச் செய்துள்ளனர், மேலும் பலர் பல தசாப்தங்களாக தங்கள் நாடுகளில் தலைமை தாங்கி, செழிப்பு மற்றும் கலாச்சார புரட்சிகளுக்கு வழிவகுத்தனர்.

வரலாறு முழுவதும் பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளையும், அநீதிகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்திலேயே இந்த பெண்கள் அடக்குமுறைகளை உடைத்து வரலாற்றை மாற்றியமைத்தனர். இவர்கள் வரலாற்றில் பெண்களின் உரிமை மற்றும் போராட்டத்திற்கான அடையாளமாக மாறினர். இந்த பதிவில் வரலாற்றை மாற்றிய சில பெண்களைப் பற்றி பார்க்கலாம்.

ஜெனோபியா(240-275)
ஜெனோபியா 3 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் அதிகாரத்திற்கு சவால் செய்த சிரியாவில் உள்ள பால்மிரீன் பேரரசின் ராணியாவார். அவர் எகிப்து, அனடோலியா, லெபனான் மற்றும் ரோமன் யூதேயாவைக் கைப்பற்றினார், இறுதியாக ரோமானிய பேரரசர் ஆரேலியனால் தோற்கடிக்கப்பட்டார்.

கிளியோபாட்ரா (கிமு 69-30)
உலக வரலாற்றில் கிளியோபாட்ராவின் பெயர் தவிர்க்க முடியாதது. டோலமிக் எகிப்தின் கடைசி பாரோ ஆவார், அவர் தனது சிறந்த புத்திசாலித்தனத்திற்கும் அதன் நாட்டின் நிலை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தியதற்கும் பெயர் பெற்றவர். ரோமானியத் தலைவர்களான ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோருடனான காதல் விவகாரங்கள் அவருக்கு வரலாற்றில் நிரந்தர இடத்தை பெற்றுத்தந்தது.

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)
ஜோன் ஆஃப் ஆர்க் ஒரு பிரெஞ்சு மக்களுக்கு ஒரு கதாநாயகி மற்றும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஒரு புனிதர். அவர் ஆர்லியன்ஸ் போரில் ஆங்கிலேயர்களைத் தோற்கடிக்க பிரெஞ்சுப் படைகளைத் திரட்டினார். இறுதியில் ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். ஆங்கிலப் படையெடுப்பில் இருந்து பிரெஞ்சுக்காரர்களை விடுவிப்பதில் அவரது அசைக்க முடியாத நம்பிக்கையும், பங்கும் ஜோன் ஆஃப் ஆர்க்-க்கு அழிக்க முடியாத அந்தஸ்தைப் பெற்றுத்தந்துள்ளது.

போர்டே உஜின் (1161-1230)
போர்டே உஜின் செங்கிஸ் கானின் மனைவி மற்றும் வரலாற்றில் மிகப்பெரிய நிலப் பேரரசான மங்கோலியப் பேரரசின் அரசி ஆவார். அவர் செங்கிஸ் கானின் மிகவும் நம்பகமான ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் அவர் போரில் இருந்து விலகி இருந்த நீண்ட காலங்களில் மங்கோலிய தாயகத்தை ஆட்சி செய்தார்.

இந்திரா காந்தி (1917 - 1984)
இந்திரா காந்தி இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதம மந்திரி ஆவார், 1966-1984 க்கு இடையில் 4 முறை பதவி வகித்தார், அவர் தனது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஒரு சர்ச்சைக்குரிய ஆனால் மிகவும் சக்திவாய்ந்த நபராக இருந்தார், பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றார், இதன் விளைவாக வங்காளதேசம் உருவானது.

மார்கரெட் தாட்சர் (1925-2013)
மார்கரெட் தாட்சர் 1979 மற்றும் 1990 க்கு இடையில் யுனைடெட் கிங்டமின் பிரதமராக இருந்தார், இந்த பதவியை வகித்த முதல் பெண்மணி ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட காலம் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த அவர், அவரது கடினத் தன்மைக்காக சோவியத்துகளால் "இரும்புப் பெண்மணி" என்று அழைக்கப்பட்டார். அவர் 1982 பால்க்லாந்து போரில் அர்ஜென்டினா மீது போர்தொடுத்து பெரிய வெற்றியைப் பெற்றார், ஆனால் அவரது பொருளாதாரக் கொள்கைகள் கலவையான ஆதரவைப் பெற்றன.

தியோடோரா (500-548)
தியோடோரா பைசண்டைன் பேரரசின் மிகவும் செல்வாக்கு மிக்க பேரரசி மற்றும் கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் துறவி ஆவார். பேரரசர் முதலாம் ஜஸ்டினியை மணந்தார், அவர் அவருடைய மிகவும் நம்பகமான ஆலோசகராக இருந்தார் மற்றும் அவரது நோக்கங்களை அடைய அவரைப் பயன்படுத்தினார். அவர் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சட்டங்களை கட்டுப்படுத்தினார், வன்முறை மூலம் கலவரங்களைக் கட்டுப்படுத்தினார், குறிப்பாக, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடினார், ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டங்களை இயற்றினார் மற்றும் விவாகரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தினார்.

விக்டோரியா மகாராணி (1819-1901)
விக்டோரியா மகாராணி ஐக்கிய இராச்சியத்தின் ராணி ஆவார், அவர் 63 ஆண்டுகளாக ஆறு கண்டங்களில் பரவியிருந்த ஒரு பரந்த பிரிட்டிஷ் பேரரசின் மீது ஆட்சி செய்தார். அவரது ஆட்சி மிகவும் உறுதியானது, அந்தக் காலம் "விக்டோரியன் சகாப்தம்" என்று அறியப்பட்டது. அவரது ஆட்சியின் கீழ், அனைத்து பிரிட்டிஷ் காலனிகளிலும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது மற்றும் பெரும்பாலான பிரிட்டிஷ் ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அவர் தொழிலாளர் நிலைமைகளில் சீர்திருத்தங்களைச் செய்தார் மற்றும் அவரது பேரரசில் குறிப்பிடத்தக்க கலாச்சார, அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களுக்கு தலைமை தாங்கினார்.

பேரரசி டோவேஜர் சிக்சி (1835-1908)
பேரரசி டோவேஜர் சிக்சி சீனப் பேரரசரின் தாய் ஆவார், அவர் 1861 முதல் 1908 வரை 47 ஆண்டுகள் சீனாவை ஆட்சி செய்தார். அவர் தொழில்நுட்ப மற்றும் இராணுவ சீர்திருத்தங்களை நிறுவினார், ஊழல் அதிகாரத்துவத்தை மாற்றியமைத்தார், மேலும் மேற்கத்திய எதிர்ப்பு அணுகுமுறைகளை ஆதரித்தார்.

ஆஸ்திரியாவின் மரியா தெரசா (1717-1780)
ஆஸ்திரியாவின் மரியா தெரசா ஹாப்ஸ்பர்க் பேரரசி ஆவார், அவர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார் மற்றும் ஆஸ்திரியா, ஹங்கேரி, குரோஷியா, போஹேமியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகள் உட்பட ஐரோப்பாவின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார். அவருக்கு பதினாறு குழந்தைகள் இருந்தனர், அவர்கள் பிரான்சின் ராணி, நேபிள்ஸ் மற்றும் சிசிலி ராணி மற்றும் இரண்டு புனித ரோமானிய பேரரசர்கள் போன்ற முக்கிய சக்தி வீரர்களாகவும் ஆனார்கள். பேரரசி மரியா தெரசா கல்வியில் அவரது சீர்திருத்தங்களுக்காக அறியப்படுகிறார், இது கட்டாயமாக்கப்பட்டது, பிரஸ்ஸல்ஸில் ராயல் அகாடமி ஆஃப் சயின்ஸ் அண்ட் லிட்டரேச்சரை நிறுவுதல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்தது. அவர் வரிகளை உயர்த்தினார் மற்றும் வர்த்தகத்தில் சீர்திருத்தங்களை செய்தார், அத்துடன் ஆஸ்திரிய இராணுவத்தை பலப்படுத்தினார்.

எலிசபெத் I (1533-1603)
முதலாம் எலிசபெத் மிகவும் சக்திவாய்ந்த ஆங்கில மன்னர்களில் ஒருவர். அவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை மற்றும் "கன்னி ராணி" என்று அழைக்கப்படுகிறார், அறிவார்ந்த எலிசபெத் I ஸ்பானிஷ் அர்மடாவை தோற்கடித்து, 1558 முதல் 1603 வரை அவரது ஆட்சி "எலிசபெதன் சகாப்தம்" என்று அழைக்கப்படும் அளவுக்கு வெற்றிகரமாக ஆட்சி செய்தார். டியூடர் வம்சத்தின் கடைசி ஆட்சியாளராக, மறுமலர்ச்சி மற்றும் இங்கிலாந்தை புராட்டஸ்டன்ட் நாடாக மாற்றுவது போன்ற பெரிய கலாச்சார மாற்றங்களை ஊக்குவித்தார்.



Click it and Unblock the Notifications











