Just In
- 34 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 3 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த 5 ராசி ஆண்கள் அளவில்லாத புத்திக்கூர்மை உள்ளவர்களாம்...இவங்க புத்திசாலித்தனத்தால் எதையும் சாதிப்பாங்களாம்!
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் அவர்களுக்கென சொந்த அறிவுத்திறன் உள்ளது, ஆனால் எந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் கூட்டத்தில் இருந்து தனித்து நிற்கிறார்கள்?
அனைவரையும் கவரும் ஒரு வசீகரமான குணம் என்றால் அது புத்திசாலித்தனம்தான். ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் அவர்களுக்கென சொந்த அறிவுத்திறன் உள்ளது, ஆனால் எந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் கூட்டத்தில் இருந்து தனித்து நிற்கிறார்கள்? பல வகையான நுண்ணறிவு இருப்பதால் சில ராசிகளில் பிறந்தவர்கள் அதீத புத்திக்கூர்மையுடன் இருக்கிறார்கள்.
அறிவாற்றல் என்பது அவர்களின் கல்வித்திறனை மட்டும் வைத்து அளவிடப்படுவதில்லை. அவர்களின் சமயோசித புத்தி, பிரச்சினைகளை கையாளும் திறன், நினைத்ததை அடையும் உறுதி என புத்திக்கூர்மையை வெளிப்படுத்தும் பல வழிகள் உள்ளன. சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு மற்றவர்களை விட இந்த தகுதிகள் அதிகமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் அதிக புத்திக்கூர்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி ஆண்கள் அனைவரையும் விட புத்திசாலிகளாக அறியப்படுகிறார்கள். அவர்கள் ஆச்சரியங்களின் பிறப்பிடமாக இருக்கிறார்கள் மற்றும் அவ்வளவு எளிதில் யாரிடமும் ஏமாற மாட்டார்கள். அவர்களின் கூர்மையான மற்றும் புத்திசாலித்தனமான மனநிலையால், அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவர்கள் உந்துதலைக் காண்கிறார்கள். இந்த நபர்கள் மிகவும் தனித்துவமான புலனுணர்வு கொண்டவர்கள் மற்றும் உலகத்தை யதார்த்தமாக மதிப்பிடுவதிலும் புரிந்துகொள்வதிலும் சிறந்தவர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தந்திரமான திறமைகளையும், ஞானத்தையும் கொண்டவர்கள். கும்பம் நபர்கள் தங்கள் அறிவுசார் மனதின் மூலம் கிட்டத்தட்ட அனைத்தையும் பகுத்தறிய முனைகிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும், தங்களைத் தவிர மற்றவர்களிடமிருந்து வரும் யோசனைகள் மற்றும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கும் அறியப்படுகிறார்கள். மேலும் அவர்கள் உலகின் விசித்திரமான மற்றும் கவர்ச்சிகரமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர், அவர்களின் புத்திசாலித்தனம் அவர்களை கூட்டத்திலிருந்து எப்போதும் தனித்துவமாக நிற்க வைக்கிறது.
MOST READ: விபச்சாரம் முதல் மாந்திரீகம் வரை கற்றுத்தரும் உலகின் விசித்திரமான பள்ளிகள்... ஷாக் ஆகாம படிங்க...!
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எல்லாவிதமான விஷயங்களிலும் ஆர்வம் காட்டுகிறார்கள், இந்த குணம் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. மேலும், ஒரு பிரச்சனைக்கு தீர்வு இல்லாவிட்டால் அல்லது பதிலைக் கண்டுபிடிப்பது கடினம் என்றால், அவர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையுடன் தங்கள் சொந்த பதிலை உருவாக்கத் தொடங்குவார்கள். கன்னி ராசி ஆண்கள்மிகவும் வேடிக்கையானவர்கள் அல்ல, ஆனால் எப்போதும் பொறுப்புடன் இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் நிறைய கேள்விகளைக் கேட்பார்கள், இது ஒரு மேதையின் உறுதியான அறிகுறியாகும்.
மிதுனம்
மிதுன ராசி ஆண்கள் விரைவான சிந்தனையாளர்கள் மற்றும் அவர்கள் தகவல்களைப் பெறுவதற்கும் பரப்புவதற்கும் ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் தங்கள் மூளைக்குள் ஏதாவது ஒன்றை வைத்து சிந்திதிக் கொண்டிருப்பார்கள், அது அவர்களை மிகவும் வேடிக்கையாகவும் திறமையாகவும் ஆக்குகிறது. மேலும், அவர்கள் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டுள்ளனர், இது ஒரு அறிவார்ந்த நபரின் மற்றொரு அறிகுறியாகும். இந்த ராசி ஆண்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் மற்றும் அவர்களின் சிறந்த பேச்சாற்றல் மூலம், அவர்கள் எளிதாக நண்பர்களை உருவாக்க முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் துல்லியமான மற்றும் மிகவும் கட்டமைக்கப்பட்ட சிந்தனை வழியைக் கொண்டுள்ளனர், இது ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க உதவுகிறது. இருப்பினும், அவர்கள் ஒரு பணி அல்லது திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் எதிர்காலத்தைக் கணித்து, அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொள்வார்கள். மகர ராசி ஆண்கள் எதையும் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் மற்றும் அவர்களின் புத்திசாலித்தனத்தை நல்ல முறையில் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டவர்கள்.