Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மகா சிவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது? விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கி, உங்கள் காரியம் வெற்றி பெறும்.
மகா சிவராத்திரி இந்து மதத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். சிவபெருமானை வழிபட்டு விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்து நாட்காட்டியின்படி பால்குன் மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனினும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். ஒரு இரவு முழுவதும் சிவனை வழிபட்டு பூஜை செய்து வழிபட்டால் நீங்கள் பல்வேறு பலனை அடைவீர்கள் என்று கூறப்படுகிறது. மகா சிவராத்திரி எப்போது? எப்படி பூஜை செய்து கொண்டாட வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

சிவராத்திரி விரதங்களின் வகை
நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதத்தை எவ்வாறு நிறைவு செய்தல்?
விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்
இந்து புராணங்களின்படி, மகா சிவராத்திரி அன்று சிவபெருமானும், பார்வதியும் திருமணம் செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. மகா சிவராத்திரியின் சிறப்பு சந்தர்ப்பத்தில், சிவபெருமானை வழிபட பக்தர்கள் விரதம் இருப்பார்கள். பார்வதி தேவியை போல விரும்பிய வரன் கிடைக்க பெண்கள் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி இந்த விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்கிறார்கள்.

அதிர்ஷ்டம் தரும்
இந்த நாளில் விரதம் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் நம்பப்படுகிறது. இது தவிர, இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டங்கள் மற்றும் தடைகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. மேலும், உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும்.இந்த நாளில் சிவபெருமானின் மனைவி பார்வதி தேவியும் சிவபெருமான் வழிபடப்படுகிறார். மகா சிவராத்திரியின் தேதி, மங்கள நேரம் மற்றும் சரியான வழிபாட்டைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

மகா சிவராத்திரி தேதி மற்றும் பூஜை நேரம்
இந்த ஆண்டு, மகா சிவராத்திரிக்கான உகந்த நாள் மார்ச் 1 செவ்வாய்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு தொடங்குகிறது. சதுர்த்தசி திதி மார்ச் 2 புதன்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைகிறது. மகா சிவராத்திரி பூஜை நான்கு கட்டங்களாக அனுசரிக்கப்படுகிறது.
நான்கு நிலைகளில் வழிபடுவதற்கான மங்களகரமான நேரம்:
முதல் கட்ட பூஜை: மார்ச் 1ம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை
இரண்டாம் கட்ட பூஜை: மார்ச் 1 இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை
மூன்றாம் கட்ட பூஜை: மார்ச் 2ம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை
நான்காம் கட்ட பூஜை: மார்ச் 2 காலை 3:39 முதல் 6:45 வரை

மகா சிவராத்திரி பூஜை விதி
ஃபால்குன் மாதத்தின் மகா சிவராத்திரி ஆண்டின் மிகப்பெரிய சிவராத்திரிகளில் ஒன்றாக இவை கருதப்படுகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். அதன் பிறகு, வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட கலசத்தை நிறுவவும். பின்னர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிலைகளை கலசத்துடன் வைக்கவும். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு அக்ஷத், பான், வெற்றிலை, உருளை, மோலி, சந்தனம், கிராம்பு, ஏலக்காய், பால், தயிர், தேன், நெய், ததுரா, பெல்பத்ரா, கமல்கட்டா மற்றும் பழங்களை வழங்குங்கள். பூஜை செய்து இறுதியில் சிவன் மற்றும் பார்வதி தேவியின் ஆர்த்தியைப் பாடுங்கள்.

மகா சிவராத்திரி பூஜை மந்திரங்கள்
இந்த நாளில் மக்கள் மஹாமிருத்யுஜ்ய மற்றும் சிவ மந்திரத்தை ஓதுகிறார்கள். நீங்கள் அனைத்து சடங்குகளுடன் பூஜை செய்தால், இறைவன் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார் என்று நம்பப்படுகிறது.

பலன் தரும் பரிகாரங்கள்
மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கி, உங்கள் காரியம் வெற்றி பெறும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது, 'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications











