Just In
- 58 min ago மேஷத்தில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாதம் இந்த 3 ராசிக்காரங்க வேலையை இழக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
- 5 hrs ago Today Rasi Palan 27 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Don't Miss
- News எனக்கு தெரியாதுன்னு நினைக்காதீங்க! பாஜக "தலைக்கு" வேலை பார்த்த கருப்பு ஆடுகள்! ரெய்டு விட்ட ஸ்டாலின்
- Movies அண்டங்காக்கா கொண்டக்காரி மாதிரியே இருக்கே.. ராம்சரணுக்கு பட்டை நாமம் போட்டு விடுவாரோ ஷங்கர்?
- Finance சென்னை கலரே மாறுது.. சிறுசேரி சிப்காட்-க்கு பின்னால் 30 ஏக்கரில் பிரம்மாண்ட திட்டம்..!!
- Sports செம ட்விஸ்ட்.. தூக்கி எறியப்பட்ட ஹர்திக் பாண்டியா.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி.. ரோஹித் பவர் இதுதான்
- Technology அதிரவிட்ட அமேசான்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களை மகாசிவராத்திரியில் தரிசித்தால் கிடைக்கும் புண்ணியங்கள்!
மகா சிவராத்திரி தினமான இன்று சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களை தரிசனம் செய்யலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. பரம்பொருளாகிய இறைவன் இந்த பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பஞ்சபூத தலங்களையும், சிவன் தாண்டவம் ஆடிய பஞ்சசபைகளிலும் தரிசனம் செய்யலாம்.
எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும் மகாசிவராத்திரி விரதமிருக்கும் சிவனடியார்களைக் கண்டு எமன் அஞ்சுவார் என்றும் சிவபுராணம் கூறுகிறது. இந்த நாளில் விடிய விடிய உறங்காமல் சிவ புராணம் படித்தும் சிவனை வணங்கியும் வர நன்மைகள் நடைபெறும்.
MOST READ: மகா சிவராத்திரி 2020: சிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை!
சிவனின் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி ஸ்ரீகாளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு.
MOST READ: மகா சிவராத்திரி 2020: சிவனை நினைத்து விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்...
நிலம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், நீர் ஸ்தலம் திருவானைக்காவல் கோவில், வாயு ஸ்தலம் ஸ்ரீ காலஹஸ்தி, ஆகாயம் ஸ்தலம் சிதம்பரம் கோவில், நெருப்பு ஸ்தலம் திருவண்ணாமலை கோவில். அதேபோல சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் நடைபெறும் சிவராத்திரி விழாக்களிலும் பங்கேற்கலாம்.