Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சபாஷ்!... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...
பாலினம் தடையில்லை என்று நிரூபித்து 377 செக்ஷனை துணிச்சலாக சந்திக்கும் வழக்கறிஞர் தம்பதி பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
ஓரினச் சேர்க்கை குற்றம் என்று வரையறுத்த 377வது சட்டப்பிரிவை இந்திய உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி வழங்கிய தீர்ப்பின்மூலம் ரத்து செய்தது. அதன் மூலம் ஒரு பால் காதலை தடை செய்யும் பிரிட்டிஷ் காலனி காலத்து சட்டம் முடிவுக்கு வந்தது.

பாலின வேறுபாட்டை களைந்திடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பின் அடையாளமாக மேனகா குருசுவாமி மற்றும் அருந்ததி கட்ஜூ ஆகிய இரண்டு வழக்குரைஞர்களும் இணைந்துள்ளனர்.

'நாங்கள் அவர்கள்தாம்' ட்விட்டர் பதிவு
தீர்ப்பு வழங்கப்பட்டு 10 மாதங்கள் கடந்த நிலையில் அருந்ததி கட்ஜூ 2019 ஜூலை மாதம் 18ம் தேதி இட்ட ட்விட்டர் பதிவின் மூலம் தாமும் மேனகா குருசுவாமியும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
"நீதிமன்றத்திற்கு செல்லும்போது பல நாள்கள் என்னை ஆறு முழ புடவையில் காண்பீர்கள். நீளமான அப்புடவை நிமிர்ந்து நிற்கவும், சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளவும், வாதம் செய்வதற்கும் எனக்கு சக்தியையும் தருவதாக உணர்கிறேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்ற வழக்கு
நாஸ் ஃபவுண்டேஷன் என்ற அரசு சாரா சேவை நிறுவனம் மற்றும் எய்ட்ஸ் பெட்பாவ் விரோத் ஆண்டோலன் அமைப்பு ஆகியவை 2001ம் ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் 377வது சட்டப்பிரிவை குறித்த பிரச்னையை எழுப்பின. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலின சேர்க்கையாளர்களை பாதுகாப்பாக உணரச் செய்துள்ளது.
"கனம் கோர்ட்டார் அவர்களே, இது அன்பு. இது பாலின நடவடிக்கையாக மட்டுமல்லாமல், அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி மேனகா குருசுவாமி கேட்டுக்கொண்டார்.

டட்டீ சந்த்தின் ஜோடி யார்?
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை டட்டீ சந்த், ஒடிசாவின் கிழக்குப் பகுதியிலுள்ள தம்முடைய கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தாம் ஓரின உறவு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பெண்களுக்குள்ளிருக்கும் ஓரின சேர்க்கை இன்னும் இலைமறை காயாக இருக்கும் நிலையில் தம்மை ஓரினச் சேர்க்கையாளராக வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட முதல் தடகள வீராங்கனை அவராவார்.
"என் இதயத்திற்கேற்ற துணையாக ஒருவரை கண்டுபிடித்துள்ளேன். தங்களுக்கு பிரியமானவர்களுடன் இணைந்திருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டட்டீ சந்த் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications