Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
வேண்டாம்னு தூக்கி வீசின குழந்தை இப்ப 12.5 லட்சம் குரோர்பதியில ஜெயிச்சிருக்காங்க...
வேண்டாமென்று தூக்கி வீசிய குழந்தை குரோர்பதியில் 12.5 லட்சம் பரிசு வாங்கியிருக்கிறது. அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் வளிக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
யாரோ பண்ணின தப்புக்கு நான் கஷ்டப்படுறேன். இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்?" என்று புலம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு புது நம்பிக்கை அளிக்கும் ஒரு தகவல்...

உத்தர பிரேதேசம் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராம்குமார் சிங். அவரது மனைவி கல்பனா சிங். கல்பனாவுக்கு கான்பூரில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்திருக்கிறது என்று போட்டுவிட்டனர். குழந்தையை கவனித்த உறவினர் ஒருவர், உயிரோடு இருப்பதை கவனித்து தூக்கியுள்ளார். பிறந்ததும் உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அப்பெண் குழந்தை மாற்றுத் திறனாளியாய் வளர்ந்தது. அந்தப் பெண்ணின் பெயர் நூபுர் சிங்.

பன்னிரண்டரை லட்சம் பரிசு
பிரபல நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 12 கேள்விகளுக்கு சரியான விடை கூறி 12.5 லட்சம் ரூபாய் பரிசை நூபுர் சிங் வென்றுள்ளார்.

புத்திசாலி பெண்
இண்டர்மீடியட் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற நூபுர் சிங், ஆசிரியை பயிற்சியான பி.எட். படிப்புக்கான நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார் என்றும் நூபுர் சிங் புத்திசாலியாய் வளர்ந்தார் என்றும் அவரது அம்மா கல்பனா சிங் கூறியுள்ளார்.
MOST READ: காலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....

மனத்தளர்ச்சி
வழக்கமாக 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கேள்விக்குப் பதில் கூறும் முன்பே மகள் நூபுர் பதில் கூறிவிடுவாள் என்று தெரிவித்துள்ள கல்பனா, மகள் மாற்றுத் திறனாளியாவதற்கு காரணமான மருத்துவர்கள்மேல் தனக்கு எந்த வருத்தமும் இல்லையென்றும் கூறியுள்ளார்.
எந்நிலையிலும் வாழ்வில் மனந்தளர்ந்து விடக்கூடாது என்பதற்கு நூபுரின் வெற்றி நல்ல உதாரணம்.



Click it and Unblock the Notifications