Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
வேண்டாம்னு தூக்கி வீசின குழந்தை இப்ப 12.5 லட்சம் குரோர்பதியில ஜெயிச்சிருக்காங்க...
வேண்டாமென்று தூக்கி வீசிய குழந்தை குரோர்பதியில் 12.5 லட்சம் பரிசு வாங்கியிருக்கிறது. அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் வளிக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
யாரோ பண்ணின தப்புக்கு நான் கஷ்டப்படுறேன். இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்?" என்று புலம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு புது நம்பிக்கை அளிக்கும் ஒரு தகவல்...

உத்தர பிரேதேசம் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராம்குமார் சிங். அவரது மனைவி கல்பனா சிங். கல்பனாவுக்கு கான்பூரில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்திருக்கிறது என்று போட்டுவிட்டனர். குழந்தையை கவனித்த உறவினர் ஒருவர், உயிரோடு இருப்பதை கவனித்து தூக்கியுள்ளார். பிறந்ததும் உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அப்பெண் குழந்தை மாற்றுத் திறனாளியாய் வளர்ந்தது. அந்தப் பெண்ணின் பெயர் நூபுர் சிங்.

பன்னிரண்டரை லட்சம் பரிசு
பிரபல நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 12 கேள்விகளுக்கு சரியான விடை கூறி 12.5 லட்சம் ரூபாய் பரிசை நூபுர் சிங் வென்றுள்ளார்.

புத்திசாலி பெண்
இண்டர்மீடியட் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற நூபுர் சிங், ஆசிரியை பயிற்சியான பி.எட். படிப்புக்கான நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார் என்றும் நூபுர் சிங் புத்திசாலியாய் வளர்ந்தார் என்றும் அவரது அம்மா கல்பனா சிங் கூறியுள்ளார்.
MOST READ: காலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....

மனத்தளர்ச்சி
வழக்கமாக 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கேள்விக்குப் பதில் கூறும் முன்பே மகள் நூபுர் பதில் கூறிவிடுவாள் என்று தெரிவித்துள்ள கல்பனா, மகள் மாற்றுத் திறனாளியாவதற்கு காரணமான மருத்துவர்கள்மேல் தனக்கு எந்த வருத்தமும் இல்லையென்றும் கூறியுள்ளார்.
எந்நிலையிலும் வாழ்வில் மனந்தளர்ந்து விடக்கூடாது என்பதற்கு நூபுரின் வெற்றி நல்ல உதாரணம்.



Click it and Unblock the Notifications