Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
காதல் தோல்வியால் ஒரு மாதம் குளிக்காமல் காதலி வீட்டின்முன்பே தங்கியிருந்த காதலன்
காதல் தோல்வியை விசித்திரமாக வன்முறையாக கையாண்ட, இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கிற ஒரு காதல் தோல்விக் கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
காதல் தோல்விகள் தாங்க முடியாத வலியை தரக்கூடியது. சிலர் அதை சரிதான் போ என ஒதுக்கிவிட்டு வாழந்து விடுகிறார்கள். சிலர் அதிலிருந்து வெளிவர வழி தெரியாமல் தவிக்கிறார்கள். சிலர் அதை வன்முறையாக மாற்றி விடுகிறார்கள்.
காதல் தோல்வியை விசித்திரமாக வன்முறையாக கையாண்ட ஒரு காதல் தோல்வியை பற்றி இங்கே பார்க்கலாம்.

காதல் தோல்வியை விசித்திரமாக வன்முறையாக கையாண்ட, இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கிற ஒரு காதல் தோல்விக் கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காதல் படுத்தும் பாடு
இந்த மனிதன் தனது காதல் தோல்வியை தாங்க முடியாமல், தனது முன்னாள் காதலியின் வீட்டின் முன், ஒரு மாதம் காரிலேயே தங்கியுள்ளார். இந்த மனிதனுடைய பெயர் தெரியவில்லை. குடும்ப பெயர் லியு. ஒன்றறை வருடமாக தொடர்ந்த இவரது காதல் தோல்வியில் முடிந்துள்ளது. அதனால் மனமுடைந்துள்ளார் லியு.

காதல் தோல்வி
இந்த லியு ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது திருமணத்தை மறைத்து காதலியுடன் பழகியுள்ளார். ஒரு ஆன்லைன் கேம் மூலம் இவருக்கு இந்த பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஒன்றரை வருடமாக இரண்டு பேரும் பழகியுள்ளனர். இவரது திருமணத்தை அறிந்த காதலி இவரை விட்டு விலகியுள்ளார். தனது காதலியுடன் மறுபடியும் சேர வேண்டும் என லியு தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

பின்தொடர்ந்தது
காதலியின் பிரிவை லியுவால் தாங்க முடியவில்லையாம். காதலி பிரிந்து போன பின்னும் இரண்டு வருடமாக அந்த பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை செய்துள்ளாராம். ஒரு முறை அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளார். இந்த தகராறில் கார் விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்துக்கு பின் அப்பெண் பயந்து இவரிடம் இருந்து தப்பிக்க தனது சொந்த ஊருக்கு சென்று இருக்கிறாள்.

தேடி அலைந்தான்
ஆனால் இதனால் தான் அப்பெண்ணுக்கு நிஜ பிரச்சினையே ஆரம்பமாகியது. இவளை தேடி லியு இவளது சொந்த ஊருக்கே வந்துள்ளார். புதிய இடமான அந்த ஊரில் இவள் வீட்டை தேடி காரிலேயே அலைந்துள்ளாராம்.
காதலியின் வீட்டை கண்டுபிடித்த பின் ஒரு நடுராத்திரியில் லியு அப்பெண்ணின் கழுத்தை நெறித்து மிரட்டியுள்ளான். அந்த பெண் அவனுடன் கடுமையாக தன்னை காக்க கடுமையாக போராடி இருக்கிறாள். பின்னர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளான்.

துர்நாற்றம்
இச்சம்பவத்தால் கலவரம் அடைந்த அப்பெண் அவனிடம் இருந்து வந்த துர்நாற்றத்தால் தனக்கு மயக்கம் வந்துவிட்டது என பீதியுடன் கூறியுள்ளார்.
காரணம் அப்பெண்ணை காரில் தேடி அலைந்த ஒரு மாதத்துல் லியு ஒரு முறை கூட குளிக்கவில்லையாம்.

போலீஸ் கைது
இந்த விசித்திரக் காதலனை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்ததில் அவன் அந்த பெண்ணை மிகவும் நேசித்ததாக கூறியுள்ளான். அதனால் தான் இவ்வாறு செய்தேன் என காரணம் கூறியுள்ளான்.
இப்போது போலீஸ் கஸ்டடியில் அவன் இருப்பதால் அப்பெண் நிம்மதியாக இருப்பாள் என்று நம்புவோம்.



Click it and Unblock the Notifications