Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
காதல் தோல்வியால் ஒரு மாதம் குளிக்காமல் காதலி வீட்டின்முன்பே தங்கியிருந்த காதலன்
காதல் தோல்வியை விசித்திரமாக வன்முறையாக கையாண்ட, இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கிற ஒரு காதல் தோல்விக் கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
காதல் தோல்விகள் தாங்க முடியாத வலியை தரக்கூடியது. சிலர் அதை சரிதான் போ என ஒதுக்கிவிட்டு வாழந்து விடுகிறார்கள். சிலர் அதிலிருந்து வெளிவர வழி தெரியாமல் தவிக்கிறார்கள். சிலர் அதை வன்முறையாக மாற்றி விடுகிறார்கள்.
காதல் தோல்வியை விசித்திரமாக வன்முறையாக கையாண்ட ஒரு காதல் தோல்வியை பற்றி இங்கே பார்க்கலாம்.

காதல் தோல்வியை விசித்திரமாக வன்முறையாக கையாண்ட, இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கிற ஒரு காதல் தோல்விக் கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காதல் படுத்தும் பாடு
இந்த மனிதன் தனது காதல் தோல்வியை தாங்க முடியாமல், தனது முன்னாள் காதலியின் வீட்டின் முன், ஒரு மாதம் காரிலேயே தங்கியுள்ளார். இந்த மனிதனுடைய பெயர் தெரியவில்லை. குடும்ப பெயர் லியு. ஒன்றறை வருடமாக தொடர்ந்த இவரது காதல் தோல்வியில் முடிந்துள்ளது. அதனால் மனமுடைந்துள்ளார் லியு.

காதல் தோல்வி
இந்த லியு ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது திருமணத்தை மறைத்து காதலியுடன் பழகியுள்ளார். ஒரு ஆன்லைன் கேம் மூலம் இவருக்கு இந்த பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஒன்றரை வருடமாக இரண்டு பேரும் பழகியுள்ளனர். இவரது திருமணத்தை அறிந்த காதலி இவரை விட்டு விலகியுள்ளார். தனது காதலியுடன் மறுபடியும் சேர வேண்டும் என லியு தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

பின்தொடர்ந்தது
காதலியின் பிரிவை லியுவால் தாங்க முடியவில்லையாம். காதலி பிரிந்து போன பின்னும் இரண்டு வருடமாக அந்த பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை செய்துள்ளாராம். ஒரு முறை அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளார். இந்த தகராறில் கார் விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்துக்கு பின் அப்பெண் பயந்து இவரிடம் இருந்து தப்பிக்க தனது சொந்த ஊருக்கு சென்று இருக்கிறாள்.

தேடி அலைந்தான்
ஆனால் இதனால் தான் அப்பெண்ணுக்கு நிஜ பிரச்சினையே ஆரம்பமாகியது. இவளை தேடி லியு இவளது சொந்த ஊருக்கே வந்துள்ளார். புதிய இடமான அந்த ஊரில் இவள் வீட்டை தேடி காரிலேயே அலைந்துள்ளாராம்.
காதலியின் வீட்டை கண்டுபிடித்த பின் ஒரு நடுராத்திரியில் லியு அப்பெண்ணின் கழுத்தை நெறித்து மிரட்டியுள்ளான். அந்த பெண் அவனுடன் கடுமையாக தன்னை காக்க கடுமையாக போராடி இருக்கிறாள். பின்னர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளான்.

துர்நாற்றம்
இச்சம்பவத்தால் கலவரம் அடைந்த அப்பெண் அவனிடம் இருந்து வந்த துர்நாற்றத்தால் தனக்கு மயக்கம் வந்துவிட்டது என பீதியுடன் கூறியுள்ளார்.
காரணம் அப்பெண்ணை காரில் தேடி அலைந்த ஒரு மாதத்துல் லியு ஒரு முறை கூட குளிக்கவில்லையாம்.

போலீஸ் கைது
இந்த விசித்திரக் காதலனை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்ததில் அவன் அந்த பெண்ணை மிகவும் நேசித்ததாக கூறியுள்ளான். அதனால் தான் இவ்வாறு செய்தேன் என காரணம் கூறியுள்ளான்.
இப்போது போலீஸ் கஸ்டடியில் அவன் இருப்பதால் அப்பெண் நிம்மதியாக இருப்பாள் என்று நம்புவோம்.



Click it and Unblock the Notifications











