Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
ஆண்களை பெண்கள் அடிமையாக நடத்தும் வினோத நாடு எது தெரியுமா? இந்த நாடு ஆண்களின் நரகமாம்...!
காலம் காலமாக பெண்களை ஆண்கள் துன்புறுத்தியதை கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் ஆண்கள் மீதான பெண்களின் அடக்குமுறை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
வரலாறு முழுக்கவே உலகம் முழுவதும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகி வந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த துயரம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது, பெரும்பாலான ஆணாதிக்க சமூகம் இந்த அவலத்தை ஆதரிக்கவும் செய்கிறது.

காலம் காலமாக பெண்களை ஆண்கள் துன்புறுத்தியதை கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் ஆண்கள் மீதான பெண்களின் அடக்குமுறை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். உலகையே ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தும் நாடு ஒன்று உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நாட்டில் பெண்கள் சொல்லும் அனைத்தையும் ஆண்கள் செய்ய வேண்டும். இங்கு பெண்கள் அல்ல ஆண்களே கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் இந்த நாடு ஆண்களுக்கு நரகமாக கருதப்படுகிறது.

ஆண்களின் நரகம்
இந்த நாட்டின் பெயர் 'The other World Kingdom', இது 1996 இல் ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இருந்து உருவாக்கப்பட்டது. இருப்பினும், பிற நாடுகளால் அதற்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்த நாடு வெறும் 7.4 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆடம்பரமான அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கும். நீச்சல் குளங்கள் மற்றும் இரவு விடுதிகளும் உள்ளன. ஆனால் பெண்களின் அனுமதியின்றி ஆண்கள் அங்கு செல்ல முடியாது. நாட்டின் முக்கிய கட்டிடம் ராணியின் அரண்மனைதான்.

ராணியின் ஆட்சி
இந்த நாட்டின் ராணியின் பெயர் பாட்ரிசியா-1, அவரது ஆட்சி இங்கு போட்டியின்றி இயங்குகிறது. இந்த நாட்டில் பெண்கள் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள். இங்கு ஆண்களுக்கு திறந்த வெளியில் சுற்றித் திரிந்து விருப்பப்படி வாழ சுதந்திரம் இல்லை. இந்நாட்டு அரசியின் முகத்தை இன்றுவரை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

ஆண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
ஆண்கள் மீதான பெண்களின் அடக்குமுறையின் நிலை என்னவென்றால், இங்குள்ள ராணி ஆண்களின் உடலை சோபா போல அமைத்து அவர்கள் மீது உட்காருகிறார். இந்த நாட்டில் ஆண்கள் நாற்காலியில் உட்காரக் கூடாது. அவரது எஜமானி அனுமதியளித்தால் மட்டுமே, அவர் நாற்காலியில் உட்காரலாம், ஆனால் அவரது உட்காரும் நிலை எஜமானியிடமிருந்து கீழ்நிலையில் இருக்க வேண்டும்.

எப்படி மது அருந்த வேண்டும்?
ஆண்கள் மது அருந்துவதற்கு முன் எஜமானியின் காலடியில் மதுவை வழங்க வேண்டும், அவர்கள் அனுமதியளித்தால் மட்டும்தான் அடிமை தான் குடிக்க முடியும். இந்த நாட்டில் பெண்களின் அனுமதியின்றி ஆண்கள் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆண்களுக்கு இங்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை பின்பற்றாத ஒரு ஆண் கடுமையாக தண்டிக்கப்படுகிறான்.

குடியுரிமை எப்படி பெறுவது?
இங்கு பெண்கள் குடியுரிமை பெறுவதற்கான முதல் நிபந்தனை, ஒரு பெண்ணுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண் ஊழியராவது இருக்க வேண்டும். மற்ற நிபந்தனை என்னவென்றால், பெண்கள் எல்லா விதிகளையும் பின்பற்ற வேண்டும். மூன்றாவது நிபந்தனையின்படி, பெண் ராணியின் அரண்மனையில் குறைந்தது ஐந்து நாட்களாவது இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications