Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா?
இந்து மதத்தின் அனைத்து புராணங்களிலும் காதலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளது. இவற்றின் மீதான புராணங்களின் மீதான பார்வையானது மிகவும் ஆழமானது அதேசமயம் வித்தியாசமானதும் கூட.
இந்து மதம் என்பது மாபெரும் பழமையான வரலாற்றைக் கொண்டது, இது வேத பாரம்பரியத்தில் வலுவான வேர்களைக் கொண்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, இந்து மக்களின் வாழ்க்கை தார்மீக, நெறிமுறை மற்றும் ஆன்மீக பரிந்துரைகள் மற்றும் வேத இலக்கியங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்து மதத்தின் அனைத்து புராணங்களிலும் காதலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளது. இவற்றின் மீதான புராணங்களின் மீதான பார்வையானது மிகவும் ஆழமானது அதேசமயம் வித்தியாசமானதும் கூட. இந்த பதிவில் காதல் மற்றும் காமம் பற்றி இந்து மதத்தில் நிலவும் நம்பிக்கைகள் என்னவென்று பார்க்கலாம்.

காதல் மீதான இந்து மத நம்பிக்கைகள்
ஒரு மதத்தின் நம்பிக்கைகளும், அணுகுமுறைகளும் பலகாலமாக சோதிக்கப்பட்டதாகவும், பல தலைமுறையினரின் அனுபவத்தின் மூலமும், ஞானத்தின் மூலமும் வகுக்கப்பட்டதாகும். அவை இந்த கொள்கைகளை சோதித்து, அவற்றின் மரபுகளை சந்ததியினரிடமிருந்து பயனடையச் செய்தன. நமது பாரம்பரியம் காதல் மற்றும் காமத்தை எவ்வாறு கருதுகிறது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

இந்து மதம் காதலையும், காமத்தையும் வெறுக்கிறதா?
பொதுவாக அன்பும், காமமும் மனித வாழ்க்கையுடன் ஒருங்கிணைந்தவை ஆகும், இவை மனித நடத்தைகளை ஆளக்கூடிய ஒரு வகையான உயிரியல் தூண்டுதல்கள் ஆகும். எனவே, அவை ஒருபோதும் இந்து பாரம்பரியத்தில் அருவருக்கத்தக்க அல்லது அவமதிப்புக்கான செயல்கள் அல்ல. ஆனால் காதல் மற்றும் காமத்தை நிர்வகிக்க வேண்டிய சில விதிமுறைகளை இது பரிந்துரைத்துள்ளது.

வாழ்க்கையின் நான்கு நோக்கங்கள்
தர்மம் (நீதி), அர்த்தம் (செல்வம்), காமா (ஆசையை நிறைவேற்றுவது) மற்றும் மோட்சம் (விடுதலைக்காக உழைப்பது) என்பன வாழ்க்கையின் நான்கு முக்கிய நோக்கங்கள் என்று இந்து மதமும், புராணங்களும் கூறுகிறது. எனவே செல்வம், மோட்சம் போன்ற பிற நோக்கங்களைப் போலவே, ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றுவது இந்து மதத்தில் சமமான மற்றும் விகிதாசார முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஆகையால், ஒரு நபர் தனது வாழ்க்கைத் துணையுடன் திருமணத்திற்குப் பிறகு சரியான வழியில் அன்பையும், காமத்தையும் அனுபவிக்க தார்மீகரீதியாகவும், நெறிமுறைரீதியாயாகவும் முழு உரிமை உண்டு.

வாழ்க்கையின் நான்கு நிலைகள்
ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் பிரம்மாச்சார்யா (மாணவர்), க்ருஹஸ்தா (வீட்டுக்காரர்), வனப்பிரஸ்தா (சமூக சேவகர்) மற்றும் சன்யாசா (சந்நியாசி) ஆகிய நான்கு திட்டவட்டமான நிலைகளை கடந்து செல்கிறது என்று பாரம்பரியம் கூறுகிறது. தொடர்ச்சியான இந்த கட்டங்களில், ஒரு நபர் கல்வியில் ஈடுபடுவதன் மூலம் நீண்ட ஆயுளுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார், பின்னர் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை வளர்க்கிறார், பின்னர் ஓய்வு பெற்ற பிறகு சமுதாயத்திற்கு சேவை செய்கிறார், பின்னர் உண்மையைத் தேடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

அனுமதிக்கப்படாத பருவம்
பிரம்மச்சாரிய மற்றும் சன்யாசா நிலைகளில் உள்ளவர்களுக்கு காதலும், காமமும் அனுமதிக்கப்படுவதில்லை. மனிதன் தனது வாழ்க்கைத் துணையுடன் திருமணம் செய்து கொண்ட பிறகு க்ருஹஸ்தா கட்டத்தில் இருக்கும்போதுதான் ஒழுங்குபடுத்தப்பட்ட உடலுறவில் ஈடுபட முடியும்.

திருமணத்தை நிர்வகிக்கும் விதிகள்
சமூகத்தின் சில பிரிவுகளால் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் பலதார மணம் நடைமுறையில் இருந்த போதிலும், பொதுவாக, இந்து மதம் பலதார மணத்தை ஊக்குவிக்கவில்லை. இந்து மதத்தின் முக்கிய அம்சம் சரியான சடங்குகள் மற்றும் நடைமுறைகள் மூலம் திருமணமான ஒரு வாழ்க்கை துணையுடன் உண்மையுடன் இணைக்கப்படுவதுதான். இந்த வாழ்க்கைத் துணையுடன், ஒரு நபர் காதலையும் காமத்தையும் அனுபவிக்க முடியும், ஆனால் மற்ற நபர்களை மரியாதையுடனும் பயபக்தியுடனும் பார்க்க வேண்டும், ஒருபோதும் காமக்கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.

நிறைவேற்றுவதில் மிதமான தன்மை
ஒழுங்குபடுத்தப்பட்ட சமநிலை என்பது இந்து மதத்தில் பல கருத்துகள் மற்றும் சித்தாந்தங்களின் அடிப்படையாகும். வாழ்க்கைத் துணையுடன் ஒரு இன்பமான காதல் மற்றும் பாலியல் செயலில் ஈடுபடுவது ஒருபோதும் விமர்சிக்கப்படுவதோ அல்லது தடைசெய்யப்படுவதோ இல்லை என்றாலும், மதம் எப்போதுமே வாழ்க்கையின் மற்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதை இழந்துவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தை வலியுறுத்துகிறது, வாழ்க்கையின் மற்ற முக்கிய அம்சங்களிலிருந்தும் இத்தகைய ஈடுபாட்டை புராணங்கள் ஆதரிக்கிறது.

காமம் பற்றிய நம்பிக்கைகள்
மதம் பாலினத்தை முக்கியமாக ஒரு தெய்வீக செயலாகவும், பூமியில் மனித தலைமுறையை இனப்பெருக்கம் செய்வதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒரு வழிமுறையாக கருதுகிறது. ஆகவே, தனக்கும் சமூக அமைப்பின் நல்ல நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு வரம்பைத் தாண்டி சுய திருப்திக்காக ஒருபோதும் இதனை துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது அல்லது தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று புராணங்கள் கூறுகிறது.



Click it and Unblock the Notifications