Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
உங்க குரு அல்லது ஆசிரியரை ரொம்ப பிடிக்குமா? அப்ப அவர்களுக்கு இத அனுப்புங்க...ஷாக் ஆகிடுவாங்க!
குரு பூர்ணிமா என்பது தங்கள் சீடர்களையும் மாணவர்களையும் அறிவு மற்றும் ஞானத்துடன் வழிநடத்திய அனைத்து குருக்கள் மற்றும் கல்வி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்து பாரம்பரிய விழாவை குறிக்கிறது.
குரு பூர்ணிமா என்பது தங்கள் சீடர்களையும் மாணவர்களையும் அறிவு மற்றும் ஞானத்துடன் வழிநடத்திய அனைத்து குருக்கள் மற்றும் கல்வி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்து பாரம்பரிய விழாவை குறிக்கிறது. குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (ஜுன் - ஜூலை) வரும் பௌர்ணமி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இந்த நாள் இந்துக்களின் இதிகாசமான மகாபாரதத்தின் ஆசிரியரும் ஒரு கதாபாத்திரமான வேத வியாசரின் பிறந்தநாள் என்று நம்பப்படுகிறது. கௌதம புத்தர் தனது முதல் பிரசங்கத்தை உத்தர பிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் இந்த நாளில் நிகழ்த்தினார் என்றும் பௌத்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு, குரு பூர்ணிமா ஜூலை 13 அன்று கொண்டாடப்படுகிறது.

குருக்கள் இந்து பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர் மற்றும் கடவுளின் தூதுவர்களாகவும், அவர்களின் சீடர்களுக்கு இரண்டாவது பெற்றோராகவும் கருதப்படுகிறார்கள். மாணவர்கள் பொதுவாக இந்த நாளில் தங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் ஆசியைப் பெறுவதன் மூலமும் மரியாதை செலுத்துகிறார்கள். உங்களுக்குப் பிடித்த குருக்களுக்கு இந்த நல்ல நாளில் அவர்களைச் சிறப்பாக உணர செய்ய நீங்கள் அனுப்பக்கூடிய சில மேற்கோள்கள் மற்றும் செய்திகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வாழ்த்து 1
இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
அனைத்து குருக்களும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
பல மேதைகளை அறிவாளிகளை அறிஞர்களை உருவாக்கிய அனைத்து குருக்களையும் இந்நாளில் வணங்குகிறோம். குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
குருவை விட உயர்ந்த தெய்வம் இல்லை, குருவின் அருளை விட சிறந்த அருள் இல்லை. குருவை வணங்குவதை விட உயர்ந்த நிலை இல்லை. -முக்தானந்தா

வாழ்த்து 5
இந்த சமூகத்தில் ஒரு நல்ல மாணவனாக மனிதனாக இருப்பதற்கு என்னுடைய குருவே முதல் காரணம். என் குருவுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து வாழ்க்கையில் அவர்களை உயர்தவர்களாக மாற்ற உழைக்கும் அனைத்து குருக்களுக்கும் குறு பூர்ணிமா வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
கற்பிப்பது என்பது பேசுவது அல்ல, கற்பித்தல் கோட்பாடுகளை வழங்குவதில்லை, அது தொடர்புகொள்வது.- சுவாமி விவேகானந்தர்

வாழ்த்து 8
நீங்கள் என்னை எனக்கு அறிமுகப்படுத்தி சரியான வழியைக் காட்டினீர்கள். என்னை நானாக ஆக்கியதற்கு நன்றி. குரு பூர்ணிமா வாழ்த்துகள்!

வாழ்த்து 9
குரு, கடவுள் இருவருமே என் முன் தோன்றுகிறார்கள். யாரை நான் முதலில் வணங்க வேண்டும்? கடவுளை எனக்கு அறிமுகப்படுத்திய என் குருவையே முதலில் வணங்குகிறேன். - கபீர்

வாழ்த்து 10
உலகில் எந்த மனிதனும் மாயையில் வாழ வேண்டாம். குரு இல்லாமல் யாராலும் வாழ்க்கையை கடக்க முடியாது.- குருநானக்



Click it and Unblock the Notifications











