Just In
- 14 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி கொண்டாடுவதற்கு பின்னால் இருக்கும் வரலாற்று காரணம் என்ன தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி என்று அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நாள் உலகம் முழுவதும் பரவலாக அனுசரிக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு புனித வெள்ளி 2020 நாளை (ஏப்ரல் 10) கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளி பற்றிய சில விவரங்களை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.
புனித வெள்ளி நோன்பு
ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி என்று அனுசரிக்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் நாள் முழுவதும் நோன்பையும் தவத்தையும் புனித வெள்ளியன்று கடைப்பிடிப்பார்கள்.
MOST READ: வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிடுவதால் உங்க உடலில் என்னென்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?
புனித வெள்ளி வரலாறு
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் புனித வெள்ளி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த சொல் வேறு சில மத புத்தகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நூல்களில், இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோட்டுக்குப் பிறகு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
300 வெள்ளி நாணயங்கள்
இயேசு கிறிஸ்துவைக் கைது செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் யூதாஸ் நேராகச் சென்றார். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தகவல் வீரர்களுக்கு தெரிவிக்க யூதாஸ் 30 வெள்ளி நாணயங்களை வாங்கிக் கொண்டார். முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றின் படி இயேசு எருசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
சிலுவையில் அறையப்பட்டார்
இறுதியில், இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டார். பின்னர், இயேசு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு செல்ல பணிக்கப்பட்டார். கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். பின்னர், அவர் கொடூரமாக சிலுவையில் அறையப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இயேசு இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்தார், அதாவது ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என மக்களால் நம்பப்படுகிறது.
MOST READ: எச்சரிக்கை! திடீரென உங்க எடை குறைந்தால் உங்களுக்கு இந்த மோசமான நோய்கள் இருக்க வாய்ப்புள்ளதாம்...!
புனித வெள்ளியின் முக்கியத்துவம்
கிறிஸ்துவ பக்தர்கள் இந்த நாளை இயேசு கிறிஸ்துவின் பேரார்வம், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் மரணம் என்று அனுசரிக்கின்றனர். இந்த நாளில் நோன்பைக் கடைப்பிடித்து பலர் சமூக சேவைகளில் தீவிரமாக பங்கேற்கிறார்கள். சர்ச் சேவைகளுக்கும் அவை பங்களிக்கின்றன.
மெழுகுவர்த்தி ஏறுவதில்லை
கிருஸ்துவ பாதிரியார்கள் இந்த நாளில் கருப்பு அடையாளத்தை அணிந்து தேவையான சடங்குகளை இந்த நாளில் செய்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்துவதற்காக, பக்தர்கள் இந்த நாளில் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் வகையில் பலர் மெழுகுவர்த்தியை ஏற்றுவதில்லை.
MOST READ: இந்த பழங்கள் உங்களை அனைத்துவிதமான சிறுநீரக நோய்களில் இருந்தும் பாதுகாக்குமாம் தெரியுமா?
சிலுவைக்கு வணக்கம் செலுத்துவது
இயேசு உயிர்துறந்த சிலுவை கிறித்தவர்களுக்குத் தனிப் பொருள் வாய்ந்த அடையாளம் ஆகும். எனவே, பெரிய வெள்ளிக் கிழமையன்று திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். எரியும் மெழுகுவத்திகள் நடுவே சிலுவை பவனியாகக் கொண்டுவரப்படும். குருவும் மக்களும் சிலுவையைத் தொட்டு முத்தமிடுவது வழக்கம். அப்போது இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை மக்கள் பாடுவார்கள்.
சிலுவைப் பாதை
பெரிய வெள்ளிக் கிழமையன்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற இன்னொரு முக்கிய நிகழ்ச்சி சிலுவைப் பாதை ஆகும். இது அதிகாரப்பூர்வ வழிபாட்டின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பொதுமக்கள் விரும்பி நடத்துகின்ற ஒரு இறைவேண்டல் கொண்டாட்டம் ஆகும். தவக் காலத்தின் வெள்ளிக் கிழமைகளிலும், அதிலும் சிறப்பாகப் பெரிய வெள்ளிக் கிழமையில் சிலுவைப் பாதைக் கொண்டாட்டம் தனிப் பொருள் வாய்ந்ததாகத் திகழ்கின்றது.