Latest Updates
-
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா -
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளி அன்று இவற்றில் ஒன்றை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகுமாம்... ட்ரை பண்ணி தான் பாருங்களேன்..
தீபாவளி பண்டிகை நாளில் ஒருசில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் விலை குறைவான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புள்ளது.
இந்தியாவில் தீபாவளி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த தீபாவளி பண்டிகையின் போது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமானை மகிழ்விக்க மக்கள் பூஜைகளை செய்வார்கள். இப்படி செய்யும் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து தங்கள் வீட்டில் குடிபுகுவாள் என்பது நம்பிக்கை. பொதுவாக பண்டிகை என்றால் புதிய ஆடைகளை வாங்குவோம். சிலர் தீபாவளி பண்டிகையன்று தங்கம், வெள்ளி மற்றும் பிற பொருட்களை வாங்குவார்கள்.

ஆனால் தீபாவளி பண்டிகை நாளில் ஒருசில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் விலை குறைவான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்போது தீபாவளி அன்று எந்த பொருட்களை வாங்குவது செல்வ நிலையை அதிகரிக்கும் என்பதைக் காண்போம். அவற்றை இந்த தீபாவளியில் நீங்களும் வாங்கி நன்மையைப் பெறுங்கள்.

மயில் இறகு
மயில் இறகு மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. தீபாவளி நாளன்று இந்த மயில் இறகை வீட்டிற்கு கொண்டு வருவது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. பொதுவாக மயில் இறகு வீட்டில் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மேலும் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரிபவர்கள் வேலை செய்யும் இடத்தின் தென்கிழக்கு திசையில் மயிலிறகை வைத்திருந்தால், பணத்தட்டுப்பாடு நீங்கி, கையில் பணம் அதிகம் புரளும்.

லட்சுமி குபேரர் சிலை
தீபாவளி நாளில் லட்சுமியின் அருளைப் பெற லட்சுமி பூஜை செய்வது வழக்கம். இப்படி லட்சுமி பூஜை செய்வதாக இருந்தால், தீபாவளி நாளில் லட்சுமி குபேரரின் சிலையை வாங்கி செய்யுங்கள். அதுவும் தீபாவளி நாளன்று லட்சுமி குபேரர் போட்டோவை வீட்டின் பிரதான கதவில் வைப்பது நல்லது. இதனால் வீட்டில் லட்சுமியும், குபேரரும் குடிபுகுந்து வீட்டின் செல்வ நிலையை உயர வழிகாட்டுவார்கள்.

ஆமை சிலை
ஃபெங் சூயி படி, வீட்டில் ஆமை சிலையை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் தீபாவளி நாளன்று உலோகத்தால் ஆன ஆமை சிலையை வீட்டிற்கு வாங்குவது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, செல்வ நிலையும் பெருகும்.

மண்பானை
தீபாவளி நாளில் வீட்டிற்கு மண்பானையை வாங்கி வருவது நல்லது. அதுவும் மண்பானையில் நீரை நிரப்பி, அதை வீட்டின் வடக்கு பகுதியில் வைத்திருந்தால், வீட்டில் உள்ள பண பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும்.

செம்பு அல்லது பித்தளை பிரமீடு
தீபாவளி நாளன்று ஒரு செம்பு அல்லது பித்தளை பிரமீடு வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பிரமீடை வீட்டின் ஹால் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் செலவிடும் பகுதியில் வையுங்கள். இது வீட்டில் உள்ளோரின் வருமானத்தை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications