மத்திய பட்ஜெட் 2022இல் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகள் என்னென்ன தெரியுமா? ஏற்றமா இல்ல ஏமாற்றமா?

கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய மனநல பிரச்சனைகளை தொடர்ச்சிகளைக் காட்டும் அறிவியல் சான்றுகளின் பின்னணியில் இந்த வெளியீடு வந்துள்ளது. தொற்றுநோய்களின் போது, நோயாளிகள் கவலை மற்றும் மனச்சோர்வு மற்றும் 'லாங் கோவிட்' ஆகியவற்றைப்

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் நான்காவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டை இன்று(2022 பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கொரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்து மீண்டும் மீளும்போது, ஓமிக்ரான் பரவல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2022-2023 மத்திய பட்ஜெட்டை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நிர்மலா தாக்கல் செய்தார்.

Budget 2022 Highlights for Health Sector in Tamil

அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெடில், பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீடையும் அறிவித்திருந்தார் நிதியமைச்சர். இதில், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய நிதியை பற்றியும், திட்டங்களை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடந்த ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கான நிதி

கடந்த ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கான நிதி

2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.56,045 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2020இல் சுகாதாரத் துறைக்கு ரூ.69,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் சென்ற 2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, அடுத்த ஆறு ஆண்டுகளில், சுகாதார சேவைகளை மேம்படுத்த, அரசு ரூ.64,180 கோடி செலவிடும் என்று நிர்மலா கூறியிருந்தார்.

மத்திய பட்ஜெட் 2022-2023

மத்திய பட்ஜெட் 2022-2023

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை( (Union Budget 2022) நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 4 வது பட்ஜெட் ஆகும். இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்கள், பெண்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

அரசின் சவால்

அரசின் சவால்

கொரோனா தொற்றுநோய் பரவலின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் சவாலாகும். வேலைவாய்ப்பின்மை, சுகாதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்வது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நிர்மலா சீதாராமன் இன்று தனது நான்காவது மத்திய பட்ஜெட்டை சுகாதாரத் துறையில் முக்கிய கவனம் செலுத்தி தாக்கல் செய்தார்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

பட்ஜெட்டை அறிவிக்கும் போது, நிர்மலா தனது உரையைத் தொடங்கி, சுகாதாரத் துறையை வலுப்படுத்த வலியுறுத்தினார். நாம் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று வகையான ஓமிக்ரான் பரவலின் மத்தியில் இருக்கிறோம் என்று கூறினார் நிர்மலா. இந்தியாவின் முழுமையான தடுப்பூசி கவரேஜ் 75 சதவீதத்தை தாண்டிய நிலையில், தடுப்பூசி இயக்கத்திற்கான உத்வேகம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். தடுப்பூசி பிரச்சாரத்தின் வேகம் பெரிதும் உதவியது என்ற நிர்மலா, சப்கா பிரயாஸ் மூலம், வலுவான வளர்ச்சியைத் தொடருவோம் என்று நம்புவதாகவும் கூறினார்.

தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பு

தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பு

92 நிமிடம் பேசிய பட்ஜெட் உரையில், "தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பிற்கான திறந்த தளம் உருவாக்கப்படும். இது சுகாதார வழங்குநர்களின் டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சுகாதார வசதிகள், தனிப்பட்ட சுகாதார அடையாளம் மற்றும் சுகாதார வசதிகளுக்கான உலகளாவிய அணுகலைக் கொண்டிருக்கும்."என்று நிதியமைச்சர் சீதாராமன் கூறினார்.

தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டம்:

தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டம்:

கோவிட்-19 இன் இரண்டாம் ஆண்டில் மத்திய பட்ஜெட் 2022 ஐ சமர்ப்பித்தபோது, தொற்றுநோய் அனைத்து வயதினருக்கும் மனநலப் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது என்றும் தேசிய டெலி-மெண்டல் ஹெல்த் திட்டத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்ததாகவும் நிர்மலா கூறினார். "தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்த, தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டம் தொடங்கப்படும். நிம்ஹான்ஸ் நோடல் மையமாக இருக்கும் 23 டெலி மென்டல் ஹெல்த் சென்டர்களின் நெட்வொர்க் மற்றும் ஐஐஐடி பெங்களூர் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்" என்றும் அவர் கூறினார்.

மனநல ஆரோக்கியம்

மனநல ஆரோக்கியம்

கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய மனநல பிரச்சனைகளை தொடர்ச்சிகளைக் காட்டும் அறிவியல் சான்றுகளின் பின்னணியில் இந்த வெளியீடு வந்துள்ளது. தொற்றுநோய்களின் போது, நோயாளிகள் கவலை மற்றும் மனச்சோர்வு மற்றும் 'லாங் கோவிட்' ஆகியவற்றைப் புகாரளிக்கின்றனர். கொரோனாவிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் மூட் ஸ்விங்கை அனுபவிக்கிறார்கள். இதனால்,தெளிவாக சிந்திக்க முடியாது. மேலும் நரம்பியல் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர்.

சுகாதாரத் துறையில் முன்னேற்றம்:

சுகாதாரத் துறையில் முன்னேற்றம்:

112 ஆர்வமுள்ள மாவட்டங்களில் 95% சுகாதாரம் மற்றும் பிற அளவுருக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், பின்தங்கிய மாவட்டங்களில் வேலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஏமாற்றம் தரும் பட்ஜெட்

ஏமாற்றம் தரும் பட்ஜெட்

பொருளாதார மற்றும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் பட்ஜெட்டில் நிறைய எதிர்வினைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வேலைவாய்ப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான ஒரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, February 1, 2022, 17:07 [IST]
Desktop Bottom Promotion