Just In
- 2 min ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 37 min ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 2 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வடஇந்தியாவில் தீபாவளியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் பாய் தூஜ்.. அது என்ன பண்டிகை தெரியுமா?
பாய் தூஜ் பண்டிகையானது ஐப்பசி அமாவாசை முடிந்த 2வது நாள் கொண்டாடப்படுகிறது. பாய் தூஜ் பண்டிகையானது சகோதர-சகோதரிகளின் பாச பிணைப்பை போற்றி கொண்டாடும் தினமாகும்.
தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளியைத் தொடர்ந்து தந்தேராஸ் முதல் பாய் தூஜ் வரை 5 நாட்கள் கொண்டாட்டம் தான். அந்த வகையில், பாய் தூஜ் பண்டிகையானது ஐப்பசி அமாவாசை முடிந்த 2வது நாள் கொண்டாடப்படுகிறது. பாய் தூஜ் பண்டிகையானது சகோதர-சகோதரிகளின் பாச பிணைப்பை போற்றி கொண்டாடும் தினமாகும். ரக்ஷாபந்தனை போலவே இதுவும் உடன்பிறப்புகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் விழா. பாய் என்றால் சகோதரன் மற்றும் தூஜ் என்றால் அமாவாசைக்கு பிந்தைய 2வது நாள் ஆகும்.
பாய் தூஜ்
ரக்ஷாபந்தன் தவிர, சகோதரிகள் செழிப்புக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும், தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காகவும், கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் பாய் தூஜ் ஆகும். இது இந்தியா, நேபாளம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். பாய் தூஜ் பண்டிகையானது பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் யம த்விதியா என்று கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் இது பாய் ஃபோண்டா என்றும், நேபாள மக்கள் அதை பாய் டிகா என்று கொண்டாடுகிறார்கள்.
பாய் தூஜ் வரலாறு
பாய் தூஜ் பண்டிகையின் தோற்றத்திற்குப் பின்னால் சில இந்து புராணக் கதைகள் உள்ளன. அதன்படி, மரணத்தின் கடவுளான யமன், கார்த்திகை மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் த்விதிய திதியில் தனது சகோதரி யமுனா தேவியை தரிசித்து அவளிடமிருந்து உணவைப் பெற்றதாக நம்பப்படுகிறது. சகோதரி யமுனா தனது சகோதரனை திலகமிட்டு வரவேற்றார். அப்போதிருந்து, இந்த நாள், சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான அன்பு, அக்கறை மற்றும் பிணைப்பின் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்து திலகம் வைத்து கொண்டாடுகிறார்கள்.
பாய் தூஜ் பண்டிகை தேதி
தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பாய் தூஜ் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி, ஐப்பசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 2 வது நாளில் திருவிழா நடைபெறுகிறது. அதுவே, கிரிகோரியன் நாட்காட்டியின்படி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு பாய் தூஜ் விழா அக்டோபர் 26ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
சுப முகூர்த்த நேரம்
பஞ்சாங்கத்தின்படி, அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 2.42 மணிக்கு தொடங்கி அக்டோபர் 27 ஆம் தேதி மதியம் 12.45 மணிக்கு முடிவடையும். சடங்குகளுக்கான சுப முகூர்த்தம் மதியம் 1.12 மணி முதல் 3.26 மணி வரை சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடிக்கும். இந்த மங்களகரமான கால நேரத்தில் சகோதரிகள் தனது சகோதரர்களுக்கு திலகமிடலாம்.
பாய் தூஜின் சடங்குகள்
சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு அரிசி மாவு கோலத்துடன் அலங்கரித்த ஒரு இருக்கையை உருவாக்கி அமர செய்யவும். பின்னர், தங்கள் சகோதரர் நெற்றியில் குங்குமம், தயிர், அசிரி கலந்த கலவையால் திலகமிடவும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் சகோதரர்களின் உள்ளங்கையில் பூக்கள், வெற்றிலை பாக்கு மற்றும் நாணயங்களை வைத்து, தண்ணீர் ஊற்றி மெதுவாக மந்திரங்களை உச்சரிக்கவும். பின்னர் கயிறை கையில் கட்டி முடித்ததும், ஆரத்தி எடுக்கவும். இறுதியாக, இந்த சடங்கை முடிக்க சகோதரிகள் சகோததர்களுக்கு தண்ணீருடன் இனிப்புகளையும் கொடுக்க வேண்டும்.