Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
ஆண்களை வசியம் செய்ய அவர்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் இரத்தத்தை கலக்கும் விசித்திர பழக்கம்...!
பெண்களின் மாதவிடாய் இரத்தம் குறித்த பல நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் பண்டையகாலம் முதல் இப்போது வரை நிலவி வருகிறது.
பெண்களின் மாதவிடாய் இரத்தம் குறித்த பல நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் பண்டையகாலம் முதல் இப்போது வரை நிலவி வருகிறது. பெண்களின் மாதவிடாய் இரத்தம் தொழுநோயை குணப்படுத்தும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் இதுபோன்ற பல நம்பிக்கைகள் பெண்களின் மாதவிடாயை சுற்றி பண்டைய காலத்தில் இருந்தது.

இந்த நம்பிக்கைகள் அனைத்தும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும். பெண்களின் மாதவிடாயின் போது வெளிப்படும் இரத்தத்திற்கு பல அற்புத சக்திகள் இருந்ததாக நம் முன்னோர்கள் நம்பினார்கள். இந்த பதிவில் மாதவிடாய் இரத்தத்தைப் பற்றி இருந்த வினோதமான நம்பிககைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

மாதவிடாய் குறித்த நம்பிக்கைகள்
ரோமானிய இயற்கையியலாளர் பிளினி தி எல்டர், மாதவிடாய் குறித்த திகிலூட்டும் பல கருத்துக்களுக்காக அறியப்பட்டவர். அவரின் கருத்துக்களின் படி, " மாதவிடாயில் இருக்கும் பெண்ணுடன் உறவு கொண்டால் புதிய ஒயின் கூட புளிப்பாக மாறும், பயிர்கள் வாடிப்போகும், பூச்சிகளை கொன்றுவிடும், தோட்டங்களில் விதைகளை காயவைக்கும், மரங்களில் பழங்களை உதிர வைக்கும், கண்ணாடியின் பிரகாசமான மேற்பரப்பை மங்கச் செய்கிறது, எஃகு விளிம்பை மங்கச் செய்கிறது தந்தத்தின் ஒளி, தேனீக்களைக் கொன்று, இரும்பு மற்றும் வெண்கலத்தை துருப்பிடித்து, காற்றை நிரப்ப ஒரு பயங்கரமான வாசனையை ஏற்படுத்தும். " என்று கூறினார்.

மாதவிடாய் இரத்தம் தொழுநோயை ஏற்படுத்தி குணப்படுத்தும்
இடைக்கால ஐரோப்பாவில் உள்ள மக்கள், மாதவிடாய் இரத்தத்தை "ஏவாளின் சாபம்" என்று கருதினாலும், இது தொழுநோய் போன்ற ஒரு தீவிர நோயைக் குணப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த விஷயம் என்று நம்பினர்.

ஆண்களுக்கும் மாதவிடாய்
சில இடைக்கால கிறிஸ்தவ அமைப்புகளும், அறிஞர் வில்லிஸ் ஜான்சனும் ஒவ்வொரு மாதமும் யூத ஆண்களும் இரத்தம் கொட்டுவதாக ஒரு வதந்தியை பரப்பினர். கடந்த நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை கூட இந்த நம்பிக்கை நிலவியது.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் அரக்கர்கள் பிறப்பார்கள்
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதை தவிர்க்க உலகம் முழுவதும் பல நம்பிக்கைகளும், கருத்துக்களும் உருவாக்கப்பட்டது. அதில் முக்கியமானது பிரெஞ்சு சமூகத்தில் நிலவியதாகும். அவர்களின் நம்பிக்கைப்படி மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் அரக்கர்கள் பிறப்பார்கள் என்று நம்பினார்கள்.

மாதவிடாய் வரும் பெண்கள் சூனியக்காரிகளாக கருதப்பட்டனர்
பண்டைய ரோமானியர்கள் மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருந்த பெண்கள் இருண்ட மந்திரவாதிகள் என்று நம்பினர், அவர்கள் ஆலங்கட்டி மழை, சூறாவளியை நிறுத்த முடியும் என்று நம்பினார்கள். மேலும் அவர்கள் பயிர்களை அழிக்க முடியும் என்று நினைத்தார்கள்.

இரத்தப்போக்கை கட்டுப்படுத்த தவளைகள் எரிக்கப்பட்டது
ஒரு தொட்டியில் ஒரு தவளையை எரிப்பதன் மூலமும், அதன் சாம்பலை பெண்களின் யோனிக்கு அருகில் ஒரு பையில் போட்டு கட்டிக்கொள்வதன் மூலம் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் என்று இடைக்கால ஐரோப்பியர்கள் நம்பினர்.

மாதவிடாய் இரத்தத்தை குடிப்பது பாலியல் ஆசையை அதிகரிக்கும்
உலகின் பல பகுதிகளிலும் இன்றும் நிலவும் திகிலூட்டும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். ஆப்பிரிக்காவில் ஒரு ஆணின் காபி அல்லது வேறு பானங்களில் பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தை கலப்பது அவரை அந்த பெண்ணிடம் மயங்க வைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வழக்கம் இந்தியாவிலும் இருந்தது.

இந்தியாவில் நிலவும் நம்பிக்கைகள்
இந்தியாவில் மாதவிடாய் குறித்து பல மூடநம்பிக்கைகள் நிலவி வருகிறது. இந்தியாவில் மாதவிடாயில் இருக்கும் பெண்கள் எந்தவொரு புனித செடிகளுக்கும் அருகில் செல்ல அனுமதியில்லை. பெண்களின் மாதவிடாய் அவர்களை புனிதமற்றவர்களாக மாற்றுவதாக கூறப்படுகிறது, இதனால் அவர்கள் தொடும் பூக்களும் புனிதமற்றதாக மாறுவதாக மூடநம்பிக்கை இன்றும் நிலவி வருகிறது.

ஊனமுற்ற குழந்தைகள்
நமது முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரித்தார்கள். ஏனெனில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக பிறப்பார்கள் என்று கூறினர். ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை.



Click it and Unblock the Notifications











