Latest Updates
-
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க பணமழையில் நனையப் போறாங்களாம் -
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க.. -
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
யாரெல்லாம் இறந்த பின் பேயாக சுற்றிவருவார்கள் என்று கருட புராணம் கூறுகிறது தெரியுமா?
பொதுவாக மனித வாழ்க்கையின் சுழற்சி என்பது ஒரு ஆன்மா பிறக்கிறது அதன் பின் உடலை விட்டு பிரிந்து மீண்டும் அதன் சுழற்சியை தொடங்குகிறது.
உலகில் இருக்கும் அனைவருக்கும் பொதுவான விஷயம் பசி, தாகம், தூக்கம் மட்டுமல்ல மரணமும்தான். பூமியில் பிறந்த அனைவருமே கண்டிப்பாக இறந்துதான் ஆகவேண்டும். அனைத்து மதங்களிலும் மரணம் பற்றிய கருத்தானது ஒன்றுதான். அனைத்து மதங்களிலும் மரணத்திற்கு பிறகான மறுவாழ்க்கை பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

பொதுவாக மனித வாழ்க்கையின் சுழற்சி என்பது ஒரு ஆன்மா பிறக்கிறது அதன் பின் உடலை விட்டு பிரிந்து மீண்டும் அதன் சுழற்சியை தொடங்குகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த ஆன்மா மேல் உலகத்திற்கு செல்லும் அல்லது பூமியில் பேயாக சுற்றும் என்று புராணங்கள் கூறுகிறது. இறந்த ஆன்மாக்கள் எப்படி மறுஉலகத்தில் பேயாக சுற்றுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தர்மம் - கர்மா
மனித வாழ்க்கை என்பது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மனித உருவில் இருக்கும் போது ஆன்மா வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை எதிர்கொள்கிறது. அவற்றின் செயலை பொறுத்துதான் அதன் கர்மா மற்றும் தர்மம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆன்மாவின் பிரிவு
கருட புராணத்தின் படி மரண உலகில் இறப்பிற்கு பிறகு உடல் மட்டுமே அழிகிறது அதன் பிறகு அதன் கர்ம பலன்களை பொறுத்து ஆன்மா அடுத்த வாழ்விற்கு தயாராகிறது. ஆன்மாவும், உடலும் ஒன்றை ஒன்று சார்ந்தவை ஒன்று இல்லாமல் மற்றொன்று இருப்பது கடினமாகும்.

ஆன்மாவின் விடுதலை
மரணத்திற்கு பிறகு ஆன்மாவிற்கு இரண்டு நிலைகள் உள்ளது. ஒன்று விடுதலை மற்றொன்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பது. விடுதலை அடையும் ஆன்மா மறுவுலகில் கடவுளை உணர்ந்து நித்திய வாழ்க்கையை வாழும்.

கட்டுப்பாட்டில் இருக்கும் ஆன்மா
கட்டுப்பாட்டிற்குள் ஆன்மாவானது மரணத்திற்கு பிறகு சொர்க்கத்திற்கு செல்லும் அல்லது நரகத்திற்கு செல்லும். அவர்களின் பாவங்களை பொறுத்து இது முடிவு செய்யப்படும். புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், பாவம் செய்தவர்கள் நரகத்தில் அவர்களின் பாவங்களுக்கான தண்டனைகளையும் அனுபவிப்பார்கள்.

சிக்கிக்கொள்ளும் ஆன்மா
பொதுவாக ஆன்மாக்கள் விடுதலை அடையாமல் சிக்கிக்கொள்ள காரணம் அவர்களின் நிறைவேறாத ஆசைகளாக இருக்கலாம். அது காதலாகவோ அல்லது உறவுகளாகவோ அல்லது செய்யாமல் விட்ட கடமையாகவோ இருக்கலாம். இது அவர்கள் ஆவி அல்லது பேயாக இருக்கும் நிலைக்கு தள்ளுகிறது.

பேய்
ஆன்மாவானது பேய் வடிவத்தில் இருக்கும்போது அது மூன்று மூலக்கூறுகளால் ஆனதாக இருக்கிறது. அவை காற்று, ஆற்றல் மற்றும் வெற்றிடம் ஆகும். பிறப்பு மற்றும் இறப்புக்கு இடையே இருக்கும் சுழற்சியை முடிக்காதவரை அதாவது 84 லட்சம் உயிரினங்களாக பிறக்காத வரை அந்த ஆன்மா விடுதலை நிலையை அடைய இயலாது.

இறுதி சடங்குகள்
சிலசமயம் ஆன்மாவின் நிறைவேறாத ஆசைகள் அவற்றை மரணத்திற்கு பிறகு உலகத்தை விட்டு நிறைவேறாமல் தடுக்கிறது. இந்த மத நம்பிக்கைகளில் இறுதி சடங்குகள் ஆன்மாக்களுக்கு அமைதியையும், மோட்சத்தையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.

ஆன்மாவின் வேதனை
மரண உலகத்திற்கும், மேல் உலகத்திற்கும் இடையே மாட்டிக்கொள்ளும் ஆன்மாக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகக்கூடும். இந்த ஆன்மாக்கள் நம்மிடையேதான் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல்,சிலசமயம் அவை தாங்கள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்.

பித்ரு தோஷம்
சிலசமயம் ஆன்மாக்கள் தன் குடும்பத்தினரின் வேலைகளையும், அமைதியையும் கெடுப்பதன் மூலம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். சாஸ்திரங்களின் படி இது பித்ரு தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பித்ரு தோஷத்தை சரிபண்ணும் சில வழிகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

அவர்களின் கடைசி ஆசையை மதிக்க வேண்டும்
ஒருவேளை இறந்தவர்களுக்கு ஏதேனும் கடைசி ஆசையோ அல்லது நிரவிராத ஆசையோ இருந்தால் அவரது குடும்பத்தினர் அவர் இருந்த 13 நாட்களுக்குள் அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும். இந்த மதத்தின் படி ஆன்மாக்கள் இந்த காலக்கட்டத்தில் அவர்கள் குடும்பத்தினரை சுற்றியேதான் இருக்கும்.

மாதம்தோறும் பிண்டம் வைத்தல்
ஒவ்வொரு மாத பௌர்ணமியின் போதும் இறந்தவரது மூத்த மகன் அல்லது சகோதரன் பிண்ட தானம் செய்ய வேண்டும். இது இறந்தவர்களுடைய ஆன்மாவை அமைதிப்படுத்தும்.



Click it and Unblock the Notifications