Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுமாம்..!
பொதுவாகவே பிரதோஷம் விசேஷமான நாள்தான், அதிலும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷங்கள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியதாகும்.
இந்து மதத்தில் முக்கியமான பல தினங்கள் உள்ளது. அவற்றில் சில வருடம் ஒருமுறை வருவதாக இருக்கும். சில தினங்கள் மாதம் ஒருமுறை வருவதாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு தினங்களில் கடவுளை வழிபடுவது நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்ற உதவும். அந்த வகையில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட பல நாட்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தன்று ஈசனை வழிபடுவது சற்று கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

பொதுவாகவே பிரதோஷம் விசேஷமான நாள்தான், அதிலும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷங்கள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியதாகும். பிரதோஷ வழிபாட்டை போலவே பிரதோஷ விரதமும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியதாகும். இந்த பதிவில் பிரதோஷம் பற்றி தெரியாத தகவல்களையும், பிரதோஷ வழிபாட்டின் பயன்களையும் பார்க்கலாம்.

பிரதோஷம்
பிரதோஷ விரதம் என்பது இந்து மதத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க, மகிமைவாய்ந்தக விரதங்களில் ஒன்றாகும். சிவபெருமானிற்காக கடைபிடிக்கப்படும் இந்த விரதமும், வழிபாடும் சிவபெருமானை மனதை குளிரச்செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமியில் இருந்து 13 வது நாள் பிரதோஷமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பிரதோஷம் எதை குறிக்கிறது
பிரதோஷம் என்பது சூரியன் மற்றும் சந்திரன் தங்களது அச்சில் ஒன்றுக்கொன்று நேர்கோட்டில் இருக்கும் நேரத்தை குறிப்பதாகும். வேதங்களின் படி இந்த நேரம் சிவபெருமானை வழிபட மிகச்சிறந்த நேரமாகும். சோம பிரதோஷம் சிவபெருமானை வழிபட என்பது மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது.

பிரதோஷத்தின் கதை
புராணங்களின் படி நாகங்களின் ராஜாவான வாசுகி என்னும் பாம்பை கொண்டு பாற்கடலை கடைந்தபோது அதற்கு பல காயங்கள் ஏற்பட்டது. அந்த காயத்தின் விளைவாக வாசுகி உலகத்தையே அழிக்க கூடிய கொடிய விஷத்தை கக்கியது. உலகத்தில் இருந்த அனைத்து உயிர்களையும் காப்பாற்ற சிவபெருமான் முன்வந்தார்.

நீலகண்டன்
வாசுகியிடம் இருந்து வெளிப்பட்ட விஷத்தை சிவபெருமான் பெற்றுக்கொண்டார். சிவபெருமானை காப்பாற்றும் பொருட்டு தேவி பார்வதி தன் அற்புத சக்தியின் மூலம் அந்த விஷத்தை ஈசனின் தொண்டைக்கு கீழே செல்லாமல் தடுத்தார். அதனால் சிவபெருமானின் தொண்டை நீல நிறமாக மாறியது. அதனால்தான் சிவபெருமான் நீலகண்டன் என்னும் பெயர் பெற்றார்.

த்ரயோதசி
தாங்கள் செய்த தவறை உணர்ந்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தங்களை மன்னிக்கும்படி கெஞ்சினர். தவறை உணர்ந்த அவர்களை மன்னித்து அவர்களை ஆசீர்வதித்தார் சிவபெருமான். அந்த குறிப்பிட்ட நேரம்தான் பிரதோஷம் அல்லது த்ரயோதசி என்று அழைக்கப்பட்டது. புராணங்களின் படி அந்த குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் அவர்களின் வேண்டுதல்கள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு
பெரும்பாலான மக்கள் பிரதோஷத்தன்று விரதமிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரதோஷ பூஜை அபிஷேகத்துடன் எப்பொழுதும் நாளின் பிற்பகுதியில்தான் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகமானது சூரியன் மறையும் 48 நிமிடத்திற்கு முன்னர் தொடங்கி சூரியன் மறைந்த 144 நிமிடங்கள் வரை செய்யப்படும். அந்த நேரத்தில் நந்தி தேவனை வழிபடுவது நல்ல பயன்களை அளிக்கும். பிரதோஷ வழிபாட்டினால் விளையும் நன்மைகள் என்னென்ன என்றும் தொடர்ந்து பார்க்கலாம்.

பாவங்கள் மன்னிக்கப்படும்
புராணத்தின் படி சிவெபருமான் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை குடித்தார். தேவர்கள் மற்றும் அசுரர்களின் பாவங்களை மன்னித்தார். எனவே அந்த நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது நீங்கள் செய்த பாவத்தில் இருந்து உங்களை மன்னித்து பாதுகாப்பதுடன் உங்களுக்கு முக்தியையும் அளிக்கும்.

வெற்றி
பிரதோஷ வழிபாடு உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை அளிக்கும். பிரதோஷ தினத்தன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை வேலையில் சிவபெருமானை வில்வ இலை கொண்டு வழிபடும் போது உங்களின் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கை வெற்றியின் பாதை பக்கம் திரும்பும்.



Click it and Unblock the Notifications











