Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
கிரகணம் முடியும் நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
சூரிய கிரகண தினத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக கிரகண நாள், சுப காரியங்களைச் செய்வதற்கு பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இவை "சுதக் கல்" நேரத்திலிருந்தே தவிர்க்கப்பட வேண்டும். "சுதக் கல்" என்பது சந்திர கிரகணத்திற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்போ அல்லது சூரிய கிரகணத்திற்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்போ தொடங்கும் நேரத்தைக் குறிக்கிறது.

சில நல்ல விஷயங்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. இந்நேரத்தில், கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் கீழுள்ள சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கிரகணத்தின் போது வெளியே செல்ல வேண்டாம்:
கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது வெளியே செல்லக்கூடாது. இது கருவை நேரடியாக பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக குழந்தை அவரது உடலில் சிவப்பு அடையாளங்களுடன் பிறக்கிறது மற்றும் அந்த அடையாளங்கள் நிரந்தரமானவை என்றும் கூறப்படுகிறது.

கூர்மையான
கிரகணத்தின் போது கூர்மையான முனைகள் கொண்ட பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
கர்ப்பிணிப் பெண்கள் கத்தி, ஊசி மற்றும் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான முனைகள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில், கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, அவளுடைய கணவரும் இந்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. கிரகணத்தின் போது இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவது குழந்தையின் உடல் பாகங்களைப் பாதிக்காலம்.

உணவு வேண்டாம்:
கிரகண நேரத்தில் சமைத்த உணவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால், கிரகணத்தின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உணவை மாசுபடுத்துகின்றன, எனவே இது குழந்தையின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் "சுதக் கல்" காலத்தில் உணவைச் சாப்பிட வேண்டியிருந்தால், அதில் துளசி இலைகளை சேர்த்த பின்னரே உட்கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும் துளசி இலைகளை அகற்றலாம். இவ்வாறு செய்வது கிரகணத்திற்குப் பிறகும் உணவைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

கிரகணத்திற்குப் பிறகு குளிக்கவும்
கிரகணம் முடிந்தவுடன் கர்ப்பிணிப் பெண்கள் குளிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது, இல்லையெனில் குழந்தை தோல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படக்கூடும்.

தூங்குவதைத் தவிர்க்கவும்:
கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது தூங்கக்கூடாது, இது மீண்டும் குழந்தைக்கு கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஒருவர் தூங்கும்போது எதிர்மறை ஆற்றல் வேகமாக அவரைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications











