Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
கிருஷ்ணருக்கும் துரதிர்ஷ்டத்தின் எண்ணான 8 க்கும் உள்ள ரகசிய தொடர்புகள் என்ன தெரியுமா?
பொதுவாக எண் 8 ஆனது துரதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. வீடோ, வண்டியோ ஏன் செல்போன் எண் கூட 8 ல் முடிந்து விடக்கூடாது என்று எண்ணுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
உலகத்தை காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்டுவதே மகாவிஷ்ணுவின் பணியாகும். அதற்காகத்தான் பூமியில் அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் அதனை அழித்து பூமியை ரட்சிக்க மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் உலக நன்மைக்காக பல வாதங்கள் செய்யப்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

மஹாவிஷ்ணுவின் அவதாரத்தில் அனைவருக்கும் பிடித்த அவதாரம் என்றால் அது கிருஷ்ணர் அவதாரம்தான். பூமியின் பாரத்தை குறைக்கவும், அதர்மத்தை அழிக்கவும் கிருஷ்ணராய் பிறந்து அவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணற்றவை. கிருஷ்ண அவதாரத்தில் நாம் பலரும் கவனிக்காத ஒரு அம்சங்கள் நிறைய உள்ளன. அதில் ஒரு அம்சத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 8
பொதுவாக எண் 8 ஆனது துரதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. வீடோ, வண்டியோ ஏன் செல்போன் எண் கூட 8 ல் முடிந்து விடக்கூடாது என்று எண்ணுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் 8 ஆம் எண் என்பது துரதிர்ஷ்டமான எண் கிடையாது என்பதே உண்மை. 8 ஆம் எண்ணின் வடிவம் முடிவிலியை குறிப்பதாகும். 8 என்பது முடிவிலா அன்பு, முடிவிலா மகிழ்ச்சி போன்றவற்றின் அடையாளமாகும். நீங்கள் நன்கு கவனித்து பார்த்தால் கிருஷ்ணருக்கும், 8 ஆம் எண்ணுக்கும் பல சுவாரஸ்யமான தொடர்புகள் இருக்கும். அந்த தொடர்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அவதாரம்
விஷ்ணு மொத்தம் பத்து அவதாரங்களை எடுப்பார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. அதில் பெரும்பாலானோருக்கு பிடித்த அவதாரமான கிருஷ்ண அவதாரம்தான் எட்டாவது அவதாரம் ஆகும். எட்டுக்கும், கிருஷ்ணருக்குமான தொடர்பு இங்கிருந்தே தொடங்கிவிட்டது.

பிறப்பு
கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்பாகவே கம்சனிடம் அசரீரி கூறியது என்னவெனில் தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் கம்சனின் உயிரை பறிக்கும் என்பதாகும். பிறக்கும் போதே எட்டாம் எண்ணுடன் தொடர்புடன்தான் பிறந்தார் கிருஷ்ணர்.

பிறந்தநாள்
கிருஷ்ணர் எப்படி தேவகிக்கும், வாசுதேவருக்கும் எட்டாவது மகனாக பிறந்தாரோ அதேபோல கிருஷ்ண பக்ஷ தொடங்கிய எட்டாவது நாளில்தான் பிறந்தார். இது மட்டுமின்றி எட்டு கிருஷ்ணரின் வாழ்க்கையுடன் பல வழிகளில் தொடர்பு கொண்டது.

மனைவிகள்
கிருஷ்ணருக்கு கோபியர்களையும் சேர்த்து மொத்தம் 16008 மனைவிகள் இருந்தனர். ஆனால் அவர் தன்னுடைய ராணிகளாக ஏற்றுக்கொண்டது ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, களின்டி, மித்ரவிந்தா, நாகனஜிதி, பத்ரா மற்றும் லக்ஷ்மணா என்னும் 8 பெண்களைத்தான். இவர்கள்தான் கிருஷ்ணரின் அஷ்டபார்யாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

கோபியர்கள்
கிருஷ்ணரின் வாழ்க்கையில் கோபியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து அவனிடம் சிக்கியிருந்த அனைத்து கோபியர்களையும் மீட்டார் . இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் மீட்ட கோபியர்களின் எண்ணிக்கை 16100 ஆகும். அதன் கூட்டுத்தொகையை என்னவென்று பார்த்தால் 1+6+1+0+0= 8.

பகவத்கீதை
குருஷேத்திர போர் தொடங்கிய போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய வாழ்க்கை இரகசியங்களே பகவத்கீதை என்னும் மாபெரும் நூலாக மாறியது. இதில் நான்காம் அத்தியாயத்தில் 8 வது ஸ்லோகம் திரும்ப திரும்ப மகாபாரதத்தில் வரும். அது " பரீத்ராணாய சாதுனாம் வினைசேஷாய தஸ்க்ரித்தாம் தர்ம சமஸ்தபணர்த்தாய சம்வவாமி யுகே யுகே " என்பதாகும். இதன் அர்த்தம் என்னவெனில் " நல்லவர்களை பாதுகாக்கவும், அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் அனைத்து யுகத்திலும் பிறப்பேன் " என்பதுதான்.

ஆயுட்காலம்
கிருஷ்ணர் பல யுகங்களாய் வாழ்ந்து வந்தாலும் மனிதராய் பிறந்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் இறக்கத்தான் செய்தார். அதன்படி கிருஷ்ண அவதாரத்தில் அவர் 125 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதன் கூட்டுத்தொகையை பார்த்தால் கூட 1+2+5=8 தான். எனவே எட்டாம் எண்ணை துரதிஷ்டமான எண்ணாக பார்க்காதீர்கள். அது விஷ்ணுவின் ஆசீர்வாதமாக கூட இருக்கலாம்.



Click it and Unblock the Notifications











