மனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு?

கணவன் செய்த கொடுமையை பாருங்க, மனைவியின் அந்தரங்க பகுதியில் பைக்கின் கைப்பிடியை சொருகிய கொடூரம் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.

என்ன தான் நம் தாய் நாட்டை பாதுகாக்க நவீன தொழில்நுட்பமும் கருவிகளும் வந்தாலும் நம் நாட்டினுள் வாழும் பெண்களின் பாதுகாப்பு இன்றளவும் கேள்விக்குரியாகவே உள்ளது. ஒரு நல்ல ஆண்மகன் தாய்நாட்டை காப்பாற்றினால் மட்டும் போதாது. நாட்டில் வாழும் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதற்கான சட்டங்களும் தண்டனைகளும் அமைக்க வேண்டும்.

Husband Inserted Motorcycle Handle

ஆனால் நிலைமை என்னவோ ஆண்களால் பெண்கள் இன்றளவும் பாலியல் கொடுமையை அனுபவித்து தான் வருகிறார்கள். இதில் கேவலமான விஷயம் என்னவென்றால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கணவனே அப்படி நடந்து கொள்வது தான். அப்படி ஒரு கொடூரமான செயல் தான் இது. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் ஒரு ஆண் செய்த காரியம் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவனால் பாலியல் கொடுமை

கணவனால் பாலியல் கொடுமை

கணவனின் குழந்தை பாக்கிய திறன் குறித்து மனைவி கேள்வி கேட்டதால் நடந்த கொடூரம். அவன் தன்னுடைய பைக் கைப்பிடியை எடுத்து மனைவியின் அந்தரங்க பகுதியில் குத்தியுள்ளார். இந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்பு நமது இந்தியாவில் இந்தோரில் தான் நடந்து உள்ளது. பாலியல் கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை வெளியே சென்னால் கொன்று விடுவேன் என்று அவருடைய மனைவியை மிரட்டியும் உள்ளார்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

அந்த பெண்ணும் இதற்கு பயந்து கொண்டு எதையும் வெளியே சொல்லவில்லை. காயம் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது கைப்பிடி உள்ளே இருப்பது கண்டு டாக்டர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பெரும்சேதம்

பெரும்சேதம்

அந்த பிளாஸ்டிக் கைப்பிடி அந்த பெண்ணின் கருப்பை, சிறுநீரக பகுதி என்று வயிற்று பகுதி வரை உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக கடவுள் குழந்தையை சுமக்க கொடுத்த கருப்பையையே கிழித்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

கணவன் பிடிபட்டான்

கணவன் பிடிபட்டான்

அந்த மருத்துவரின் ரிப்போர்ட் படி போலிசார் உடனடியாக அந்த ஆணை கைது செய்துள்ளனர். இதே மாதிரி ஊமையாக இருக்கும் எத்தனையோ பெண்களின் நிலைக்கும் போலிசாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆணுக்கே உண்டான அழகு

ஆணுக்கே உண்டான அழகு

இந்த மாதிரியாக பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைக்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண், பெண், குழந்தை இவர்கள் சேர்ந்து தான் ஒரு நல்ல சமுதாயம் அமையும். ஒரு நல்ல சமுதாயம் தான் நாடே. சமுதாயத்தின் ஆணி வேரை பிடுங்கி விட்டு நாட்டை காப்பாற்றி என்ன செய்ய போகிறீர்கள். ஒரு நாட்டில் பெண்கள் துன்புறுத்தப்பட்டால் அது ஆணுக்கு ஏற்படும் இழுக்கு என்பதை மறவாதீர்கள்.

ஒவ்வொரு ஆணும் பெண்களை பாதுகாக்கும் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்வதே ஒரு ஆணுக்கு அழகு.பெண்களை பாதுகாப்போம். நல்ல சமுதாயம் உருவாகும். தாய்நாடும் நமதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, May 25, 2019, 11:35 [IST]
Desktop Bottom Promotion