Just In
- 36 min ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 5 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தெரியாம கீழே விழுந்த பையன் கண்ணுல பென்சில் குத்தி கண்பார்வையே போன பரிதாபத்த பாருங்க...
தெரியாமல் கீழே விழுந்த பையனின் கண்ணில் பென்சில் குத்தியதால் கண்பார்வை போகும் பரிதாபம் பற்றி தான் இந்த கட்டரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அப்படி என்ன நடந்தது என்பது குறித்து தான் இந்த தொக
குழந்தைகளை கவனிப்பது என்பது பெரிய காரியம். அம்மாமார்கள் என்ன தான் அலர்ட் ஆக இருந்தாலும் எதாவது சேட்டைகளையும் விபரீதங்களையும் பண்ணிக் கொண்டு தான் இருப்பார்கள். பொதுவாக ஆபத்தான விபத்துகள் எல்லாம் குழந்தைகள் சிறிய பொருட்களைக் கொண்டு விளையாடும் போது, கூர்மையான பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இவற்றால் ஏற்படும்.
அப்படித்தான் இங்கே ஒரு பையனுக்கு நடந்த விபரீதத்தை பாருங்க. விளையாட்டின் போது தடுமாறி கீழே விழுந்ததால் பென்சில் கண்களில் குத்தி கண்பார்வை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சோகமான நிகழ்வு எப்படி நடந்தது என்பதை பார்க்கலாம்.
சைனாவில் நடந்த விபரீதம்
இந்த விபரீதம் தெற்கு சைனாவில் நடந்துள்ளது. அந்த 6 வயது குழந்தையின் கண்ணில் பென்சில் பலமாக குத்தியதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
MOST READ: ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?
பென்சிலுடன் ஓடிய பையன்
இதில் ஷாக் அளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சி கான்சஃவ் என்ற மழலையர் பள்ளியில் நடந்துள்ளது. பள்ளியில் அந்த சிறுவன் 12 செ. மீ நீளமுள்ள பென்சிலை தூக்கி கொண்டு ஓடி இருக்கிறான். அப்பொழுது தான் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பையனின் கண்ணில் பலமாக பென்சில் குத்தியுள்ளது.
ஏதோ அதிர்ஷ்டம்
நல்ல வேளை அந்த பையனுக்கு அதிர்ஷ்டவசமாக பெரிய விளைவுகள் ஏற்படவில்லை. காரணம் பென்சில் அவனின் இடது கண்ணின் கீழ் பகுதியில் குத்தி இருந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த பையனின் பார்வை பறி போவது காப்பாற்றப்பட்டுள்ளது. கருவிழி 1 மி. மீ இடைவெளியில் தப்பியுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
MOST
READ:
ஜாக்கிரதையா
வாங்குங்க...
இறால்ல
ஜெலட்டின்
ஊசிபோட்டு
விக்கறாங்களாம்...
அறுவை சிகிச்சை மூலம் பென்சிலை எடுத்தல்
இருப்பினும் அந்த பையனின் கருவிழியில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. குத்தி இரத்தம் கசிந்ததால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று தீவிரமடைந்ததால் எண்டோஆப்தாலமிட்ஸ் (தீவிர தொற்று) ஏற்பட வாய்ப்புள்ளது . அறுவை சிகிச்சை மூலம் அந்த பென்சிலை ரிமூவ் செய்து விட்டோம். இருப்பினும் தொற்று சரியாகவில்லை என்றால் அந்த பையன் பார்வையை இழக்க நேரிட்டு இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
எனவே வீட்டில் பெற்றோர்களும் சரி பள்ளியில் ஆசிரியர்களும் சரி குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு விளையாடும் மும்பரத்தில் எதுவும் தெரியாது. சிறிய விளையாட்டு பொருட்கள், கூர்மையான பொருட்கள் போன்றவற்றை வைத்து விளையாடுவதை தவிருங்கள். பென்சில் கொண்டு எதாவது எழுத வேண்டும் என்றால் அருகில் இருந்து எழுத வையுங்கள். அதை விளையாட்டு போக்காக கையாளுவதை தவிர்த்து அதன் பயனை எடுத்துக் கூறுங்கள்.
MOST READ: ஆக்டோபஸை உயிரோட சாப்பிட நெனச்சு அது மூஞ்ச கீறிவிட்ட கொடூரம்.. இதோ நீங்களே பாருங்க...
என்ன செய்ய வேண்டும்?
சரியாக கையாளும் விதத்தை கற்றுக் கொடுங்கள். விளையாட்டு போக்கால் என்ன விபரீதம் நடக்கும் என்பதை எடுத்துக் கூறுங்கள். முடிந்த வரை விவரம் தெரியாத குழந்தைகளுக்கு கிரையான்ஸ் போன்றவற்றை எழுத கொடுக்கலாம். ஸ்கெட்ச் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பொற்றோர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும் என்பதை மறவாதீர்கள்.