Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
மலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே!
ஹாங்காங்கில் ஒரு பெண்மணிக்கு பத்து ஆண்டுகள் என்ன நடந்தது என்றே மறந்து விட்டது. அதற்கான காரணம் தெரிய வந்தால் வியந்து போவீர்கள்.
பல்வேறு உடல் நல கோளாறுகளின் காரணமாக கொஞ்ச நேரம் எல்லாம் மறந்துபோனது போன்ற உணர்வு ஏற்படும். குறுகிய கால மறதி பிரச்னைக்கான காரணங்களை புரிந்துகொள்வது கடினமான ஒன்று.

ஹாங்காங்கில் ஒரு பெண்மணிக்கு பத்து ஆண்டுகள் என்ன நடந்தது என்றே மறந்து விட்டது. அதற்கான காரணம் தெரிய வந்தால் வியந்து போவீர்கள்!

மலச்சிக்கலின் பின் விளைவுகள்
அதிக சிரமப்பட்டு மலம் கழிப்பதால் பக்க விளைவுகள் இருக்கும் என்பது அநேகருக்குத் தெரியும். இலேசான தலைசுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படக்கூடும். அரிதாக சிலருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு (ஸ்ட்ரோக்) போன்ற வாழ்நாள் பிரச்னைகள் ஏற்படும். சீன சமூக ஊடகங்களில் மலச்சிக்கலால் வித்தியாசமான விதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மறந்துபோன நினைவுகள்
மலச்சிக்கலால் அதிக நேரம் கழிப்பறையில் செலவழிக்கும் பழக்கம் கொண்டவர் ஹாங்காங்கை சேர்ந்த பெண்மணி. ஒருநாள், கழிப்பறைக்குச் சென்று வந்தவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள், அரியவகை ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அப்பெண்மணிக்கு கடந்த பத்து ஆண்டுகள் தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்றே நினைவில் இல்லை. மலச்சிக்கல் காரணமாக மிகவும் சிரமப்பட்டு, முயற்சி செய்து மலம் கழித்ததினால் ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மூளை செயல்பாடு
மூளையின் சில பகுதிகளுக்கு குறைவான ஆக்ஸிஜன் கிடைத்துள்ளதால், குறுகிய கால மறதியான அம்னீஷியாவால் அப்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதிர்ஷ்ட வசமாக இந்த மறதி எட்டு மணி நேரம் மட்டுமே நீடித்தது. பல்வேறு பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள், அப்பெண்ணின் மூளை செயல்பாடு இயல்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

கதையா? உண்மையா?
இந்தச் செய்தி ஆன்லைனில் பகிரப்பட்டபோது, பலர் இது பொய்யான செய்தி என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், மலங்கழிக்கும்போது உருவாகும் அழுத்தம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனை தடுப்பதால் இதுபோன்ற விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் விளக்கியுள்ளனர்.



Click it and Unblock the Notifications