Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்
பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடும்போது அவரை எப்படி வழிபட வேண்டும், எங்கு வைத்து வழிபட வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.
இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர்தான். மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்கும் கடவுளான பிள்ளையார் தன்னை வழிபடுபவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வழங்குகிறது. நம் வாழ்வில் தடைகள் ஏற்படும் போதெல்லாம் நம்மை காப்பாற்ற அங்கு பிள்ளையார் இருப்பார். அதனால்தான் எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் அந்த செயல் வெற்றிகரமாக முடிய பிள்ளையாரை வழிபட்டு தொடங்குகிறோம்.

பிள்ளையாரை கோவிலில் மட்டுமின்றி வீட்டில் வைத்தும் வழிபடுவார்கள். பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடும்போது அவரை எப்படி வழிபட வேண்டும், எங்கு வைத்து வழிபட வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பிள்ளையார் சிலையை எந்த இடத்தில் வைத்து எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

முதல் விதி
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு வேண்டுமென்று விரும்பினால் உங்கள் இல்லத்தில் வெள்ளை பிள்ளையாரை வைத்து வழிபட வேண்டும். இல்லையெனில் வெள்ளை பிள்ளையாரின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

இரண்டாம் விதி
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட முன்னேற்றம் என்பது மிகவும் அவசியமானதாகும் . எனவே சுய முன்னேற்றம் வேண்டுமென்று விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் குங்கும நிற பிள்ளையாரை வைத்து வழிபடுவது நல்லது.

மூன்றாம் விதி
பொதுவாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை விட அமர்ந்திருக்கும் பிள்ளையார் அதிக பலன்களை வழங்கக்கூடியவர். இந்த பிள்ளையார் அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கும்.

நான்காம் விதி
விநாயகரின் துதிக்கை அவரது இடது கை பக்கமாக இருக்கும் சிலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். விநாயகரின் துதிக்கை வலது பக்கமாக இருக்கும் விநாயகரை வழிபடுவது மிகவும் கடினமாகும்.

ஐந்தாம் விதி
உங்கள் வீட்டில் வைத்து வழிபட அமர்ந்திருக்கும் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். அதுவே பணியிடங்களில் வைத்து வழிபட நிற்கும் நிலையில் இருக்கும் பிள்ளையார் சிலையை வைக்க வேண்டும். இது ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கும்.

ஆறாம் விதி
விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் போது அதனுடன் எலி மற்றும் கொழுக்கட்டை ஆகியவையும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது மிகவும் புனிதமானதாகும்.

ஏழாம் விதி
உங்கள் பூஜையறையில் எப்பொழுதும் ஒரே ஒரு பிள்ளையார் சிலையை வைத்து வழிபடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபடுவது அவரது மனைவிகளின் கோபத்தை தூண்டும்.

எட்டாம் விதி
ஸ்வஸ்திக் விநாயகரின் சின்னம் என்று நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் ஏதாவது வாஸ்து தோஷம் இருந்தால் உங்கள் வீட்டின் வாயிலில் ஸ்வஸ்திக் சின்னத்தை மாட்டி வையுங்கள்.

ஒன்பதாவது விதி
வீட்டில் பிள்ளையாரை வைத்து வழிபடுபவர்கள் தினமும் சிலைக்கு அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். ஒருநாள் வைத்த அருகம்புல்லை அடுத்த நாள் வைக்கக்கூடாது. தினமும் அருகம்புல்லை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications