Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்
பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடும்போது அவரை எப்படி வழிபட வேண்டும், எங்கு வைத்து வழிபட வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.
இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர்தான். மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்கும் கடவுளான பிள்ளையார் தன்னை வழிபடுபவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வழங்குகிறது. நம் வாழ்வில் தடைகள் ஏற்படும் போதெல்லாம் நம்மை காப்பாற்ற அங்கு பிள்ளையார் இருப்பார். அதனால்தான் எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் அந்த செயல் வெற்றிகரமாக முடிய பிள்ளையாரை வழிபட்டு தொடங்குகிறோம்.

பிள்ளையாரை கோவிலில் மட்டுமின்றி வீட்டில் வைத்தும் வழிபடுவார்கள். பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடும்போது அவரை எப்படி வழிபட வேண்டும், எங்கு வைத்து வழிபட வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பிள்ளையார் சிலையை எந்த இடத்தில் வைத்து எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

முதல் விதி
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு வேண்டுமென்று விரும்பினால் உங்கள் இல்லத்தில் வெள்ளை பிள்ளையாரை வைத்து வழிபட வேண்டும். இல்லையெனில் வெள்ளை பிள்ளையாரின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

இரண்டாம் விதி
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட முன்னேற்றம் என்பது மிகவும் அவசியமானதாகும் . எனவே சுய முன்னேற்றம் வேண்டுமென்று விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் குங்கும நிற பிள்ளையாரை வைத்து வழிபடுவது நல்லது.

மூன்றாம் விதி
பொதுவாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை விட அமர்ந்திருக்கும் பிள்ளையார் அதிக பலன்களை வழங்கக்கூடியவர். இந்த பிள்ளையார் அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கும்.

நான்காம் விதி
விநாயகரின் துதிக்கை அவரது இடது கை பக்கமாக இருக்கும் சிலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். விநாயகரின் துதிக்கை வலது பக்கமாக இருக்கும் விநாயகரை வழிபடுவது மிகவும் கடினமாகும்.

ஐந்தாம் விதி
உங்கள் வீட்டில் வைத்து வழிபட அமர்ந்திருக்கும் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். அதுவே பணியிடங்களில் வைத்து வழிபட நிற்கும் நிலையில் இருக்கும் பிள்ளையார் சிலையை வைக்க வேண்டும். இது ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கும்.

ஆறாம் விதி
விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் போது அதனுடன் எலி மற்றும் கொழுக்கட்டை ஆகியவையும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது மிகவும் புனிதமானதாகும்.

ஏழாம் விதி
உங்கள் பூஜையறையில் எப்பொழுதும் ஒரே ஒரு பிள்ளையார் சிலையை வைத்து வழிபடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபடுவது அவரது மனைவிகளின் கோபத்தை தூண்டும்.

எட்டாம் விதி
ஸ்வஸ்திக் விநாயகரின் சின்னம் என்று நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் ஏதாவது வாஸ்து தோஷம் இருந்தால் உங்கள் வீட்டின் வாயிலில் ஸ்வஸ்திக் சின்னத்தை மாட்டி வையுங்கள்.

ஒன்பதாவது விதி
வீட்டில் பிள்ளையாரை வைத்து வழிபடுபவர்கள் தினமும் சிலைக்கு அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். ஒருநாள் வைத்த அருகம்புல்லை அடுத்த நாள் வைக்கக்கூடாது. தினமும் அருகம்புல்லை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications