Just In
- 1 hr ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 2 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 3 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
Don't Miss
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல...!
வீட்டு பூஜையறையில் கடவுளை வழிபடும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
கடவுளை வழிபடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. கடவுளை வழிபடும் முறைகள் இடத்திற்கு ஏற்ப மாறினாலும் கடவுள் மீதிருக்கும் நம்பிக்கை பொதுவானதுதான். கடவுளை வழிபடும் அனைவருமே தங்கள் வீட்டில் பூஜையறையை வைத்திருப்பார்கள்.
வீட்டு பூஜையறையில் கடவுளை வழிபடும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நீங்கள் பூஜையறையில் செய்யும் சில தவறுகள் உங்கள் மீது கடவுளுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் பூஜையறையில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
வாடிய பூக்கள்
அனைத்து கடவுள்களுக்குமே பூக்கள் பிடிக்கும். பூக்கள் கடவுளுக்கு உங்கள் மீது இருக்கும் பக்தியையும், அன்பையும் வெளிப்படுத்துவதாகும். வாடிய பூக்கள் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் உங்கள் மீது கடவுளுக்கு கோபத்தையும் ஏற்படுத்தும். வாடிய பூக்களை முடிந்தளவு விரைவில் பூஜையறையில் இருந்து அகற்றிவிடுங்கள்.
துளசி செடி
சாஸ்திரங்களின் படி துளசி செடி உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்து செய்திகளையும் முன்கூட்டியே கூற இயலும். உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடி திடீரென வாடி போனாலோ அல்லது கருகி விட்டாலோ உங்கள் இல்லத்தில் விரைவில் மரணம் அல்லது மோசமான உடல்நிலை கோளாறுகள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடியை நன்கு கவனித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி அதனை வாடாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் வாடிய துளசி உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்பும்.
விளக்கேற்றுங்கள்
உங்கள் பூஜையறையில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபடுங்கள். விளக்கில் தூய நெய் இருக்க வேண்டும் மேலும் அது உங்கள் பூஜையறைக்கு சமநிலையில் இருக்க வேண்டும். அதைவிட உயரத்திலோ அல்லது கீழ்நிலையிலோ இருக்கக்கூடாது.
சிலைகள்
உங்கள் வீட்டு பூஜையறையில் பெரிய கடவுள் சிலைகளை வைத்து வழிபடுவதை தவிர்க்கவும். இவ்வாறு பெரிய சிலைகளை வைத்து வழிபடுவது திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதற்கு பதில் பெரிய கடவுள் படங்களையோ அல்லது சிறிய உருவ சிலைகளையோ வைத்து வழிபடலாம்.
சிலைகளை சுத்தம் செய்தல்
உங்கள் பூஜையை தொடங்குவதற்கு முன் தெய்வங்களின் சிலைகளை ஒரு ஈரத்துணியால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பூஜையறையில் சிறிது தண்ணீரை தெளித்து வைப்பது நல்லது.
தீபம்
சுத்தம் செய்த பிறகு கடவுளுக்கு முன் விளக்கை ஏற்றி வைக்கவும். உங்கள் விளக்கு எளிமையானதாக இருந்தாலே போதும் ஆடம்பரமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இஹல அவற்றில் இருந்து அதிக புகை வெளியேறாது. ஒரே விளக்கை தினமும் பயன்படுத்தினால் திரியை அடிக்கடி மாற்றுவது நல்லது.
இரண்டு விளக்குகள்
இரண்டு விளக்கு ஏற்றி வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இரண்டையும் ஒரே திசையில் வைக்காதீர்கள். ஒரு விளக்கை கிழக்கு நோக்கியும் மற்றொரு விளக்கை வடக்கு நோக்கியும் ஏற்றி வைக்கவும்.
இரண்டு திரிகள்
நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் விளக்கேற்ற எப்போதும் இரண்டு திரியை உபயோகியுங்கள். இது கணவன், மனைவியின் ஒற்றுமையை உணர்த்துவதோடு உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பிரசாதம்
கடவுளுக்கு படைக்கும் பிரசாதம் எப்பொழுதும் பழங்களாகவோ அல்லது இனிப்புகளாகவோ இருப்பது நல்லது. அதேசமயம் பிரசாதத்தை படைக்கும் போது வலது கையில் மட்டும் மட்டும் படைக்க வேண்டும்.