For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாயின் உள்ளாடையை அணிந்ததால் கருக்குழாய் இழந்த பெண்... இப்படி ஒரு கொடுமையா?

தாயின் உள்ளாடையை அணிந்ததால் கரு முட்டை குழாய் அகற்றப்பெற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம். அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது.

|

ஒரு நபர் மற்றவரின் ஆடைகளை பகிர்ந்து கொள்வது என்பது சுகாதாரமில்லாத ஒரு செயலாகும். பொதுவாக மக்கள் தங்கள் சால்வை, போர்வை, ஜாக்கெட் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நாம் கண்டிருக்கலாம். ஆனால் இது ஒரு சரியான விஷயம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக உள்ளாடைகளை பகிர்ந்து கொள்வது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாகும். இதன் காரணமாக பல்வேறு தீவிர உடல் உபாதைகள், பால்வினை நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனப்பெண்

சீனப்பெண்

சீனாவைச் சேர்ந்த ஒரு 12 வயது பெண்ணின் வழக்கும் இதனுடன் தொடர்பு கொண்டது. அந்த பெண் சில நாட்கள் முன்பு தொடர்ச்சியாக வாந்தி எடுத்து, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். கூடவே அவளுக்கு தீவிர வயிற்று வலியும் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 15 நாட்களாக அவள் இத்தகைய பாதிப்பை கொண்டவளாக இருந்திருக்கிறாள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அவளுடைய உடல்நிலை மேலும் மோசமாக ஆனதால், அவளின் பெற்றோர் அவளை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

MOST READ: இந்த ரெண்டு ராசிக்காரங்களும் வாயாலயே சட சுடறதுல பெரிய ஆளுங்க...

மருத்துவ சோதனை

மருத்துவ சோதனை

மருத்துவர்கள் அவளை பரிசோதனை செய்து அவளுக்கு கூபக அழற்சி நோய் (pelvic inflammatory disease) பாதிப்பு இருப்பதாக கூறினர். இதன் விளைவாக அவளுடைய கருமுட்டைக் குழாய் நீரால் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அவளுடைய கரு முட்டைக் குழாய் பெரிதும் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால் இந்த சிறிய வயதில் இந்த பெண்ணுக்கு எப்படி இந்த பாதிப்பு ஏற்பட முடியும் என்று மருத்துவர்கள் குழம்பினர்.

பாதுகாப்பற்ற உறவு

பாதுகாப்பற்ற உறவு

பொதுவாக பாதுகாப்பற்ற உறவு மற்றும் பல்வேறு நபருடன் உறவு கொள்வது போன்றவை இந்த பாதிப்பிற்கான முக்கிய காரணிகள் ஆகும். ஆனால் இந்த பெண்ணிற்கு அப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. இந்த பெண் பூப்பெய்தி முதல் மாதவிடாய் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகிறது.

அவள் எந்த ஒரு சானிட்டரி பேட் அல்லது டாம்பூன் போன்றவற்றை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தாள். அவளுடைய வாழ்க்கை முறை பற்றி ஆழமாக தகவல் அறியும்போது அந்த பாதிப்பிற்கான காரணம் தெரிய வந்தது.

MOST READ: அம்மா நீ அழகா இல்லனு சொன்னதுக்காக இந்த பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா?

என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு?

என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு?

அந்தப் பெண் தன்னுடைய தாயின் உள்ளாடைகளை அணிந்து வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எப்போதும் அவருடைய உள்ளாடைகள் அவருடைய தாயின் உள்ளாடைகளுடன் சேர்த்து ஒரே அலமாரியில் வைக்கப்படுவதால் இருவரும் அவ்வப்போது மாற்றி மாற்றி அவர்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதில் இன்னொரு மோசமான சம்பவம் என்னவென்றால் அந்தப் பெண்ணின் தாயார் சில நாட்களுக்கு முன் யோனி அழற்சியால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

அதனால் அந்தத் தாயின் உள்ளாடைகளை இந்த பெண் அணிந்தது இந்த பாதிப்பின் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் விளக்கினர். பின்னர் அந்தப் பெண்ணுக்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு, அவருடைய வலது கருக்குழாய் மற்றும் வலது கருவகம் போன்றவை நீக்கப்பட்டது. மருத்துவர்கள் கரு முட்டைக் குழாயை பாதுகாக்க முயற்சித்தாலும் அது முற்றிலும் பாதிக்கப்பட்டதால் அதனை நீக்க வேண்டிய நிலை உருவானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Doctors Remove Girl’s Fallopian Tube After It Gets Infected from Wearing Mum’s Underwear

Sharing clothes can be unhygienic. While people share their jackets, mufflers and scarves on a regular basis, we need to understand that it is not the right thing to do.
Desktop Bottom Promotion