Just In
- 9 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா? வழிபட்டால் என்ன நடக்கும்?
சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக்கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது.
இந்து மத வழிபாடுகள் என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்தவையாகும். ஏனெனில் இங்கு கடவுள்கள் எவ்வளவு அதிகமோ அதைவிட வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் அதிகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வித்தியாசமான வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளது. அதில் இப்பொழுதும் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா என்பதுதான்.
இந்தியாவில் அனைத்து கடவுள்களும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் வழிபடபடுகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம். இந்த பதிவில் பெண்கள்திருமணமாகாத பெண்கள் அனுமனை வழிபடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.
அனுமன்
ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயுபுத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வழிபடப்படுகிறார். சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக்கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
ஏன் அனுமதிக்கப்படவில்லை?
புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் தனியாக வாழ வேண்டுமென்று விரும்புபவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த முறை மாறி அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடும் முறை கொண்டுவரப்பட்டது.
MOST
READ:
சனிபகவானை
இப்படி
வழிபடுவது
உங்களுக்கு
சனிபகவானின்
சாபத்தை
பெற்றுத்தரும்
தெரியுமா?
அனுமன் உருவச்சிலை
பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றாலும் அங்கு அனுமனின் உருவச்சிலையை தொடமால் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு காரணம் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் அனுமன் பெண்கள் தன்னை தீண்டுவதை விரும்பமாட்டார்.
அனுமன் மந்திரம்
பெண்கள் அனுமனுடைய சிலையை தீண்ட கூடாதே தவிர ஆஞ்சநேயருக்கு மலர் வைத்து வழிபடுவது, அனுமன் மந்திரம் கூறி வழிபடுவது போன்றவற்றை தாராளமாக செய்யலாம்.
பாலினம் முக்கியமல்ல
கடவுள் வழிபாட்டை பொறுத்தவரையில் வழிபாட்டிற்கோ அல்லது மந்திரங்களை கூறி வழிபடுவதற்கோ பாலினம் முக்கியமல்ல. ஆண், பெண் இருவருமே அனைத்து கடவுள்களையும் வழிபடலாம். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.
வழிபட வேண்டிய கிழமை
வாழ்க்கையில் பல தடைகளால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் சனிபகவானை வழிபடுவது அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை போக்கும்.