இந்த மாத பௌர்ணமிக்கு பின் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் எவை? எப்படி தப்பிக்கலாம்?

வருகின்ற பௌர்ணமி முதல் எந்தெந்த ராசிகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது பற்றி விளக்கமாக இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி பெளர்ணமி வருகிறது. இந்த முழு நிலவு பெளர்ணமி சில ராசிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஜோதிடம். எப்படி கோள்களின் கட்டமைப்பு நமது ராசியில் தாக்கத்தை ஏற்படுத்துவது போல சில காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

zodiac signs

இந்த மாதம் கடைசியில் வரும் பெளர்ணமி தான் இந்தாண்டின் கடைசி பெளர்ணமி யும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராசிகள்

ராசிகள்

இதனால் சில ராசிகள் மனநிலை மாற்றம் பெறுகிறது. ரெம்ப களைப்பாகவும், சோம்பேறியாகவும் இருக்கின்ற சூழல் நிலவுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் சில ராசிக்காரர்கள் தங்கள் மன அமைதியில் கவனம் செலுத்துவது நல்லது. சரி வாங்க இந்த பெளர்ணமியால் பாதிக்கப்படும் ராசி களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை விஷயங்களை சீக்கிரமாக அணுக முயற்சிப்பீர்கள். இதைத் தொடர்ந்து இந்த பெளர்ணமி தாக்கம் உங்க ராசிக்கு சில எச்சரிக்கைகளை விடுக்கிறது.இந்த நேரங்களில் உங்களுடைய நேர்மையும் ஒழுக்கமும் பரிசோதிக்கப்படும். இயற்கையிலேயே நீங்கள் உங்கள் கொள்கைகளை பிடித்து கொண்டு செயல்படுவீர்கள். தகுந்த நேரம் உங்கள் முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும்.

கடகம்

கடகம்

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்கள் அதிலிருந்து வெளியே வர உதவியாக இருப்பீர்கள். ஆனால் இந்த கோள்களின் கட்டமைப்பு தற்போது உங்களுக்கு சில தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ரெம்ப களைப்படைந்து சோர்ந்து போய் காணப்படுவீர்கள். உங்களுடைய மன அழுத்தம், மற்றவர்கள் மீதான அதிக அக்கறை, உங்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு போதுமான ஓய்வும், ஒரு விஷயத்தை சொல்லும் முன் ஒரு தடவைக்கு இருமுறை யோசித்தும் செயல்படுங்கள்.

துலாம்

துலாம்

அதே மாதிரி துலாம் ராசிக்கும் இந்த பெளர்ணமி தாக்கம் சில களைப்பை கொடுக்க போகிறது. உங்களுடைய அலுவலக வேலைகளை உடனுக்குடன் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். எனவே உங்கள் பணிகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள். அதன் பிறகு மற்ற விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக அலசி ஆராயுங்கள்.

மகரம்

மகரம்

இந்த பெளர்ணமி நாளின் தொடக்கத்தில் இருந்தே உங்கள் சுய கவனிப்பை ஏற்க தொடங்குங்கள். இவர்கள் தொழிலை தங்கள் வாழ்க்கையாக கொண்டு செயல்படுபவர்கள். வேலையில் பிரபலமான தொழிலாளியாக வலம் வருபவர்கள். இருப்பினும் உங்கள் உடல் நலத்திற்கு முதலில் அக்கறை செலுத்துங்கள், அப்புறமாக வேலை செய்வது நன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 11, 2018, 16:30 [IST]
Desktop Bottom Promotion