Latest Updates
-
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறுமாம் -
சுக்கிரன்-சூரியன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகத்தால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
வெயிலை சமாளிக்க உதவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கொளுத்தும் வெயிலால் உங்கள் முடி உடையாமல், கொட்டாமல் இருக்க இந்த எளிய உணவுகளை சாப்பிடுங்க -
வாஸ்து படி இந்த 5 இடங்களில் கடிகாரத்தை மாட்டுவது உங்களை துரதிர்ஷ்டசாலியாக மாற்றுமாம் -
புதன்-சூரியன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த அமங்கலமான விஷயங்களைத் தொட்டால் வறுமையும், துரதிர்ஷ்டமும் தான் வரும் என்பதை மறவாதீர்கள்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யும் போது, அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் தான் கொண்டு வரும்.
யாருக்கு தான் போதிய செல்வத்துடன் சந்தோஷமாக இருக்க விருப்பமிருக்காது. இந்த வாழ்க்கைக்காகத் தான் நாம் அவ்வளவு பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும், பலரது வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.
இதற்கு நாம் செய்யும் பல தவறுகளும் முக்கிய காரணம். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யும் போது, அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் தான் கொண்டு வரும். அவை என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தவறு #1
சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொட்டால், அது தொட்டவரை நோக்கி எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு, எதிலும் துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்.

தவறு #2
சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் தரையில் சிதறி இருந்தால், அதை காலால் மிதித்தால், அது மிகப்பெரிய அமங்கலமான செயலாக கருதப்படுகிறது.

தவறு #3
ஒரு சுப காரியத்தில் ஈடுபடும் போது, நாய் வந்து உங்களைத் தொட்டால், அது கெட்ட சகுணமாக நாரத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இச்செயல் வாழ்வில் வறுமையை வரவழைக்கும்.

தவறு #4
வீட்டைப் பெருக்கி, துடைக்கும் போது, அந்த அழுக்கு நீர் மேலே படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்நீர் நம் உடலில் பட்டால், அது துரதிர்ஷ்டத்தை வரவழைக்குமாம்.

தவறு #5
இறந்த சடலத்தை தொட்ட பின், ஒருவர் தவறாமல் குளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அது அவரது வீட்டிற்கு முடிவற்ற துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

தவறு #6
சுடுகாட்டில் உள்ள மரக்கட்டைகளைத் தொடுவதும் அபசகுணமான செயல் தான். இதைச் செய்யும் போது, அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பின் எதிலும் தோல்வியைத் தழுவச் செய்யும்.



Click it and Unblock the Notifications











