Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்தியாவில் மட்டுமே காதலர் தினத்தன்று இந்த கூத்து நடக்கும்!
இந்த காரணங்களால் இந்தியர்கள் காதலர் தினத்தை சுதந்திரமாக கொண்டாட முடியாது!
இந்தியா பல மொழி, கலாச்சாரம், மத, ஜாதிகளை கொண்டுள்ள நாடு. ஆனால், கிரிக்கெட், காதல் என்ற இரண்டு தான் நமது தேசத்தை ஒன்றிணைந்து வைக்கும் தண்டவாளங்கள். இன்று காதலர் தினம் என்பதால் நாம் காதலை பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நமது இந்திய திருநாட்டில் இதர 364 நாட்களும் காதலர்கள் பார்க், பீச், திரையரங்கு போன்ற இடங்களில் என்ன செய்தாலும் கண்டுக்கொள்ளாத நம்மவர்கள், இன்றைய தினம் ஒருவர் ப்ரபோஸ் நிற சட்டை அணிந்து சென்றால் கூட உடனே "என்ன லவ்வா? எத்தன நாளா?" என கேள்வி கனைகளை தொடுத்து, நோண்டி நொங்கு எடுத்துவிடுவார்கள்.
மேலும், ஒருசில காரணங்களால் இந்தியாவில் காதலர் தினத்தை காதலர் சுதந்திரமாக கொண்டாட முடியாமலும் போகும்...
காரணம் #1
இந்தியாவில் தவறு செய்து தப்பிக்க வேண்டும் என்றால் பெரிய தவறு செய்ய வேண்டும். சின்ன, சின்ன தவறு செய்தால் உடனே அரஸ்ட் தான். லஞ்சம் கூட கோடிகளில் வாங்கினால் தப்பித்து கொள்ளலாம். ஆனால், நூறுகளில் வாங்கினால் பல ஆண்டு சிறைத் தண்டனை அளித்து விடுவார்கள்.
இப்போ எதுக்கு இதுன்னு கேட்குறீங்களா? ஏன்னா காதலர் தினத்துல போலீஸ் காதலர்களை கைது செய்த சம்பவங்களும் இந்தியாவில் நடந்துள்ளது.

காரணம் #2
இந்தியாவில் சில அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை சுதந்திரமாக உலாவ விடாது. தாலி, திருமண சான்றிதழ் கேட்டு நச்சரிக்கும்.

காரணம் #3
இந்தியாவின் சில பகுதிகளில் காதலர் தினத்தன்று ஜோடியாக சாலையில், பூங்காக்களில் சுற்றுபவர்களுக்கு தடியடி தண்டனை இலவசமாக கொடுக்கப்படும். கொடுமையாக அடித்து பிரித்து விட்டு செல்வார்கள். அவங்க யாருன்னு நாம சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல.

காரணம் #4
நல்ல காதலை விட, கள்ளக் காதல் ஜோடிகள் அதிகம் புதர்களில் அமர்ந்திருக்கும்.

காரணம் #5
எத்தனை வருட காதலாக இருந்தாலும், இந்த ஒரு நாள் கல்லூரி, அலுவலகத்தில் எதை சொல்லி லீவ் போட்டு செல்வது என்ற குழப்பம் தீரவே தீராது.

காரணம் #6
காதலர் தினத்தன்று தெரியாத்தனமாக தவறான நிறத்தில் உடை அணிந்து சென்றுவிட்டால் உடனே அதற்கு ஒரு கதை கட்டி திரைக்கதை வசனம் எழுத ஒரு க்ரூப் நம்மை சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் அந்த க்ரூப்பை நண்பர்கள் என அழைக்கிறார்கள். ஹிஹிஹி!



Click it and Unblock the Notifications











