Just In
- just now 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாட்டாமை டீச்சர் இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?
வில்லுப்பாட்டு காரன் படத்தில் அறிமுகமான நாட்டாமை டீச்சர் புகழ் ராணி என்கிற ரக்ஷா இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா?
"நாட்டாமை டீச்சர்"-ன்னு மட்டுமில்ல "ஓ போடு'ன்னு சொன்னாலும் இவங்க தான் ஞாபகம் வருவாங்க. ஒரு நடிகை தன்னோட திறமையால், நடிப்பால், தன் பன்முக திறமையால் சமூக ஆர்வத்தால் புகழ்பெற்று பார்த்திருப்போம். ஆனால், "நாட்டாமை டீச்சர்", "ஓ போடு" என வார்த்தையில் புகழ்பெற்ற ஒரே நடிகை இவர் தான்...
வில்லுப்பாட்டு காரன்!
நாட்டாமை டீச்சர் என புகழ்பெற்ற இந்த நடிகை துணை நடிகையாகத்தான் படங்களில் வந்தார். பின்னர் கதா நாயகியாக அறிமுகமானது ராமராஜனின் வில்லுப்பாட்டுக்காரன் எனும் திரைப்படத்தில். அந்த படத்தில் ராணி என்ற பெயரில் அறிமுகமானார். ஆனால், இந்த படம் இவருக்கு அவ்வளவு பெரிய புகழை தேடித்தரவில்லை.
நாட்டாமை டீச்சர்!
நாட்டாமை டீச்சர் பெரும் புகழ் பெற, இவரது கவர்ச்சி மட்டுமே காரணம் அல்ல. சிற்பியின் அந்த மறக்க முடியாத பின்னணி இசை, கவுண்ட மணியின் நாட்டாமை தம்பி டீச்சர வெச்சுருக்காண்டா என்ற காமெடி காட்சிகள் போன்றவை தான் ரசிகர் மனதில் நாட்டாமை டீச்சர் கதாபாத்திரம் ஆழப்பதிய காரணமானது. நாட்டாமை இந்தி ரீமேக்கிலும் இவர் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் ஜோடி!
தனது இரண்டாவது படத்தில் விக்ரமுடன்தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்தார் ரக்ஷா. ஆனால், நடிப்பை விட கவர்ச்சி தான் தனக்கு நன்றாக வருவதாக கருதி, தொடர்ந்து கவர்ச்சி பாடல்களில், கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கினார்.
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா....
காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற வெள்ளரிக்கா, பிஞ்சி வெள்ளரிக்கா எனும் கானா பாடலில் இவர் நடனம் ஆடியிருந்தார். இந்த பாடலும் இவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பாடல்களில் இவர் நடனமாடினார்.
ஓ போடு!
இதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரமின் ஜெமினி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலும், ஓ போடு எனும் வசனத்தின் மூலமாக பிரபலமடைந்தார் ரக்ஷா. இதன் பிறகு தமிழகம் எனும் ஓ போடாத நபர்களே இல்லை எனலாம். விக்ரம் பின்னணி பாடிய "ஓ போடு" வருடத்தின் மெகாஹிட் பாடலானது.
திருமணம்!
இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு தீக்ஷா எனும் குழந்தையும் இருக்கிறார்.
கிளாமருக்கு நோ!
இப்போது கவர்ச்சி வேடங்களுக்கு நோ சொல்லும் நாட்டாமை டீச்சர், கதாபாத்திரம் ஏற்ற நடிக்க விரும்புகிறாராம். மேலும் இவர், சில படங்களை தயாரித்தும் வருகிறாராம் என கூறப்படுகிறது.