Latest Updates
-
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்!
தாஜ்மகால் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத உண்மைகள்!
தாஜ்மகால், உலக காதலின் இலச்சினையாய் திகழும் ஓர் இந்திய கலை பொருள். இதன் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்திருந்தளும், இதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் உயிரின் காதலும், நேசமும் விலைமதிப்பற்றதாகும்.
பல ஆண்டுகளாக, பல ஆயிரக்கணக்கான வேலையாட்களை கொண்டு விலைமதிப்பற்ற சலவை கற்கள் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது தாஜ்மகால். உண்மையில், இதன் நேர் எதிராக பிரதிபலிக்கும் மற்றுமொரு தாஜ் மகாலையும் கட்ட ஷாஜாகான் நினைத்திருந்தார்.
காலத்தை கடந்து நிற்கும் இந்த காவிய சின்னத்தை பற்றிய சில வியக்க வைக்கும் தகவல்கள் பற்றி இனி காணலாம்....

தகவல் # 1
தாஜ்மகால் அதிகாலை பின்க் நிறத்திலும், நாள் வேளையில் வெள்ளை நிறத்திலும், இரவு நிலா வெளிச்சத்தில் கோல்டன் நிறத்திலும் காட்சியளிக்கும்.

தகவல் # 1
தாஜ்மகாலின் தூண்கள், வெளிப்புறத்தில் சாற்றி சாந்திருப்பது போன்று தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், பூகம்பம் வந்தாலும் கூட, அவை கட்டிடத்தின் மீது விழாமல், வெளிப்புறத்தில் தான் விழும்.

தகவல் # 3
மிக ரம்மியமான இந்த கட்டிடத்தை கட்ட 28 வகையான விலைமதிப்பற்ற சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டன.

தகவல் # 4
தாஜ்மகாலை நீங்கள் எந்த திசையில் இருந்து பார்தால்லும் சமச்சீரான அளவில் / தோற்றத்தில் தான் தெரியும். ஆனால், உள்ளே இருக்கும் கல்லறைகள் இரண்டும் வெவ்வேறு அளவில் இருக்கின்றன. பெண் கல்லறையைவிட, ஆண் கல்லறை பெரிது என கூறப்படுகிறது.

தகவல் # 5
அந்த காலத்தில் தாஜ்மகாலை கட்டிமுடிக்க, 32 மில்லியன் இந்திய பணம் செலவாகி இருக்கலாம் என்றும். அதன் இன்றைய மதிப்பு, 1 பில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது.

தகவல் # 6
வெள்ளை தாஜ்மகாலை போலவே, கருப்பு தாஜ்மகால் ஆறுக்கு மறுபுறம் கட்டும் யோசனை இருந்தது.

தகவல் # 7
பேரரசர் ஷாஜகான், தாஜ்மகாலை கட்டிமுடிதவுடன், கட்டிட பணியில் வேலை செய்த அனைவரின் கைகளையும் வெட்டிவிட கூறினார் என்றும், தாஜ்மகால் போன்ற மற்றொரு கட்டிடம் உருவாகிவிட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்றும் வரலாற்று தகவல்களின் மூலம் அறியப்படுகிறது.

தகவல் # 8
தாஜ்மகாலை கட்ட, கட்டிட பொருட்களை கொண்டுவர 1000 யானைகள் பயன்படுத்தப்பட்டன.

தகவல் # 9
தாஜ்மகாலின் கட்டிட நுணுக்கம் பெர்சியன், மத்திய ஆசிய, இஸ்லாமிய கட்டிட கலையின் கலவை ஆகும். முகாலய அரசின் இந்த கட்டிடம் இன்றளவும் உலகும் வியக்கும் கலை பொருளாக திகழ்கிறது.

தகவல் # 10
22 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 22,000 பேர் வேலை செய்துள்ளனர்.



Click it and Unblock the Notifications