Latest Updates
-
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம்
தஞ்சை பெரிய கோவில் சென்று வந்து பதவி இழந்த அரசியல் பிரபலங்கள்!
தஞ்சை பெரிய கோவில், பிரகதீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் என்று அறியப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த பிரசித்தி பெற்ற பெரிய சிவத்தலம். ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர் பெருமையை தாங்கி நிற்கிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கும் தமிழக, இந்திய அரசியல் பிரபலங்களுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பலரும் அறிந்திராத தில்லை சிதம்பரம் கோயிலைப் பற்றிய இரகசியங்கள்!!
ஆனால், இது அவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் தொடர்பாகும். அதாவது பெரிய பதவியில் இருக்கும் இந்திய / தமிழக அரசியல் பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று திரும்பினால் அவர்களது பதவி அல்லது உயிருக்கு அபாயம் ஏற்படும் என்ற அச்சம் தான் அது.
அசாதாரணமான கோயில்களும் அதை சுற்றியிருக்கும் மர்மங்களும்!!
இது பல காலம் தொட்டு தொடர்ந்து வரும் துர்ச்சகுனமாக காணப்படுகிறது. எந்தெந்த அரசியல் பிரபலங்கள் இது போன்று தஞ்சை பெரிய கோவில் சென்று வந்த பிறகு அபாயத்தை சந்தித்துள்ளனர் என இனிக் காண்போம்...

கருணாநிதி
தஞ்சை பெரிய கோவில் உள்ளே புதிதாக வராஹி அம்மன் சிலை வைக்க பிரச்சனை எழும்பி, பிறகு அந்த புதிய மண்டபம் இடித்த அதே நாளான ஜனவரி 31 1976-ம் ஆண்டு தான் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இந்திராகாந்தி
அந்த வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராகாந்தியின் பதவியும், ஆட்சியையும் அதன் பிறகு பறிபோனதும் குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. அந்த வைபவத்திற்கு சென்ற போது அங்கே சற்று மயக்கம் அடைந்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு தான் எம்.ஜி.ஆர்-ன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

மீண்டும் தி.மு.க
இந்த அபசகுனத்தை உடைக்கிறேன் என்று சபதம் எடுத்து மீண்டும் ஆட்சியில் இருந்த கருணாநிதி அவர்களின் தி.மு.க அரசு தஞ்சை பெரிய கோவிலும் 1000 ஆண்டு விழாவை ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்கு சென்று வந்த பிறகு பல தி.மு.க பிரபலங்கள் பதவி இழந்து, பல இன்னல்களை சந்தித்தனர்.

ராசா
மத்திய அமைச்சராக இருந்த ராசா பதவி இழந்ததோடு, ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கும் சென்றார்.

கனிமொழி
ராசாவை தொடர்ந்து அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியின் மகளான கனிமொழியும் சிறைக்கு சென்றார்.

கோ.சி.மணி
மேலும், கோ.சி மணி நோய்வாய்ப்பட்டு, உடல்நலம் மோசமடைந்தார்.

பழனி மாணிக்கம்
பழனி மாணிக்கம் பதவியும் இழந்து, மாவட்ட செயலர் பொறுப்பையும் இழந்தார்.

படுதோல்வி
வரலாறு காணாத வண்ணம், தி.மு.க மீண்டும் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு அரசியல் பிரபலங்களுக்கு மத்தியில் மேலும், தஞ்சை பெரிய கோவில் மீதான அச்சம் அதிகமானது.



Click it and Unblock the Notifications