Latest Updates
-
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...!
மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நமது இந்திய புராணங்களில் பல புனைவுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நாகங்கள் என கூறப்படும் பாம்புகள் பற்றி பல விசித்திரமான விஷயங்களும் இருக்கின்றன. பாம்பை அடித்துக் கொன்றால், நமது குழந்தைகளும் பாம்பு போல பிறக்கும்.
பாம்பு தன்னை துன்புறுத்தும் நபர்களை காத்திருந்து பழிக்குப்பழி வாங்கும். தனக்கு நன்மை செய்தா, வணங்கினால் நமது துணையாக இருக்கும் என பல கதைகளில், புராணங்களில் நாம் படித்திருக்கிறோம். அதில் ஒன்று தான் இந்த மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பும்.

தகவல் #1
இச்சாதாரி நாகம் பல உருவம் மாறும் தன்மை உடையது என இந்திய புராணங்கள் மற்றும் நாடோடி பாடல்கள் மூலம் அறியப்படும் ஓர் கூற்றாகும். முக்கியமாக இது மனித வடிவில் உருமாறும் என்ற கூற்றும் பல காலமாக நிலவி வருகிறது.

தகவல் #2
இச்சாதாரி நாகம் வைரத்தை விட விலை உயர்ந்த மாணிக்க கல்லை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

தகவல் #3
இந்த மாணிக்க கல்லை திருட முயன்று பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என புனைவுகள் பல காணப்படுகின்றன.

தகவல் #4
இந்த இச்சாதாரி பாம்பை மகுடி ஊதி தான் கட்டுப்படுத்த முடியும் எனவும் புனைவுகள் காணப்படுகிறது.

தகவல் #5
இச்சாதாரி நாகம் பற்றிய பல காமிக் கதைகள் இருக்கின்றன. நாகராஜ் என்ற பாம்பை பற்றிய சூப்பர் ஹீரோ காமிக் கதையில் கூட இது சார்ந்டாஹ் நிறைய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.

தகவல் #6
துசி (Tausi) எனும் இந்தி காமிக்கில் கூட மனிதனாக உருமாறும் பாம்பை பற்றிய புனைவுகள் இருக்கின்றன. பல குழந்தை சிறுகதைகளில் இது போன்ற புனைவுகள் காணப்படுகின்றன.

தகவல் #7
பாலிவுட்டில், 1954ம் ஆண்டு நாகின் என்ற படத்திலும், 1986ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த நாகினா என்ற படத்திலும், 1976ம் ஆண்டு ரீனாராய் நடித்த நாகின் என்ற படத்திலும் கூட இந்த பாம்பை பற்றிய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications











