Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நமது இந்திய புராணங்களில் பல புனைவுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நாகங்கள் என கூறப்படும் பாம்புகள் பற்றி பல விசித்திரமான விஷயங்களும் இருக்கின்றன. பாம்பை அடித்துக் கொன்றால், நமது குழந்தைகளும் பாம்பு போல பிறக்கும்.
பாம்பு தன்னை துன்புறுத்தும் நபர்களை காத்திருந்து பழிக்குப்பழி வாங்கும். தனக்கு நன்மை செய்தா, வணங்கினால் நமது துணையாக இருக்கும் என பல கதைகளில், புராணங்களில் நாம் படித்திருக்கிறோம். அதில் ஒன்று தான் இந்த மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பும்.

தகவல் #1
இச்சாதாரி நாகம் பல உருவம் மாறும் தன்மை உடையது என இந்திய புராணங்கள் மற்றும் நாடோடி பாடல்கள் மூலம் அறியப்படும் ஓர் கூற்றாகும். முக்கியமாக இது மனித வடிவில் உருமாறும் என்ற கூற்றும் பல காலமாக நிலவி வருகிறது.

தகவல் #2
இச்சாதாரி நாகம் வைரத்தை விட விலை உயர்ந்த மாணிக்க கல்லை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

தகவல் #3
இந்த மாணிக்க கல்லை திருட முயன்று பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என புனைவுகள் பல காணப்படுகின்றன.

தகவல் #4
இந்த இச்சாதாரி பாம்பை மகுடி ஊதி தான் கட்டுப்படுத்த முடியும் எனவும் புனைவுகள் காணப்படுகிறது.

தகவல் #5
இச்சாதாரி நாகம் பற்றிய பல காமிக் கதைகள் இருக்கின்றன. நாகராஜ் என்ற பாம்பை பற்றிய சூப்பர் ஹீரோ காமிக் கதையில் கூட இது சார்ந்டாஹ் நிறைய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.

தகவல் #6
துசி (Tausi) எனும் இந்தி காமிக்கில் கூட மனிதனாக உருமாறும் பாம்பை பற்றிய புனைவுகள் இருக்கின்றன. பல குழந்தை சிறுகதைகளில் இது போன்ற புனைவுகள் காணப்படுகின்றன.

தகவல் #7
பாலிவுட்டில், 1954ம் ஆண்டு நாகின் என்ற படத்திலும், 1986ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த நாகினா என்ற படத்திலும், 1976ம் ஆண்டு ரீனாராய் நடித்த நாகின் என்ற படத்திலும் கூட இந்த பாம்பை பற்றிய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications