Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஒவ்வொரு இந்தியனும் தலை வணங்க வேண்டிய இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகள்!
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கலந்து கொண்டு, அவர்களுள் பலர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு வாழ்ந்து வந்த இந்திய நாட்டை வியர்வை மற்றும் செந்நீர் சிந்தி, இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தலை வணங்க வேண்டியது மிகவும் முக்கியம். அத்தகைய இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கலந்து கொண்டு, அவர்களுள் பலர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
அப்படி நம் நாடு சுதந்திரம் அடைய அரும்பாடு பட்ட பெண்களை நினைவுகூறும் வகையில், தமிழ் போல்ட் ஸ்கை ஒவ்வொரு இந்தியனும் தலை வணங்க வேண்டிய சில இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகளைப் பட்டியலிட்டுள்ளது.

இராணி வேலு நாச்சியார்
தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியின் ராணியான வேலுநாச்சியார் 18 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார். மேலும் முதன் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக முதலில் ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட தலைவியும் இவரேயாவார். இவர் பல மொழிகளைக் கற்றவர். இவரது பெற்றோர் இவரை ஆண் வாரிசு போன்றே வளர்த்தனர்.

கிட்டூர் ராணி சென்னம்மா
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் ராணி சென்னம்மா. கர்நாடக மாநிலத்தில் பிரிட்டிஷ்காரகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய இவர், இறுதியில் தன் உயிரை இழந்தார். மேலும் இன்றளவும், கர்நாடகத்தில் துணிச்சலான மற்றும் வீரப் பெண்மணிகளுள் ஒருவராக திகழ்கிறார்.

ராணி லட்சுமிபாய்
ஜான்சி நாட்டின் ராணியான இவர் இந்திய கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக பெரும் படைகளைத் திரட்டி, விடுதலைப் போரில் தீவிரமாக இறங்கினார். மேலும் இந்திய விடுதலைப் போராட்ட பெண்மணிகளுள் துணிச்சல்மிக்க சிறந்த பெண்மணிகளுள் ஒருவராகவும் திகழ்கிறார்.

ஜானகி ஆதி நாகப்பன்
மலேசியாவைச் சேர்ந்த இவர், இந்திய விடுதலைக்காக சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி லட்சுமிபாய் படையின் துணை தளபதியாக இருந்து, இந்தியா பர்மா எல்லையில் துப்பாக்கி ஏந்திய போர் வீராங்கனையாக இருந்தவர். மேலும் இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசிய பெண்மணி இவரே ஆவார்.

சரோஜினி நாயுடு
இந்திய சுதந்திர போராட்டத்தில் தேச பிதாவான மகாத்மா காந்தியுடன் தண்டி யாத்திரையில் ஈடுபட்டவர் தான் சரோஜினி நாயுடு. இவர் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர். மேலும் உத்திர பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் இவரே ஆவார். இவரது பிறந்த நாளைத் தான் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம்.

விஜயலட்சுமி பண்டிட்
ஜவஹர்லால் நேருவின் சகோதரியான இவருக்கும், நாட்டுப்பற்று அதிகம். நம் நாட்டில் ஒரு ஆண்கள் தொண்டாற்றிய பின், ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் ஜனாதிபதியானார். இவர் மிகவும் சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, அரசியல்வாதி.



Click it and Unblock the Notifications