சோழ பேரரசின் வீழ்ச்சியை பற்றிய வரலாற்று தகவல்கள்!!

சோழ இராஜ்ஜியம் என்பது பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூன்று முப்பெரும் குலத்தவரான சேரர், பாண்டியர், சோழர்களில் ஓர் பெரும் பகுதியை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்டு பெரும் இராஜ்ஜியம் ஆகும். பொதுவாக நெல் இயற்கையாக அல்லது மிகுதியாக விளையும் பூமி சோழர் நாடெனும் பெருமை பெற்று இருந்துது.

முதலாம் குலோத்துங்க சோழன் பற்றி பலரும் அறிந்திராத சரித்திர தகவல்கள்!!!

கடற்படை கொண்டு சமுத்திரம் தாண்டி மண்ணை ஆண்ட பெருமை கொண்டவர்கள் சோழர்கள். வெற்றிக்கு இணையான தோல்வியையும் தழுவி தான் ஆகா வேண்டும் என்பது இயற்கையின் நியதி. என்னதான் பாரத தேசியம் முழுவதையும் ஆண்ட இராஜ்ஜியம் எனிலும் கூட, 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சோழர் இராஜ்ஜியம் வலுவிழந்து போனது.....

பலரும் அறியாத அதிராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்று தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதலாம் குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்கனுக்குப் பிறகு அவரது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.

ஒய்சாளர்களின் செல்வாக்கு

ஒய்சாளர்களின் செல்வாக்கு

இந்த காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து காணப்பட்டனர். சோழ நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர தொடங்கியது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்து காத்திருந்தனர். இதே நேரத்தில் தெற்கே பாண்டியர்கள் வலிமை பெற்றனர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்து இருந்தது. இவை அனைத்தும் சோழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

கங்கைகொண்ட சோழபுரம் மீது போர்

கங்கைகொண்ட சோழபுரம் மீது போர்

1216 -ல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இரண்டாம் நரசிம்மன் ஆதரவு

இரண்டாம் நரசிம்மன் ஆதரவு

சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான்.

பாண்டியர்கள் எழுச்சி

பாண்டியர்கள் எழுச்சி

மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்றார்கள்.

நிலைகுலைந்து போன சோழ இராஜ்ஜியம்

நிலைகுலைந்து போன சோழ இராஜ்ஜியம்

பாண்டியர்களிடம் சந்தித்த தோல்விக்கு பிறகு சிற்றரசர்கள் நிலைக்கு போன்று நிலைகுலைந்து போயினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 21, 2015, 11:24 [IST]
Desktop Bottom Promotion