Latest Updates
-
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்!
சோழ பேரரசின் வீழ்ச்சியை பற்றிய வரலாற்று தகவல்கள்!!
சோழ இராஜ்ஜியம் என்பது பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூன்று முப்பெரும் குலத்தவரான சேரர், பாண்டியர், சோழர்களில் ஓர் பெரும் பகுதியை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்டு பெரும் இராஜ்ஜியம் ஆகும். பொதுவாக நெல் இயற்கையாக அல்லது மிகுதியாக விளையும் பூமி சோழர் நாடெனும் பெருமை பெற்று இருந்துது.
முதலாம் குலோத்துங்க சோழன் பற்றி பலரும் அறிந்திராத சரித்திர தகவல்கள்!!!
கடற்படை கொண்டு சமுத்திரம் தாண்டி மண்ணை ஆண்ட பெருமை கொண்டவர்கள் சோழர்கள். வெற்றிக்கு இணையான தோல்வியையும் தழுவி தான் ஆகா வேண்டும் என்பது இயற்கையின் நியதி. என்னதான் பாரத தேசியம் முழுவதையும் ஆண்ட இராஜ்ஜியம் எனிலும் கூட, 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சோழர் இராஜ்ஜியம் வலுவிழந்து போனது.....
பலரும் அறியாத அதிராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்று தகவல்கள்!!!

முதலாம் குலோத்துங்கன்
முதலாம் குலோத்துங்கனுக்குப் பிறகு அவரது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.

ஒய்சாளர்களின் செல்வாக்கு
இந்த காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து காணப்பட்டனர். சோழ நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர தொடங்கியது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்து காத்திருந்தனர். இதே நேரத்தில் தெற்கே பாண்டியர்கள் வலிமை பெற்றனர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்து இருந்தது. இவை அனைத்தும் சோழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

கங்கைகொண்ட சோழபுரம் மீது போர்
1216 -ல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இரண்டாம் நரசிம்மன் ஆதரவு
சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான்.

பாண்டியர்கள் எழுச்சி
மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்றார்கள்.

நிலைகுலைந்து போன சோழ இராஜ்ஜியம்
பாண்டியர்களிடம் சந்தித்த தோல்விக்கு பிறகு சிற்றரசர்கள் நிலைக்கு போன்று நிலைகுலைந்து போயினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிவிட்டது.



Click it and Unblock the Notifications











