நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகளின் படி 2026-ல் நடக்கப்போகும் உலகையே நடுங்க வைக்கப்போகும் நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?

எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் உலகப்புகழ் பெற்றவர் என்றால் நோஸ்ட்ராடாமஸ்தான். புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பு தற்போது வைரலாகி வருவதால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். போப் பிரான்சிஸின் மரணத்தையும், புதிய போப் பொறுப்பேற்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அவரது தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே கணித்ததாக பலர் நம்பினர்.

1555 இல் வெளியிடப்பட்ட அவரது லெஸ் ப்ராபெடிஸ் (தீர்க்கதரிசனங்கள்) என்ற புத்தகத்திற்காக நோஸ்ட்ராடாமஸ் இன்றும் அறியப்படுகிறார். இது உலகளாவிய நிகழ்வுகளுக்கு பரவலாக விளக்கப்படும் 942 கவிதைத் தொகுப்புகளைக் கொண்டிருந்தது. 2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வரப்போகிற ஆண்டு என்னென்ன நிகழ்வுகளைக் கொண்டுவரப்போகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள்.

Nostradamus Shocking Predictions For 2026 Have Gone Viral

மறைந்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகளுக்குப் பிறகு, அனைவரும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் படி வரப்போகிற ஆண்டில் என்னென்ன நடக்கபோகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேனீக்களின் பெரும் கூட்டம்

நோஸ்ட்ராடாமஸின் கவிதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பின் படி "தேனீக்களின் பெரும் கூட்டம் எழும்... இரவில் பதுங்கியிருந்து..." இது முற்றிலும் திகிலூட்டும் கணிப்பாகும், ஆனால் நிபுணர்கள் இதன் அர்த்தம் தேனீக்களின் கூட்டம் நம்மைத் தாக்கப் போகிறது என்று கூறவில்லை. பண்டைய எகிப்திலும் நெப்போலியனின் ஏகாதிபத்திய சின்னத்திலும் காணப்படுவது போல், தேனீக்கள் சில நேரங்களில் ஒரு அரசியல் சின்னமாகவும், முடியாட்சி மற்றும் அரசாட்சியைக் குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே உலகளவில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம்.

டிசினோவுக்கான எச்சரிக்கை

மற்றொரு தீர்க்கதரிசனத்தில் 'நகரம் காட்டும் உதவியின் காரணமாக... டிசினோ இரத்தத்தால் நிரம்பி வழியும்...' டிசினோ சுவிட்சர்லாந்தின் தெற்கே உள்ள மண்டலமாகும், இதில் காடுகள், ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த பெரிய பகுதி உள்ளது. இந்த கணிப்பில் இந்த மண்டலத்தைப் பற்றி ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை, ஆனால் இது மிகவும் ஆபத்தான கணிப்பாகும்.

செவ்வாய் வானத்தை ஆளும் மற்றும் கிழக்கிலிருந்து மூன்று நெருப்புகள் எழும்

மற்றொரு கணிப்பு "நட்சத்திரங்களுக்கிடையில் செவ்வாய் தனது பாதையை ஆளும்போது / மனித இரத்தம் சரணாலயத்தைத் தெளிக்கும் / கிழக்குப் பக்கங்களிலிருந்து மூன்று நெருப்புகள் எழுகின்றன, அதே நேரத்தில் மேற்கு அமைதியாக அதன் ஒளியை இழக்கிறது" என்று கூறுகிறது.

செவ்வாய் போர், மோதல் மற்றும் நெருப்பின் கிரகம் என்று கூறப்படுகிறது, எனவே இது 'மனித இரத்தம்' என்று குறிப்பிடப்படுவதைப் போல மோதல்கள் துரதிர்ஷ்டவசமாக அடிவானத்தில் இருக்கக்கூடும் என்ற பிற கணிப்புகளுடன் இணைக்கிறது. இதற்கிடையில், 'கிழக்கு பக்கங்களிலிருந்து மூன்று நெருப்புகள் எழுகின்றன' என்பது கிழக்கிலிருந்து வரும் புதிய சக்திகளான சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்றவை வளர்ச்சி அடையும். மேலும் 'மேற்கு அதன் ஒளியை இழப்பது' என்பது மேற்கத்திய உலகின் வெளிப்படையான வீழ்ச்சியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

'ஏழு மாதங்கள், பெரும் போர்

2026 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய மற்றொரு குவாட்ரெய்ன்: "ஏழு மாதங்கள் பெரும் போர், தீமையால் இறந்த மக்கள் / ரூவன், எவ்ரூக்ஸ் மன்னர் தோல்வியடைய மாட்டார்."

சில நிபுணர்கள் இதை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர், மற்றவர்கள் இதை மூன்றாம் உலகப் போருடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.

Story first published: Thursday, November 20, 2025, 13:49 [IST]
Desktop Bottom Promotion