Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
வருகிற 2025-ல் கடனில் இருந்து முழுமையா விடுபடணுமா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...
New Year 2025 Vastu Tips In Tamil: சந்தோஷமான வாழ்க்கை என்பது கடனில்லாத வாழ்க்கை தான். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையினால் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். சில சமயங்களில் சூழ்நிலைகளால் அதிகமாக கடனை வாங்கிவிட்டு, அதை அடைக்க முடியாமல் சிரமப்படுவோம். நீங்களும் அப்படி கடன் வாங்கி அதை அடைக்க முயற்சித்தும், அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு வாஸ்து குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.
வாஸ்துப்படி, ஒருவரது நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டுமானால், குடியிருக்கும் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அந்த வீட்டில் பண பிரச்சனை இருப்பதோடு, அந்த வீட்டுக்காரர் கடனாளியாக வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் வருகிற 2025 புத்தாண்டில் உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டுமானால், ஒருசில வாஸ்து பரிகாரங்களை செய்யுங்கள். இதனால் 2025-ல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

1. பணம் வைக்கும் திசை
வாஸ்துப்படி, வீட்டில் பணம் சேமித்து வைக்க சிறந்த திசை வடக்கு திசை தான். இந்த திசையில் அலமாரியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில் தான் குபேரர் மற்றும் லட்சுமி தேவி குடியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த திசையில் பணத்தை வைப்பது பண பிரச்சனைக் குறைப்பதோடு, கடன் தொல்லையில் இருந்தும் விடுவிக்கும்.
2. லட்சுமி மற்றும் குபேரர் வழிபாடு
வாஸ்துப்படி, வடக்குத் திசையில் லட்சுமி தேவி மற்றும் குபேரர் சிலை அல்லது படத்தை வைத்து வழிபட்டு வந்தால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். அதுவும் காலையில் மற்றும் மாலையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்யும் போது வாழ்க்கையில் உள்ள பணம் மற்றும் பிற பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக இந்த வழிபாட்டினால் நல்ல நிதி ஆதாயம் கிடைத்து, குடும்பத்தில் அமைதி பெருகும்.
3. அரச மர வழிபாடு
வாஸ்துப்படி, சனிக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் இந்நாளில் காலையில் குளித்துவிட்டு அரச மரத்தடியில் தீபம் ஏற்றி, வலம் வந்து வணங்கினால், கடன் இருந்து விடுபடலாம். ஏனெனில் அரச மரத்தில் விஷ்ணு பகவான் வசிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே இந்த மரத்தை வணங்கி வலம் வந்தால், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
4. செவ்வாய்கிழமை கடனை அடைக்கவும்
சாஸ்திரங்களின் படி, ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால், அந்த கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பி செலுத்தினால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம். அதோடு இந்நாளில் கடனை அடைக்கும் போது, கடன் சுமை குறைந்து, நிதி நிலையும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications