Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...!
கடலுக்குள் காணாமல் போன உலகின் மர்மமான 5 நகரங்கள்... இந்த நகரங்கள் மூழ்க காரணம் என்ன தெரியுமா?
கடந்த கால உலகம் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடலுக்குள் ஆராயும் போது பல சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் கண்டறியப்பட்டன. கடலில் மூழ்கியிருந்த பண்டைய நகரங்கள் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நகரங்கள் மூழ்கியதற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படாத ஒரு மர்மமாகவே உள்ளது.
பொதுவாக கடல் மட்ட உயர்வு, இயற்கை பேரழிவுகள் போன்ற நிகழ்வுகளால் இந்த நகரங்கள் கடலில் மூழ்கியிருந்தாலும் அந்த நகரங்கள் மூழ்கியதற்கான உண்மையான காரணங்கள் குறித்து இப்போதும் ஆய்வுகள் நடத்தப்பட்டுத்தான் வருகிறது. உலக வரலாற்றில் எந்தெந்த நகரங்கள் நீரில் மூழ்கின என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நகரங்கள் இப்போது நீரில் மட்டுமல்ல வரலாற்றின் ஆழத்திலும் மறைந்துவிட்டன. இந்த பதிவில் எந்தெந்த பண்டைய நகரங்கள் கடலில் மூழ்கியது என்று தெரிந்து கொள்ளலாம்.

பாவ்லோபேத்ரி, கிரீஸ்
பாவ்லோபேத்ரி என்பது கிரேக்கக் கடற்கரையிலிருந்து நீரில் மூழ்கிய ஒரு பழங்கால நகரம், இது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரமாகும். தெருக்கள், கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் உட்பட நன்கு பாதுகாக்கப்பட்ட இடிபாடுகளுடன் நீரில் மூழ்கிய மிகப் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இயற்கை பேரழிவுகள் அல்லது கடல் மட்ட உயர்வு காரணமாக இது கடலால் விழுங்கப்பட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நகரம் 1967 இல் கண்டுபிடிக்கப்பட்டது, இது கடந்த கால மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் கட்டிட அமைப்புகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்தது.
லயன் சிட்டி, சீனா
லயன் நகரம் சீனாவின் கியாண்டாவோ ஏரியின் ஆழத்தில் அமைந்துள்ளது, மேலும் 2001 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் தலைமையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கடந்த கால சீனப் பேரரசின் புதையலை தேடிச்சென்ற போது இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நகரம் 1300 களில் இருந்து அழகாகப் பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களைக் கொண்டிருந்தது, அவை இப்போதும் நீருக்கு அடியில் கம்பீரமாக நிற்கின்றன. தற்போது கியான்டாவோ ஏரி, நன்கு பாதுகாக்கப்பட்ட இந்த மூழ்கிய நகரத்தை ஆராய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் டைவர்ஸுக்கு ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது.
ஹெராக்ளியன், எகிப்து
தோனிஸ் என்றும் அழைக்கப்படும் ஹெராக்ளியன் நகரம், பண்டைய எகிப்தில் மிகவும் பிரபலமான ஒரு நகரமாக இருந்தது, இந்த நகரம் கண்டுபிடிக்கப்படும் வரை அது ஒரு கட்டுக்கதை என்றே கருதப்பட்டது. பின்னர் இது 2000 ஆம் ஆண்டில் மத்தியதரைக் கடலில் மூழ்கிய நிலையில் டசியால் டைவர்ஸ்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நகரம் கிமு 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகவும், பூகம்பங்கள், அலைகள் மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகள் காரணமாக கிபி 8 ஆம் நூற்றாண்டில் மத்தியதரைக் கடலின் ஆழத்தில் மூழ்கியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கோயில்கள் மற்றும் சிலைகளுடன் கூடிய இந்த பிரமாண்டமான நகரம் உண்மையில் எப்படி கடலுக்கு அடியில் சென்றது என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது.
யோனகுனி
யோனகுனி நினைவுச்சின்னம் ஜப்பானின் கடற்கரையில் அமைந்துள்ளது, இது மிகப்பெரிய கற்களின் உருவாக்கம் ஆகும், சிலர் இது ஒரு இயற்கையாகவே உருவான புவியியல் அமைப்பு என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் இது ஒரு பழங்கால நகரமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்த நீருக்கடியில் இருக்கும் கட்டுமானம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட நகரத்தின் இடிபாடுகளா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.
போர்ட் ராயல், ஜமைக்கா
17 ஆம் நூற்றாண்டில், போர்ட் ராயல் கடற்கொள்ளையர்கள் வசித்த மிகவும் பிரபலமான புகலிடமாகவும், கரீபியனின் மிகவும் வளமான நகரங்களில் ஒன்றாகவும் முக்கியத்துவம் பெற்றது. 1692 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பூகம்பம் இந்த நகரத்தின் பெரும்பகுதியை கடலில் மூழ்கடித்தது. இன்று, போர்ட் ராயல் ஒரு பிரபலமான டைவிங் இடமாக மாறியுள்ளது, இது ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த அதன் தெருக்களின் நீரில் மூழ்கிய இடிபாடுகளை ஆராய ஆய்வாளர்களை அனுமதிக்கிறது.



Click it and Unblock the Notifications












