15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானியின் வீடு உள்ள நிலம் யாருக்கு சொந்தமானது தெரியுமா? வெடித்த புதிய சர்ச்சை..

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி மற்றும் குடும்பத்தினருடன் இந்தியாவின் மிகப்பெரிய ஆடம்பர மாளிகையான 27 மாடி கொண்ட ஆன்டிலியாவில் வசிக்கிறார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாளிகையான இது கிட்டதட்ட 15000 கோடி மதிப்புள்ளது.

பல்வேறு ஆடம்பர வசதிகளை உள்ளடக்கிய இந்த மாளிகை நவீன கட்டிடக்கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பொதுவாக அதன் ஆடம்பரம், வடிவமைப்பு, விலை மற்றும் அதன் ஊழியர்கள் பற்றி விவாதத்திற்கு உள்ளாகும் ஆன்டிலியா தற்போது மற்றொரு காரணத்திற்காக விவாதத்திற்க்கு உள்ளாகியுள்ளது மற்றும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Mukesh Ambani s Rs 15000 Crore Home Antilia in Controversy Due to Waqf Amendment Act

வக்ஃப் திருத்த மசோதா 2025 முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீட்டை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. ஆன்டிலியா கட்டப்பட்ட நிலம் கடந்த காலத்தில் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்ற சர்ச்சை இருந்தது, தற்போது ஆன்டிலியாவின் நிலம் குறித்து மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆன்டிலியா நில சர்ச்சை

2002 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள அல்டமவுண்ட் சாலையில் 4,532.39 சதுர மீட்டர் பரப்பளவை அம்பானி ரூ.21.5 கோடிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, கரீம் பாய் இப்ராஹிம் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இந்த நிலம், முன்பு வக்ஃப் சொத்தாகப் பதிவு செய்யப்பட்டு, ஒரு அனாதை இல்லத்திற்காக ஒதுக்கப்பட்டதாக இருந்தது.

வக்ஃப் சட்டத்தின்படி, இதுபோன்ற நில பரிவர்த்தனைகளுக்கு வக்ஃப் வாரியத்தின் ஒப்புதல் தேவை, ஆனால் இந்த வழக்கில் அந்த வழிமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா வக்ஃப் வாரியத்தின் 2010 Action Taken Report (ATR) இந்த விற்பனை அங்கீகரிக்கப்படாதது என்று குற்றம் சாட்டியது, ஏனெனில் அது வாரியத்தின் கட்டாயமான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதலைப் பெறவில்லை. பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்த அறக்கட்டளை ஆணையருக்கு சட்டப்பூர்வ அதிகார வரம்பு இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

வக்ஃப் திருத்த மசோதாவுக்குப் பிறகான மாற்றம்

வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் பதிவுகளை பராமரிப்பதை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா 2025, முகேஷ் அம்பானியின் ஆன்டிலியாவை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த காலத்தில் அரசியல் தலைவர்களான அசாதுதீன் ஓவைசி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இந்த நிலம் பொது நலனுக்கானது என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த நிலம், வக்ஃப் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மகாராஷ்டிரா வக்ஃப் வாரியத்தின் ATR, அதிகாரப்பூர்வ வாரிய ஒப்புதல் எதுவும் பெறப்படவில்லை என்று கூறியது. வக்ஃப் சொத்துக்களை எந்த சூழ்நிலையிலும் தனிப்பட்ட நபர்களுக்கு விற்க முடியாது என்று சிலர் கூறினர்.

வக்ஃப் சட்ட திருத்தம்

வக்ஃப் மசோதா 2025 சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை மேலும் பிரபலமடைந்துள்ளது. தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த மசோதா, இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துக்களின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானி சிக்கல்களை எதிர்கொள்வாரா?

வக்ஃப் திருத்த மசோதா சட்டமாக மாறினால், தீர்க்கப்படாத வழக்குகளை மறுபரிசீலனை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வக்ஃப் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்படலாம். இருப்பினும், இந்த வழக்குகள் குறித்த நீதிமன்ற தீர்ப்பு இல்லாமல், ஏற்கனவே கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் சொத்துக்களில் அரசாங்கம் தலையிட முடியாது. ஆன்டிலியா நில விற்பனை மேலும் சட்ட சவால்களை எதிர்கொள்ளுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Desktop Bottom Promotion