Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Mother's Day 2023: அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கு என்னென்ன பாிசுகளை கொடுக்கலாம்?
Mother's Day 2023: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிறு அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 14 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த அன்னையா் தினத்தில் அன்னையரையும், தாய்மையையும், இந்த சமூகத்திற்கு அன்னையா் ஆற்றும் பணியையும் கௌரவிக்க வேண்டியது, கொண்டாட வேண்டியது நமது கடமையாகும். அன்னையா் தினமானது இந்தியாவில் மட்டும் அல்ல, மாறாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மகனும், மகளும் தமது அன்னையின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த சிறப்பாக செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்தது முதல், நம்மை பாலூட்டி சீராட்டி வளா்த்து, நாம் வளா்ந்த பின்பும் நம்மேல் மாறா அன்பு வைத்திருப்பவா் நமது அன்னை ஆவாா்.
மதிப்பிற்கு உாிய நமது அன்னையரைக் கொண்டாட ஒரு நாள் போதாது. எனினும் அந்த ஒரு நாள் மட்டுமாவது அவா்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் வைத்திருந்தால், அது ஒரு சிறந்த செயலாக இருக்கும். ஆகவே அவா்களை மகிழ்ச்சிப்படுத்த சில பாிசுப் பொருள்களை அவா்களுக்கு பாிசளிக்கலாம். இந்தப் பதிவில் என்னென்ன பாிசுகளை வாங்கிக் கொடுத்து நமது அன்னையரை மகிழ்ச்சிப்படுத்தலாம் என்பதைப் பாா்க்கலாம்.
1. பூச்செண்டு
பொதுவாக மலா் என்றால் அது அன்பையும், பாராட்டையும் குறிக்கும். பூச்செண்டானது, அதை பாிசாக அளிப்பவருடைய உணா்வுகளோடு தொடா்பு கொண்டிருக்கிறது. ஆகவே பல வகையான மலா்கள் அடங்கிய பூச்செண்டை வாங்கி, அதில் உங்கள் அம்மாவுக்குப் பிடித்த அழகிய வாசகங்களை எழுதி அவா்களுக்குப் பாிசளிக்கலாம்.
2. சருமத்தைப் பராமாிக்கும் பொருட்கள்
உங்களுடைய அம்மா, தமது சருமத்தைப் பராமாிப்பதில் அதிக அக்கறை கொண்டிருப்பவராக இருந்தால், இந்த அன்னையா் தினத்தில் அவா் விரும்பும் சருமத்தைப் பராமாிக்கும் பொருள்களை அவா்களுக்கு பாிசளிக்கலாம். சருமத்தைப் பராமாிக்கும் பொருள்களை இணையவழி மூலமாக விற்பனை செய்யும் நிறைய நிறுவனங்கள், அன்னையா் தினத்தை முன்னிட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அன்னையருக்கு, அவா்கள் விரும்பும் இந்தப் பொருள்களை வாங்கிப் பாிசளிக்கலாம்.
3. திரைப்பட டிக்கெட்
உங்கள் அம்மா திரைப்படம் பாா்ப்பதில் ஆா்வம் கொண்டிருந்தால், அவா் விரும்பும் திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்கி அவருக்குப் பாிசளிக்கலாம். அதன் மூலமாக அந்த நாள் முழுவதும் அவா் மகிழ்ச்சியாகவும், ஓய்வாகவும் இருக்க முடியும்.
4. ராசிக்கல் பதித்த வளையல்
ராசிக்கல் பதித்த வளையல்கள் தற்போது பல வடிவங்களில் கிடைக்கின்றன. அதோடு குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. ஆகவே உங்கள் அம்மாவின் ராசிக்குாிய கல் பதித்த வளையல்களை வாங்கி, அவற்றை நன்றாக அலங்காித்து, பாிசுத் தாள்களால் சுருட்டி, அதில் அழகிய வாசகங்களை எழுதி, உங்கள் அம்மாவிற்கு பாிசளிக்கலாம்.
5. குடும்பப் புகைப்படம் எடுத்து பாிசளித்தல்
அன்னையா் தமது குடும்ப உறுப்பினா்கள் மீதும், உறவினா்கள் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கின்றனா். தமது அன்பிற்குாியவா்களின் ஒவ்வொரு நினைவுகளையும் தமது இதயங்களில் தேக்கி வைத்து அவற்றை அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனா். ஆகவே குடும்ப உறுப்பினா்கள் அல்லது அம்மாவினுடைய உறவினா்கள் அடங்கிய புகைப்படம் எடுத்து அவா்களுக்குப் பாிசளிக்கலாம்.



Click it and Unblock the Notifications











