Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 7 சூரிய கிரகணங்கள் வரலாற்றில் ரொம்ப முக்கியமானவையாம்... அந்த நாளில் நடந்த சம்பவங்கள் என்ன தெரியுமா?
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று வருகிறது. ஒவ்வொரு சூரிய கிரகணமும் அறிவியிலுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆனால் சூரிய கிரகணம் வரலாற்றில் பல முக்கியமான விஷயங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது. பழங்காலத்தில் மக்கள் சந்திரன் சூரியனை மறைக்கும் இந்த நிகழ்வை சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தனர்.
கடந்த காலங்களில் சூரிய கிரகணம் வரவிருக்கும் அதிசயத்தைக் குறிக்கும் சகுனங்கள், கடவுளின் கோபம் அல்லது ஆளும் வம்சத்தின் அழிவு போன்ற சம்பவங்களை குறிப்பதாக கருதப்பட்டது. வரலாற்றில் இது போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய மறக்க முடியாத சூரிய கிரகணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உகாரிட் கிரகணம்
வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சூரிய கிரகணங்களில் ஒன்றான உகாரிட் கிரகணம் கிமு 1374 இல் நீல வானத்தை இரண்டு நிமிடங்கள் ஏழு வினாடிகள் இருளில் மூழ்கடித்தது. வடக்கு சிரியாவின் துறைமுக நகரமான உகாரிட்டில் உள்ள மெசபடோமிய வரலாற்றாசிரியர்கள், இந்த முழு கிரகணத்தின் போது சூரியன் "அவமானத்திற்கு ஆளானார்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆரம்பகால சீன கிரகணம்
கிமு 1302 இல், சீன வரலாற்றாசிரியர்கள் ஆறு நிமிடங்கள் மற்றும் 25 வினாடிகளுக்கு முழு சூரிய கிரகணத்தை ஆவணப்படுத்தினர். சூரியன் சக்கரவர்த்தியின் அடையாளமாக இருந்ததால், மன்னருக்கு எச்சரிக்கையாக இந்த கிரகணம் காணப்பட்டது. ஒரு கிரகணத்திற்குப் பிறகு, ஒரு பேரரசர் சைவ உணவுகளை சாப்பிட்டு, சூரியனை மீட்பதற்கான சடங்குகளைச் செய்வார் என்று 2003 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் அஸ்ட்ரோனமிகல் ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ் ஆய்வு தெரிவிக்கிறது.
அசிரிய கிரகணம்
கிமு 763 இல், தற்போதைய ஈராக்கை அசீரியப் பேரரசு ஆக்கிரமித்த போது, சூரியனை ஐந்து நிமிடங்களுக்கு முழுமையாக மறைத்த சூரிய கிரகணம் ஏற்பட்டது. அக்காலத்தின் வரலாற்றுப் பதிவுகள் இந்த சூரிய கிரகணத்தை அஷூர் நகரத்தில் ஒரு கிளர்ச்சியாகக் குறிப்பிடுகின்றன.
இயேசுவின் சிலுவை மரணம்
இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட பிறகு பல மணிநேரங்களுக்கு வானம் இருண்டதாக கிறிஸ்தவ சுவிசேஷங்கள் கூறுகின்றன, வரலாற்றாசிரியர்கள் இதை ஒரு அதிசயமாக அல்லது வரவிருக்கும் இருண்ட காலத்தின் அடையாளமாக கருதினர். வானவியலைப் பயன்படுத்தி, பிற்கால வரலாற்றாசிரியர்கள் கிறிஸ்துவின் மரணத்தைக் குறிக்க இந்தக் குறிப்பைப் பயன்படுத்தினர்.
முகமதுவின் பிறப்பு
குரான் முகமது பிறப்பதற்கு முந்தைய கிரகணத்தைக் குறிப்பிடுகிறது. 569 C.E இல் மூன்று நிமிடங்கள் 17 வினாடிகள் நீடித்த முழு கிரகணத்துடன் வரலாற்றாசிரியர்கள் இதை இணைத்தனர். முகமதுவின் மகன் இப்ராஹிம் இறந்த ஒரு நிமிடம் மற்றும் 40 வினாடிகளுக்கு சூரியனும் மறைந்தது. ஆனால் அவர் கிரகணம் கடவுளின் அடையாளம் என்று நம்பவில்லை. அதற்கு பதிலாக, ஹதீஸ்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய நூல்களின்படி, முகமது "சூரியனும் சந்திரனும் யாருடைய மரணத்திற்கும் தங்கள் செயல்பாட்டை நிறுத்துவதில்லை" என்று அறிவித்தார்.
கிங் ஹென்றியின் கிரகணம்
1133 இல் வில்லியம் தி கான்குவரரின் மகன் இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஹென்றி இறந்தபோது, அந்த நிகழ்வு நான்கு நிமிடங்கள் மற்றும் 38 வினாடிகள் நீடித்த முழு சூரிய கிரகணத்துடன் ஒத்துப்போனது. மால்மெஸ்பரியின் வில்லியம் எழுதிய வரலாற்று பதிவுகளின் படி, "பயங்கரமான இருள்" மனிதர்களின் இதயங்களைத் தூண்டியது என்று விவரிக்கிறது. மரணத்திற்குப் பிறகு, சிம்மாசனத்திற்கான போராட்டம் ராஜ்யத்தை குழப்பத்திலும் உள்நாட்டுப் போரிலும் தள்ளியது.
ஐன்ஸ்டீன் கிரகணம்
முன்னோர்கள் கிரகணங்களை கடவுளின் மாபெரும் செயல்களின் அடையாளங்களாகக் கருதினாலும், இயற்பியலாளர்கள் 1919 நடைபெற்ற சூரிய கிரகணத்தை அறிவியலின் வெற்றியாகக் கருதினர். 1919 இன் கிரகணத்தின் போது, சூரியன் ஆறு நிமிடங்கள் மற்றும் 51 வினாடிகள் மறைந்தபோது, விஞ்ஞானிகள் சூரியனுக்கு அருகில் செல்லும் போது நட்சத்திரங்களிலிருந்து ஒளியின் வளைவை அளந்தனர். இந்த கண்டுபிடிப்புகள் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டை உறுதிப்படுத்தியது, இது ஈர்ப்பு விசை விண்வெளி நேரத்தை மாற்றுவதாக விவரிக்கிறது.



Click it and Unblock the Notifications













