Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
238 தேர்தலில் தோல்வியடைந்து இந்தியாவின் 'தேர்தல் ராஜா' என்று புகழப்படும் தமிழ்நாட்டை சேர்ந்த அதிசய மனிதர்...!
இந்தியாவில் தேர்தல் திருவிழாடீ தொடங்கி வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. தேர்தலில் நிற்கும் அனைவருக்குமே வெற்றிதான் இலக்காக இருக்கும். தேர்தல் தோல்வி என்பது ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும், ஆனால் தேர்தலில் நின்று தோற்பதன் மூலமாகவே தமிழநாட்டை சேர்ந்த ஒருவர் மாபெரும் சாதனை படைத்துள்ளார். அதனால்தான் அவர் 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படுகிறார். தற்போது மீண்டும் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் களம் காண்கிறார்.

கே.பத்மராஜன் என்ற தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான பஞ்சர் ஓட்டும் தொழிலாளி ஒருவர் கடந்த முப்பது ஆண்டுகளாகி நூற்றுக்கணக்கான தேர்தல்களில் பங்கேற்று பதிவுக் கட்டணத்திற்காக பல லட்சங்களை செலவிட்டுள்ளார். 2011-ம் ஆண்டு மேட்டூர் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 6,273 வாக்குகள் பெற்றபோதுதான் அவர் வெற்றிபெறுவதற்கு மிக அருகில் வந்தார்.
அவர் வெற்றியாளரை விட மிகவும் பின்தங்கியிருந்தார், வெற்றி பெற்றவர் 75,000 வாக்குகளுக்கு மேல் பெற்றார், ஆனால் அவர் வாங்கிய 6273 ஓட்டுகள் அவருக்கு ஒரு நாள் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. ஆனால் அந்த நாள் இன்றுவரை வரவில்லை, ஆனால் வெற்றி பெறுவது இரண்டாம் பட்சமே என்று பத்மராஜன் சமீபத்தில் சுட்டிக்காட்டினார். சகிப்புத்தன்மை மற்றும் தோல்வியை ஏற்றுக்கொள்வது முக்கியம், என்பதை அவரின் வாழ்க்கை சுட்டிக்காட்டுகிறது.
பஞ்சாயத்துத் தேர்தல்கள் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் உட்பட 238 தேர்தல்களில் அவர் போட்டியிட்டு இருந்தாலும், அவர் ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை, தேர்தலில் போட்டியிடுவதில் அசாதாரண சாதனை படைத்தவர் பத்மராஜன்.
எத்தனையோ தோல்விகளை சந்தித்தாலும், ஜனநாயகத்தில் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்க வேண்டும் என்று நம்பி மனம் தளராமல் இருக்கிறார் பத்மராஜன். அவரது விடாமுயற்சி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டெல்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் தேர்தல் வரலாற்றில் அதிக தோல்வியை சந்தித்த வேட்பாளர் என்ற அங்கீகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.
"அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றியைத் தேடுகிறார்கள், நான் இல்லை" என்று 65 வயதான பத்மராஜன் கூறினார். மேலும் அவர் அதனை விளையாட்டாக செய்யவில்லை. 238 தேர்தல் தோல்விக்குப் பிறகு, கே.பத்மராஜன் தோல்விப் பாதையை மேலும் நீளச்செய்ய முயற்சிக்கிறார். இந்த ஆண்டு, அவர் தனது 239 வது தேர்தலில் நுழைகிறார். எந்த ஒரு சாதாரண மனிதனும் அதிகாரமிக்க பதவிகளுக்கு போட்டியிட உரிமை உண்டு என்பதை காட்ட அவர் விரும்புகிறார்.
" இதுவரை நான் அடல் பிஹாரி வாஜ்பாய், பிவி நரசிம்மராவ், ஜெ ஜெயலலிதா, மு.கருணாநிதி, ஏகே ஆண்டனி, வயலார் ரவி, பிஎஸ் எடியூரப்பா, எஸ் பங்காரப்பா, எஸ்எம் கிருஷ்ணா, விஜய் மல்லையா, சதானந்த கவுடா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டேன். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களிலும் மொத்தம் 6 முறை போட்டியிட்டுள்ளேன். நான் வெற்றி பெற விரும்பவில்லை, தோல்வியை மட்டுமே அடைய வேண்டும், ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும், ஆனால் நீங்கள் என்றென்றும் இழப்பை அனுபவிக்க முடியும்," என்று அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
தேர்தல் செலவுக்காக இதுவரை சுமார் 1 கோடி ரூபாய் செலவழித்த பத்மராஜன், தனது டயர் பழுதுபார்க்கும் கடையில் கிடைக்கும் வருமானத்தை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்.



Click it and Unblock the Notifications












