20 மனைவிகளுக்கு மேல் வைத்திருந்த இந்திய அரசர்கள் யார் தெரியுமா? ஏன் இவ்வளவு திருமணம் செஞ்சாங்க தெரியுமா?

இந்தியர்கள் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் கடந்த காலங்களில் நிலைமை தலைகீழாக இருந்தது. ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது மிகவும் சாதாரணமானதாக இருந்தது. குறிப்பாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் இது மிகவும் சாதாரண நடைமுறையாக இருந்தது.

இந்திய அரச குடும்பங்களில் பலதார மணம் நடைமுறையில் இருந்தது. மகாராஜாக்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்தனர், இது அரசியல் தேவை மற்றும் ஆண் வாரிசுகளை பெற்றுக்கொள்வதற்காக பல பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள். பெரும்பாலான திருமணங்கள் அரச உடன்படிக்கைகளாகவே இருந்தது. இந்த பதிவில் பல மனைவிகளைக் கொண்டிருந்த சில இந்திய அரசர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

List of Indian Kings With Most Number of Wives

மகாராஜா பூபிந்தர் சிங் (1891-1938)

பட்டியாலா சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா பூபிந்தர் சிங் 10 மனைவிகளையும், அந்தப்புரத்தில் 350 பெண்களையும் கொண்டிருந்தார். அவர்கள் மூலம் மகாராஜா, 88 குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது, அவர்களில் 52 பேர் உயிர் பிழைத்தனர். அவருக்குப் பிடித்த ராணி மகாராணி ஸ்ரீ பக்தவர் கவுர் சாஹிபா ஆவார். மகாராஜா பூபிந்தர் சிங் அவரது உணவுமுறை, ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் கிரிக்கெட் ஆர்வம் என பல விஷயங்களுக்கு புகழ் பெற்றவராக இருந்தார்.

மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங் (1833-1880)

ஜெய்ப்பூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங் 10 முறை திருமணம் செய்து கொண்டார். ஜோத்பூர் மகாராஜாவின் மகளை முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குல வழக்கம் இருந்த போதிலும், மகாராஜா முதலில் ரேவா மகாராஜாவின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இருப்பினும், பிரிட்டிஷ் அழுத்தத்தின் கீழ், அவர் தனது திட்டங்களை மாற்றிக்கொண்டு ஜோத்பூரின் மகாராஜா தக்த் சிங்கின் மூத்த மகள் ரத்தோர்ஜி சந்த் கன்வர்ஜியை மணந்தார். பின்னர் அவர் மகாராஜா தக்த் சிங்கின் இரண்டு மகள்கள் மற்றும் ரேவாவின் மகாராஜா விஸ்வநாத் சிங்கின் மகள் ஜனக் கன்வர் உட்பட பல பெண்களை மணந்தார்.

List of Indian Kings With Most Number of Wives

மகாராஜா ஜகத்ஜித் சிங்(1872-1949)

கபுர்தலாவின் மகாராஜா ஜகத்ஜித் சிங்கிற்கு ஆறு மனைவிகள் இருந்தனர், அவர்களில் சீக்கிய நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு மகாராணி பிரேம் கவுர் என்று பெயர் மாற்றப்பட்ட அனிதா டெல்கடோ என்ற ஸ்பானிஷ் ஃபிளெமெங்கோ நடனக் கலைஞரும் ஒருவராவார்.

மார்வார் மன்னர்கள்

8 ஆம் நூற்றாண்டின் மார்வாரின் மன்னரான பப்பா ராவல் 140 பெண்களை மணந்ததாகக் கூறப்படுகிறது. மார்வாரின் ராஜா உதய் சிங் 27 மனைவிகளைக் கொண்டிருந்தார், மேலும் அவர் 52 குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மகாராஜா ரஞ்சித் சிங் (1780-1839)

சீக்கியப் பேரரசின் முதல் ஆட்சியாளரான மகாராஜா ரஞ்சித் சிங் 20 மனைவிகளைக் கொண்டிருந்தார். அவருக்கு 20 மனைவிகள் இருந்தனர், அவற்றில் 10 திருமணங்கள் பாரம்பரிய சடங்குகள் மூலம் செய்யப்பட்டன, இதில் ஐந்து சீக்கியர்கள், மூன்று இந்துக்கள் மற்றும் இரண்டு முஸ்லிம் பெண்கள் அடங்குவர். மேலும் 10 திருமணங்கள் சதர் விழா மூலம் நடந்தன, இதில் ஏழு சீக்கியர்களும் மூன்று இந்துப் பெண்களும் அடங்குவர். இது தவிர, அவரது அந்தப்புரத்தில் 23 பெண்கள் இருந்தனர்.

இந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவரும் மராத்திய ஆட்சியை நிறுவியருமான சத்ரபதி சிவாஜி எட்டு மனைவிகளைக் கொண்டிருந்தார்.

Story first published: Tuesday, September 30, 2025, 13:37 [IST]
Desktop Bottom Promotion