அப்பாவி மாதிரி உங்க பாஸ் செய்யும் இந்த விஷயங்களால நீங்க எவ்வளவு பாதிக்கப்படுவீங்க தெரியுமா?

நம்பிக்கையுடன் இருப்பது மற்றும் வெற்றியை அடைய ஊழியர்களை ஊக்குவிப்பது ஒரு விஷயம். ஆனால் எந்த வகையிலும் அவர்கள் தோல்வியடைய முடியாது, நமக்கு வேறு வழியே இல்லை என்று அவர்களிடம் சொல்வது மற்றொரு விஷயம்.

பெரும்பாலும் நாம் அனைவரும் ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஊழியராக, வேலை பணியாளராக மற்றும் அலுவலக மேலதிகாரியாக இருப்போம். அங்கு முதலாளி, ஆதவாது பாஸ், நமக்கு நல்லவராக அமைந்துவிட்டால், நம் வேலை செய்வது எளிதாக இருக்கும். அப்படி இல்லையெனில், நம்மால் வேலை செய்ய முடியாத அளவிற்கு நாம் துன்பங்களை அனுபவிப்போம். முதலாளிகள் தங்கள் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளும் விதம், சில சமயங்களில், குறிப்பாக அவர்கள் அதை உணராதபோது, பாதிப்பை ஏற்படுத்தலாம். சில நேரங்களில், அவர்கள் அப்பாவி என்று நினைக்கும் விஷயங்களைச் சொல்கிறார்கள்.

innocent-things-bosses-say-that-aren-t-really-innocent-in-tamil

ஆனால், அவை உண்மையில் கடினமானதாகவும் அவமதிப்பானதாகவும் இருக்கும். பெரும்பாலும், அவர்கள் சொல்வது தற்செயலானது இல்லை என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் அப்பாவிகள் இல்லை என்று முதலாளிகள் சொல்லும் சில விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணாலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான் சொல்வதை கேளுங்கள்

நான் சொல்வதை கேளுங்கள்

உங்கள் கருத்தையோ அல்லது உங்களுடன் பணிபுரியும் அலுவலக நபர்களின் கருத்துக்களையோ கேட்காமல், தங்கள் கட்டளையை மட்டும் முன்னிறுத்த முயலும் முதலாளிகளின் வகை உண்மையில் யாருக்கும் பிடிக்காது. ஒரு முதலாளி இந்த சொற்றொடரைக் கூறும்போது, ​​அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஆக்கப்பூர்வமாக இருக்க இடமளிக்கவில்லை. மாற்றத்திற்காக வேலை செய்யக்கூடிய சோதனை யோசனைகளைக் கொண்டு வருவார்கள். முதலாளி தாங்கள் நினைப்பதை மட்டுமே செய்ய முயற்சிக்கிறார். இது படைப்பாற்றலுக்கான எந்த அடிப்படையையும் அனுமதிக்காது.

நானே அதை செய்வேன்

நானே அதை செய்வேன்

இதன் பொருள் முதலாளி வெறுமனே பொறுமையற்றவர் என்று கூறும். இது அவர்களின் ஆளுமையில் மோசமாக பிரதிபலிக்கும். பணியாளருக்கு வேலையைச் செய்ய இயலாது அல்லது அதைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு புத்திசாலித்தனம் இல்லை என்பதை முதலாளி தெளிவாகக் குறிக்க முயற்சிப்பதால் இது மிகவும் புண்படுத்துவதாகத் தோன்றலாம். குறிப்பாக சவாலான பணி கையில் இருந்தால், மேலதிகாரிகள் பணியாளர்களிடம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.

நமக்கு வேறு வழியே இல்லை

நமக்கு வேறு வழியே இல்லை

நம்பிக்கையுடன் இருப்பது மற்றும் வெற்றியை அடைய ஊழியர்களை ஊக்குவிப்பது ஒரு விஷயம். ஆனால் எந்த வகையிலும் அவர்கள் தோல்வியடைய முடியாது, நமக்கு வேறு வழியே இல்லை என்று அவர்களிடம் சொல்வது மற்றொரு விஷயம். பிந்தையது மிகவும் பயமாக இருக்கும். ஏனெனில் பணியாளர்கள் அதிகமாக செயல்பட வேண்டிய அழுத்தத்தில் இருப்பார்கள். இது அவர்களுக்கு சுமையாக இருக்கும்.

உங்களால் சமாளிக்க முடியும்

உங்களால் சமாளிக்க முடியும்

"இந்த வேலையை நான் உங்களுக்கு தருகிறேன், ஏனென்றால் நீங்கள் அதை சமாளிக்க முடியும் என்று எனக்குத் தெரியும்" என்று கூறுவது, ஒரு பணியாளருக்கு ஊக்கமளிக்கும் ஒரு வடிவமாகவும் பார்க்கப்படலாம். ஆனால் ஒரு முதலாளி அந்த ஊழியருக்கு வேலையைத் தொடர்ந்து கொடுத்தால், அவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தை உணரும் அளவிற்கு, அது மிகவும் வேதனையாக இருக்கும். அனைத்து வேலைகளும் ஒரு பணியாளரின் கைகளில் இருக்கும்போது, அவர்கள் சோர்ந்துவிடுவார்கள். அவர்கள் தங்கள் பணி எல்லைகள் மதிக்கப்படும் வாய்ப்புகளைத் தேட முயற்சி செய்யலாம்.

மற்றவர்களுக்கு முன்னால் கூறுவது

மற்றவர்களுக்கு முன்னால் கூறுவது

'நீங்கள் எப்போது அந்த தவறைச் செய்தீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்..' என்று கடந்த காலத்தில் நடந்த தவறுக்காக ஒரு பணியாளரை விமர்ச்சிப்பது தவறானது. மற்ற சக ஊழியர்களுக்கு முன்னால் முதலாளி பணியாளரை பொதுவில் அழைத்தால் அது மோசமாக இருக்கும். மற்றவர்களுக்கு முன்னால் விமர்சிப்பது மனச்சோர்வை ஏற்படுத்தும் மற்றும் அவமரியாதைக்குரியதாக நினைப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion