Just In
- 7 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 17 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 1 hr ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Movies Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்கள் கைகளில் உள்ள குறியீடுகள் உணர்த்தும் வாழ்க்கை ரகசியம் என்ன?
கைரேகை ஆய்வுகளின் படி உங்கள் கைகளில் உள்ள ஐந்து குறியீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும். இந்த ஐந்து அறிகுறிகளில் ஏதெனும் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் அது உங்களுக்கு அதிர்ஷ்டம்தான்.
உங்களுக்கு கைரேகை மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கும், ஒரு ரேகைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். கையில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கு ஒரு நோக்கமும் அவசியமும் இருக்கும். இதில் சில குறியீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும்.
கைரேகை ஆய்வுகளின் படி உங்கள் கைகளில் உள்ள ஐந்து குறியீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும். இந்த ஐந்து அறிகுறிகளில் ஏதெனும் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் அது உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். இந்த ஒவ்வொரு குறியீடும் ஒருவரின் குணநலன் மற்றும் ஆளுமை பற்றி விளக்கும். மீன், கொடி, ஸ்வஸ்திக், தாமரை மற்றும் கோவில் போன்ற குறியீடுகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
மீன் குறியீடு
கையில் இருக்கும் மீன் குறியீடு மகிழ்ச்சிக்கான குறியீடாக அறியப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான ஒரு குறியீடாகும். ஒருவேளை இந்த குறியீடு ஒருவர் கையில் இருந்தால் அவர்களை சுற்றி மகிழ்ச்சியும், வெற்றியும் எப்பொழுதும் இருக்கும். மேலும் இந்த மீன் சின்னம் வெளிநாட்டு பயணம், தகுதி மற்றும் மகத்தான செல்வத்தை குறிக்கும். இந்த குறியீடு கையில் உள்ளவர்கள் பெருந்தன்மை மிக்கவர்களாகவும், தானம் அதிகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
கொடி குறியீடு
கொடி குறியீடு இருப்பதும் அதிர்ஷ்டத்தின் அறிகுறி ஆகும். இந்த குறியீடு ஒருவர் கைகளில் இருந்தால் அவர்கள் மிகவும் புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள். புகழ் இவர்களுக்கு எந்த வழியில் வேண்டுமானாலும் வரலாம், அவர்கள் எந்த கலைத்துறையில் பங்கேற்றாலும் உலக அளவில் புகழ் பெறுவார்கள். இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுவார்கள்.
ஸ்வஸ்திக் குறியீடு
தங்கள் கைகளில் ஸ்வஸ்திக் குறியீடு உள்ளவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களின் கடின உழைப்பும் , அர்ப்பணிப்பும் இவர்களை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்து செல்லும். அதேநேரம் ஸ்வஸ்திக் குறி விதி கோட்டின் மேல் இருந்தால் அவர்கள் அதீத திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
MOST READ: ஆண்கள் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் நீடித்து இருக்க இவற்றை சாப்பிட்டாலே
தாமரை குறியீடு
தாமரை என்பது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியுடன் தொடர்புடைய ஒன்று எனவே தங்கள் கைகளில் தாமரை குறியீடு உள்ளவர்கள் அளவற்ற செல்வத்தை பெறக்கூடியவர்கள். தாமரை குறியீட்டை கைகளில் பெற்றவர்கள் மனதளவில் தூய்மை ஆனவர்களாகவும், ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் ஆசி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்களாகவும், அதில் குருவாகவும் திகழ்வார்கள்.
கோவில் குறியீடு
கைகளில் கோவில் குறியீடு உள்ளவர்கள் தூய்மை ஆனவர்களாகவும், குரு ஸ்தானத்திலும், சீர்திருத்தவாதிகளாகவும், அறிவார்ந்த நபர்களாகவும் இருப்பார்கள். இந்த அடையாளம் பெரும்பாலும் வியாழன் மேட்டின் உச்சியில் காணப்படுவதோடு அரிய அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த அடையாளம் கைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாக இருப்பார்கள்.