Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கற்பழித்த கணவனுக்கு 9 ஆண்டு சிறை!
கணவன், மனைவியாக இருந்தாலுமே கூட, மனைவியின் சம்மதம் இன்றி உடலுறவு வைத்துக் கொண்டா அது கற்பழிப்பு தான் என உலகின் பல நாடுகள் சட்டம் வகுத்துள்ளன.
திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது இருவரும் உடன்பட்டு நடந்தால் அது கற்பழிப்பு அல்ல. திருமணம் ஆகி கணவன், மனைவியாக இருந்தாலுமே கூட, மனைவியின் சம்மதம் இன்றி உடலுறவு வைத்துக் கொண்டால்... அது கற்பழிப்பு தான் என உலகின் பல நாடுகள் சட்டம் வகுத்துள்ளன.
அதை மீறினால், அந்த கணவன்மார்களுக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் அளவிற்கு சட்டங்கள் வலுவாக இருக்கின்றன. இது போல பல கைது சம்பவங்கள் முன்னரே நடந்துள்ளன.
ஆனால், ஒன்பது ஆண்டுகள் வரையிலும் கூட சிறை தண்டனை கொடுக்கப்படலாம் என்பதற்கு சான்றாக இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது...

இங்கிலாந்து!
இங்கிலாந்து நியூகேஸ்ட்டில் எனும் பகுதியை சேந்த பெண்மணி தனது கணவன் தன்னை கற்பழித்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். அதுவும் அவருக்கே தெரியாமல் நடந்தது இந்த பாலியல் பலாத்காரம் என்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

10 ஆண்டுகளாக!
இந்த பாலியல் பலாத்காரம் ஏதோ ஓரிரு முறை நடந்தது இல்லை. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடமாக அந்த கணவர், அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதும் அந்த பெண்மணி அறியாத சூழலில்.

செல்போன் படம்!
தன் மனைவி மயக்க நிலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம், அவரை கற்பழித்து, அதை படமாக எடுத்து தனது மொபைலில் சேமித்து வைத்துள்ளார் அந்த கணவன். எதிர்பாராத தருணத்தில் இதை அந்த பெண்மணி கண்டறிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த மார்ச்...
கடந்த மார்ச் தான் இதை கண்டறிந்துள்ளார் அந்த பெண்மணி. எப்போதும் தனது மொபலை தன்னுடனே வைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்த அந்த கணவர், ஒரு நாள் அலுவலகம் செல்லும் போது அதை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டார்.
சாதாரணமாக அதை எடுத்துப் பார்த்த போது, அதில் தான் உறங்கிக் கொண்டிருக்கும் போது கணவர் தன்னை பலாத்காரம் செய்து அதை பதிவு செய்திருந்த வீடியோக்களை கண்டு அதிர்ந்தார் அந்த பெண்மணி.

புகார்!
அதன் பிறகு காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் அளித்தார் அந்த பெண்மணி. மேலும், அதை அலுவலகத்தில் இருந்த கணவனுக்கு போன் செய்தும் கூறியுள்ளார்.
இதன் வீரியத்தை உணர்ந்த அந்த கணவன், நேரடியாக காவல் நிலையம் சென்று சரணடைந்துவிட்டார்.

மது!
இரவில் மது அருந்திவிட்டு ஆழ்ந்து உறங்கும் பழக்கம் கொண்டுள்ள மனைவியின் பழக்கத்தை தனக்கு சாதகமாக அந்த கணவன் பயன்படுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது.
இதன் காரணத்தால் அந்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











