Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
17-ல் திருமணம், 22-ல் விவாகரத்து 25-ல்??? - நான் கடந்து வந்த பாதை #7
வாழ்வில் எத்தனை ஏற்றதாழ்வுகள் வந்தாலும், அதை கடந்து எப்படி வெற்றி அடைவது என்பதற்கான உதாரணமாக திகழ்கிறார் அனிதா பிரபா.
அனிதா பிரபா மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் கோட்மா பகுதியை சேர்ந்த பெண். இவரது வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கமளிக்கும், உத்வேகம் அளிக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

17-ல் திருமணம், 22-ல் விவாகரத்து 25-ல் டி.எஸ்.பி-யாக பதிவி ஏற்றுள்ளார் அனிதா....

92% தேர்ச்சி!
அனிதா பிறந்தது 1992-ல். படித்து எல்லாம் மத்திய பிரதேசத்தின் கோட்மாவின் அரசு பள்ளியில் தான். பத்தாம் வகுப்பில் 92% தேர்ச்சி பெற்றவர் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

17-ல் திருமணம்!
தொடர்ந்து படிக்க விரும்பினார் அனிதா. ஆனால், அவரது பாரம்பரியம், சடங்கு போன்ற தடைகள் திருமண வாழ்வில் தள்ளியது. தன்னைவிட பத்து வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார் அனிதா.

வாய்ப்புகள் இழந்தார்!
அனிதாவின் பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்ட போதிலும், நான்கு வருடத்தில் பட்டம் படித்து முடித்தார். கடைசி வருட பரிட்சைகள் கணவர் விபத்தில் சிக்கியதால் எழுத முடியாமல் போனது.
இதனால் வங்கியில் வேலை வாங்கும் கனவும் தகர்ந்தது அனிதாவிற்கு.

விடா முயற்சி!
தன் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிய வேண்டிய நிலையில் இருந்த அனிதா ஒப்பனை கலைஞராக வேலை செய்ய துவங்கினார் . கணவரால் மறுமுனையில் தொல்லைகளுக்கு ஆளானார் அனிதா.

எதுவும் இல்லை..
பிடித்த வேலை இல்லை, மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை, குடும்பமும் இல்லை... ஆனாலும் 2013-ல் வனத்துறை அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்றார். 14 கிலோமீட்டரை நான்கு மணி நேரத்தில் கடந்து டிசம்பர் 2013-ல் பாலாகாட் மாவட்டத்தில் பணியில் அமர்ந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர்!
தனது லட்சியங்களை உயர கொண்டு சென்ற அனிதா சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி, கடின பயிற்சிகளில் வெற்றி பெற்று தேர்வானார். இதன் இடையில் அனிதாவின் கருப்பையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து!
ஒருபக்கம் வேலையில் முன்னேற்றம் கண்ட அதே நேரத்தில் இல்லறத்தில் சோதனைகள் அதிகரித்துக் கொண்டிருந்தது. தனது 22 வயதில் விவாகரத்து பெற்றார் அனிதா பிரபா.
சற்றும் மனம்தளராத அனிதா மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பொது சேவை ஆணைக்குழு தேர்வு எழுதி முதல் அட்டம்ப்ட்டிலேயே தேர்ச்சி பெற்றார். பெண்கள் பிரிவில் 17-ம் இடம் பிடித்து, டி.எஸ்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.

உயரிய இலட்சியங்கள்!
இத்துடன் நின்றுவிடவில்லை அனிதா பிரபா. இப்போது கலெக்டர் பதவிக்கு தனது இலட்சியத்தைய உயர்த்தி அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார்அனிதா பிரபா. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்றார்.

சபாஷ்!
25 வயதில் ஒரு பெண் என்ன செய்து விட முடியும்? அனைத்தும் சாத்தியம் என செய்து காட்டியுள்ளார் அனிதா பிரபா.
அதிலும், இளம் வயதில் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிறகு. இவருக்கு சபாஷ் போடாவிட்டால், வேறு யாருக்கு சபாஷ் போடுவது!
சபாஷ் அனிதா பிரபா!



Click it and Unblock the Notifications
