Just In
- 22 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தாய் இறந்தது தெரியாமல், பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த 17 மாத குழந்தை - வீடியோ!
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நடந்த சோகமான காட்சி. தாய் இறந்தது தெரியாமல் பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை.
இதை விட சோகமான நிகழ்வு ஒரு குழந்தைக்கு நிகழுமா என்பது தெரியாது. இப்படி ஒரு சம்பவம் யார் வாழ்விலும் நடக்கவும் கூடாது. தனது தாய் இறந்தது கூட அறியாமல் பசியின் கடுமையால் ஒரு குழந்தை மாரில் வாய் வைத்து பால் குடிக்க முயற்சித்து வந்துள்ளது. அவ்வழி சென்ற ஒரு தம்பதி இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டாமொஹ் மாவட்டம்!
மத்திய பிரதேசத்தில் இருக்கும் டாமொஹ் எனும் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியர் இந்த காட்சியை கண்டுள்ளனர்.
Image Courtesy - DAILY MAIL UK
காட்சி!
தனது அம்மா இறந்து கிடப்பதை அறியாத 17 மாதமே ஆன பச்சிளம் குழந்தை தனது மாயின் மார்பில் வாய் வைத்து பால் குடிக்க முயற்சித்து கொண்டிருந்துள்ளது. பசியால் அந்த குழந்தை அழுதுக் கொண்டிருந்துள்ளது.
Image Courtesy - KTN News
அதிர்ச்சி!
இந்த காட்சியை கண்ட அவ்வழி சென்ற தம்பதி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்கள் அருகே இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.
Image Courtesy - Cover Asia News
டெய்லி மெயில் யு.கே பதிவு...
டெய்லி மெயில் யு.கே, செய்த பதிவில், அந்த ஜோடி, முதலில் அந்த பெண்ணின் உடலை கண்டதாகவும். பிறகு அருகே சென்று பார்த்த போது தான், பசியில் அழுதபடி இருந்த குழந்தை ஒன்று, இறந்த அந்த பெண்ணின் மாரில் பால் குடிக்க முயற்சித்து கொண்டிருந்ததை கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
Image Courtesy - Cover Asia News
போலீஸ்!
போலீஸ் அந்த பெண் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர். அந்த குழந்தை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளது.
வீடியோ!
குழந்தையின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை. அந்த பெண்ணின் குடும்பத்தை கண்டுபிடிக்கும் வரை குழந்தை பாதுகாப்பாக காப்பகத்தில் இருக்கும் என போலீஸ் தெரிவித்துள்ளது.