தாய் இறந்தது தெரியாமல், பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த 17 மாத குழந்தை - வீடியோ!

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நடந்த சோகமான காட்சி. தாய் இறந்தது தெரியாமல் பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை.

இதை விட சோகமான நிகழ்வு ஒரு குழந்தைக்கு நிகழுமா என்பது தெரியாது. இப்படி ஒரு சம்பவம் யார் வாழ்விலும் நடக்கவும் கூடாது. தனது தாய் இறந்தது கூட அறியாமல் பசியின் கடுமையால் ஒரு குழந்தை மாரில் வாய் வைத்து பால் குடிக்க முயற்சித்து வந்துள்ளது. அவ்வழி சென்ற ஒரு தம்பதி இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாமொஹ் மாவட்டம்!

டாமொஹ் மாவட்டம்!

மத்திய பிரதேசத்தில் இருக்கும் டாமொஹ் எனும் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியர் இந்த காட்சியை கண்டுள்ளனர்.

Image Courtesy - DAILY MAIL UK

காட்சி!

காட்சி!

தனது அம்மா இறந்து கிடப்பதை அறியாத 17 மாதமே ஆன பச்சிளம் குழந்தை தனது மாயின் மார்பில் வாய் வைத்து பால் குடிக்க முயற்சித்து கொண்டிருந்துள்ளது. பசியால் அந்த குழந்தை அழுதுக் கொண்டிருந்துள்ளது.

Image Courtesy - KTN News

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

இந்த காட்சியை கண்ட அவ்வழி சென்ற தம்பதி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்கள் அருகே இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

Image Courtesy - Cover Asia News

டெய்லி மெயில் யு.கே பதிவு...

டெய்லி மெயில் யு.கே பதிவு...

டெய்லி மெயில் யு.கே, செய்த பதிவில், அந்த ஜோடி, முதலில் அந்த பெண்ணின் உடலை கண்டதாகவும். பிறகு அருகே சென்று பார்த்த போது தான், பசியில் அழுதபடி இருந்த குழந்தை ஒன்று, இறந்த அந்த பெண்ணின் மாரில் பால் குடிக்க முயற்சித்து கொண்டிருந்ததை கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Image Courtesy - Cover Asia News

போலீஸ்!

போலீஸ்!

போலீஸ் அந்த பெண் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர். அந்த குழந்தை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளது.

வீடியோ!

குழந்தையின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை. அந்த பெண்ணின் குடும்பத்தை கண்டுபிடிக்கும் வரை குழந்தை பாதுகாப்பாக காப்பகத்தில் இருக்கும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion