Just In
- 15 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
பெண் கலைஞர் 6 மணிநேரம் பரிசோதனைக்காக அசையாமல் நின்றதினால் எதிர்கொண்ட அவலங்கள்!
செர்பியா பெண் கலைஞர் மெரினா அப்ராமோவிக் என்பவர் 6 மணிநேரம் பரிசோதனைக்காக அசையாமல் நின்றதினால் எதிர்கொண்ட அவலங்கள்.
மெரினா அப்ராமோவிக் ஒருமுறை சமூக பரிசோதனைக்காக அசையா நிலையில் பொது மக்கள் முன்னிலையில் ஆறு மணி நின்றார். அப்போது, ஒரு மேசை மீது 72 பொருட்கள் வைத்து, அதை பயன்படுத்தி, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என கூறினார்.
அந்த ஆறு மணிநேரத்தில் அவர் எதிர்கொண்ட இன்னல்கள், அவலங்கள் சொல்லிலடங்காதவை....
நிலை மாற்றம்!
முதலில் மக்கள் அவரது நிற்கும் நிலையை மாற்றினர்.
Image Courtesy
இழிவு!
பிறகு சிலர் அவரை அமர வைத்தனர். சௌகரியமாக உணர அல்ல, அவரை அவமானப்படுத்தி, இழிவுப்படுத்த.
Image Courtesy
குத்தினர்!
பிறகு சிலர் குண்டூசி கொண்டு, அவரது உடலில் சிலவவற்றை ஒட்டினர்.
Image Courtesy
பிளேடு!
ஒருவர் இதை எல்லாம் தாண்டி, பிளேடை எடுத்து அவரது கழுத்தில் அறுத்தார். அப்போதும் கூட மெரினா அப்ராமோவிக் சிறிதளவும் நகரவில்லை.
Image Courtesy
ஆடைகள் அவிழ்த்து...
எல்லாவற்றுக்கும் மேல் சிலர் மனிதத்தன்மையே இல்லாமல், அவரது ஆடையை அவிழ்த்து, அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர்.
Image Courtesy
ஆறு மணிநேரத்திற்கு பிறகு...
தனது ஆறு மணிநேர அசையா நிலை முடிந்த பிறகு. மெரினா அப்ராமோவிக் தன்னை தவறான முறையில் தீண்டியவர்களை முன் நடந்து சென்றார். ஒருவர் கூட மெரினா அப்ராமோவிக்வின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாமல் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றனர்.
Image Courtesy
வாய்ப்புகள் அமைந்தால்?
மெரினா அப்ராமோவிக் இதை ஒரு சமூக பரிசோதனைக்காக தான் செய்தார். அதில் தன்னை தானே உட்படுத்திக் கொண்டார். இதன் மூலம் வாய்ப்புகள் அமைந்தால் மனிதர்கள் எளிதாக அனைவரையும் பாதிப்படைய செய்வார்கள், துன்புறுத்துவார்கள், மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதை மெரினா அப்ராமோவிக் வெளிக்கொண்டுவந்தார்.
காணொளிப்பதிவு!
மேலும், படித்தவர், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இதற்கு இல்லை என்றும், வாய்ப்புகள் அமைந்தால் யார் வேண்டுமானாலும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.