Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் குப்பையில் சிசு - இன்னும் எத்தனை நாளுக்கு இந்த அவலம்!
குழந்தை என்பது வரம் என்பார்கள். அது கிடைக்க பெறாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இச்சையில் கலந்து கருத்தரித்து குப்பையில் சிசுவை எரியும் அவலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும்?
எங்கே செல்கிறோம், நீரை அழித்து, காற்றை அழித்து, காட்டை அழித்து, மனித இனத்தையும் அழித்து, நமக்கு வாழ்வளித்த இந்த உலகையும் அழித்து, அடுத்த செவ்வாய் கிரகத்தை அழிக்க பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். எதற்கு அங்கேயும் பிறந்து சில நிமிடமே ஆன சிசுக்களை குப்பை பைகளில் சுற்றி வீசவா?

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அவலம்? தமிழகம், இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்நிலை பரவி இருக்கிறது என்பது தான் உண்மை. சமீப சில நாட்களாக சென்ற சென்ற வருடம் அட்லாண்டாவில் தெருவில் தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் குப்பையில் வீசப்பட்ட குழந்தையின் காணொளிப்பதிவு மீண்டும் அதிகம் பரவிவருகிறது.
இக்குழந்தை இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறது. குழந்தை என்பது வரம் என்பார்கள். அது கிடைக்க பெறாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இன்றளவும் அங்கும் இங்குமாக ஆங்காங்க இந்த நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கிறது...

காதல் அழிந்துவிட்டது?
காதலுக்கு அழிவில்லை, காதலர்களுக்கு தான் அழிவு என்பார்கள். ஆனால், இன்றும் காதல் அதன் தூய தன்மையோடு விலங்குகள் மத்தியில் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மனிதர்கள் மனதில் தான் காதல் அழிந்துவிட்டது.

இச்சை போதவில்லையோ...?
உலகில் உள்ள அத்தனை உயிர் இனங்களும் காலநிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்கும் செய்ய அந்தந்த காலத்தின் போது மட்டுமே உறவில் ஈடுபடுகின்றன. மனிதர்களை தவிர. வேண்டும், வேண்டும் என்ற இச்சை வெறி தான் இதுப் போன்ற சம்பவங்களுக்கு கருவாக இருக்கின்றன.

பித்தனாகும் மனம்!
தனக்கென ஒரு துணை இருப்பினும், வேறு ஒருவர் தேவைப் படுகிறது. அடக்கிக் கொள்ள முடியவில்லையோ? ஆசை எனும் போர்வைக்குள் உறங்கும் அரக்கன் சுவைக் கண்டு விடுகிறான். இறைச்சி ஆவதோ ஒன்றும் அறியா சிறு உயிர்.

யோசிக்க மறக்கும் தருணங்கள்...
வேண்டாத உறவு, வேண்டாத கருத்தரிப்பு என்றால் அதை முதலிலேயே கலைத்துவிடலாமே, குப்பையில் வீசும் பாவத்திற்கு, இந்த பாவம் சிறிது தான். தகாத உறவில் ஈடுபட இல்லாத அச்சம், உங்களுக்காகவே விற்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி பயன்படுத்த வந்துவிடுகிறது. கருத்தடை வழிகளை பின்பற்றினால், அந்த சிசு வலி இல்லாமல் இருந்திருக்குமே?

என்று முடியும் இந்த அவலம்?
எப்போது முடிவுக்கு வரும் இந்த அவலம். கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் மனிதர்களாகிய நாம் திருந்த போவதில்லை. மனம் மாறினால் தான் இதற்கு ஒரே முடிவு. அப்பா - அம்மா இழந்து அனாதை ஆவதே கொடிய விஷயம். அப்பா - அம்மா யார் என்று அறியாமல் அனாதையாக வாழ்வது நரகம் போன்றது.
வரும் நாட்களிலாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டும்!



Click it and Unblock the Notifications











